கமல் பட திரை விமர்சனத்துக்கு “கதம் கதம்” :-)

66
கமல் பட திரை விமர்சனத்துக்கு "கதம் கதம்"

புதிதாகப் படிப்பவர்களுக்கு, நான் ஒரு ரஜினி ரசிகன் என்பதை கூறிக் கொள்கிறேன். Image Credit

எப்போதுமே நாம் ஒரு நிலையில் இருக்கும் போது அடுத்த நிலையில் இருப்பவர்களை நேர்மையாக விமர்சிக்க முடியாது. 

இதனால் தான் கமல் படங்களுக்கு நான் விமர்சனம் எழுதுவதில்லை, எழுதினால் தானே பிரச்சனை என்று.

நடுநிலை

உண்மையாக, நடுநிலை என்ற ஒன்றே இல்லை. எந்தக் கட்டுரையாக இருந்தாலும் அவர்களையும் அறியாமல் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு சார்பாக இருந்து விடும்.

எப்படி தான் நீங்கள் யோசித்து எழுதினாலும், யாருக்காவது அந்தக் கட்டுரையின் நேர்மையில் திருப்தி இருக்காது.

எனவே, நடுநிலை என்ற ஒன்றே கிடையாது என்பது தான் என்னுடைய தனிப்பட்ட கருத்து.

நடுநிலை என்ற போர்வையில் வேண்டும் என்றால் இருக்க முடியுமே தவிர, நான் நடுநிலையாக எழுதுவேன் என்று யாராலும் கூறவே முடியாது.

இதன் பிறகும் இனி விமர்சனம் எழுதக் கூடாது என்று இருந்தேன் ஆனால், வெளிப்படையாக எதுவும் கூறவில்லை.

விஸ்வரூபம் படத்தைப் பற்றிய சர்ச்சைகளால் பலரும் என்னை “விஸ்வரூபம்” படத்திற்கு விமர்சனம் எழுதக் கூறிக் கேட்டார்கள்.

எந்திரன் படத்திற்கு கூட இவ்வளவு பேர் கேட்கவில்லை. இதற்கு நான் ரஜினி ரசிகன் என்ற ஆப்போசிட் அட்ராக்ஸன் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

நிறை குறைகளைக் கூறி, படம் சரியாகப் புரியவில்லை மற்றும் சாதாரண மக்களுக்குப் புரிவது கஷ்டம் என்று விமர்சனம் எழுதி இருந்தேன்.

Read: விஸ்வரூபம்

ஆனால் சிலர், நான் ரஜினி ரசிகன் என்பதால் தான் படத்தை இது போல விமர்சித்து இருக்கிறேன் என்று கூறி இருந்தார்கள்.

எனக்குப் படம் சரியாகப் புரியவில்லை, இதை நான் எப்படி புரிந்தது என்று எழுதுவது?

கமலை பாராட்டும் போது சந்தோசப்படுபவர்கள், விமர்சித்தால் நான் ரஜினி ரசிகன் என்று சண்டைக்கு வருகிறார்கள். என்ன வாழ்க்கடா!! 🙂

இதில் கூறி இருந்த சில கருத்துகளுக்கு மட்டும் பதில் கூறுகிறேன்

இதில் மகேஷ் என்பவர் கூறி இருந்தது

you have just proven that you are biased when writing review for Kamal film . நானும் ரஜினி ரசிகன் தான். ஆனால் படங்களை நடு நிலையோடு பார்ப்பேன்

நடுநிலையோடு புரியாத படத்தைப் பார்ப்பது என்று யாராவது சொல்லிக் கொடுத்தால் நலம். எனக்குப் படத்தில் புரியாத காட்சிகள் ஏகப்பட்டது உள்ளது.

படம் பார்த்து என்ன தோன்றுகிறதோ / புரிகிறதோ அதைத் தான் எழுத முடியும் அதோடு, பொதுவாக என்ன கூறலாமோ அதைத் தான் கூற முடியும்.

ஒரு சில வேற்று மொழிப் படங்கள் மொழி புரியாது ஆனால், படத்தின் கதை புரியும் / ரசிக்க முடியும்.

Ee adutha kaalathu என்ற மலையாள படத்திற்கு, நமக்கு மலையாளம் தெரிந்து இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

மொழி புரியாவிட்டாலும் படம் பார்க்க அவ்வளவு அற்புதமாக இருக்கும். இந்தப்படத்தின் கதையும் த்ரில்லர் வகையைச் சார்ந்தது தான்.

Read: Ee adutha kaalathu 2012 (மலையாளம்)

“மயக்கம் என்ன” படம் எனக்கு ரொம்பப் பிடித்தது, இன்றும் கூட டிவியில் போட்டால் ரசித்துப் பார்ப்பேன். இதைச் சைக்கோ படம், பெண்களை அவமதிக்கும் படம் என்று பலர் கூறுகிறார்கள்.

இது ஒருவருடைய தனிப்பட்ட கண்ணோட்டம். எனக்குப் பெண்ணின் தைரியத்தை / விடாமுயற்சியை பெருமைப் படுத்தியது போலத் தோன்றுகிறது.

குறிப்பாகத் தனுஷ் நண்பன் தவறாக நடக்க முயலும் போதும், தனுஷ் க்கு கடைசி வரை உறுதுணையாக இருக்கும் போதும் ரிச்சாவின் நடிப்பு அசத்தலாக இருக்கும்.

இது அல்லாமல் தனுஷ் நடிப்பு, இயக்கம், இசை, ஒளிப்பதிவு என்று பல காரணங்கள்.

“மயக்கம் என்ன” விமர்சனம் எழுதி கடைசியாக…

இந்தப்படம் முழுக்க செல்வா ரசிகர்களுக்கானது மற்றும் மாற்றுப்படங்களை விரும்புவர்களுக்கானது.

எனவே, மசாலா வகைப்படங்கள், வழக்கமான சென்டிமென்ட், பன்ச் வசனங்கள், சந்தானம் டைப் காமெடி என்றெல்லாம் எதிர்பார்த்துச் சென்றால் உங்களுக்கு 100 % ஏமாற்றமே கிடைக்கும் சந்தேகமே வேண்டாம்.

மற்றபடி எனக்குப் படம் ரொம்பப் பிடித்தது உங்களுக்குப் பிடிக்குமா என்பது உங்களின் ரசனையைப் பொறுத்து.

ரசனைகள் பலவிதம் அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்.

இதையும் கூறி விட்டேன். இதற்கு மேல் நான் என்ன பண்ண முடியும். இன்றும் கூட கிரி! நீங்க சொன்னீங்க என்று “மயக்கம் என்ன” போய், டென்ஷன் ஆனது தான் மிச்சம் என்று நண்பர் ராஜேஷ் அடிக்கடி கிண்டலடித்துக்கொண்டு இருப்பார் 🙂 .

கடைசியில் தெளிவாகக் கூறிஉள்ளேன். இதன் பிறகும் படத்தின் கண்ணோட்டத்தை வேறு விதமாகக் கற்பனை செய்து அது ஏமாற்றம் அளித்தால் எப்படி பொறுப்பாக முடியும்.

என் கருத்துடன், பொதுவான கருத்தையும் கூறி இருக்கிறேன்.

Read: மயக்கம் என்ன

எனவே, நடுநிலையோட எழுத வேண்டும் என்று கூறினால், அது படிப்பவருக்கு பிடித்தது போல எழுதி இருக்க வேண்டும் என்பது தான், மறைமுக அர்த்தமாகும். இது எப்படி சாத்தியம்?

பிரபு SG என்பவர் பின் வருமாறு கூறி இருந்தார்

உங்கள்ளுக்கு சிவாஜி மாதிரி படங்கள் தான் சரி.

எந்திரன் போன்ற படத்தில் வரும் neural schema , silicon red chip ,destruction program , இது எல்லாம் பாமரன்னுக்கு புரியுது !!!!

இது உங்களிடம் இருந்து எதிர் பார்த்ததுதான் !!!

பிரபு நீங்கள் கூறுவது சரி, எனக்கு சிவாஜி மாதிரி படங்கள் தான் சரி. இது போன்ற படங்களைப் புரிந்து கொள்ள, நான் மேற்படிப்பு படிக்க வேண்டும் போல உள்ளது.

எனவே, தான் விமர்சனத்திலேயே எனக்கு “துப்பாக்கி” போன்ற நம்ம லெவல் படங்கள் தான் சரிபட்டு வரும் என்று கூறி இருந்தேன்.

எந்திரன் படத்து டெக்னிக்கல் விசயங்களைக் கூறி இருக்கிறீர்கள். நீங்கள் கூறுவது மிகச்சரி. இதன் காரணமாகத் தான் எந்திரன் படம் B C சென்டர்களில் “சந்திரமுகி” ஓடிய ஓட்டம் போல ஓடவில்லை.

டெக்னிக்கல் சமாச்சாரங்கள் இல்லாத சிவாஜிக்கு கூட இதே நிலை தான்.

எந்திரனின் பெரும்பான்மையான வசூல் தமிழக A சென்டர் மற்றும் வெளிநாடு, வெளிமாநில வசூல்.

நீங்கள் கூறிய டெக்னிக்கல் சமாச்சாரங்கள் எனக்கும் ஓரளவு தான் தெரியும் ஆனால், படத்தில் இது மட்டுமே இல்லை.

குறிப்பாக எந்திரன் படத்தில் அனைவரும் தமிழில் தான் பேசியதாக எனக்கு நினைவு.

மோகன் என்பவர் எழுதியது

ரொம்ப கேவலமான விமர்சனம். படம் புரியவில்லை என்றால் விமர்சனம் செய்யாதீர்கள். தயவு செய்து இனிமேல் கமல்ஹாசன் படத்துக்கு விமர்சனம் எழுதாதீர்கள்… அதுவே கமல்ஹாசனுக்கு நீங்கள் செய்யும் உதவி.

மோகன் உங்கள் அன்பான வேண்டுகோள் ஏற்கப்பட்டது. நான் கமலுக்கு உதவி செய்து விட்டேன் :-).

இனிமேல் கமல் படங்களுக்கு விமர்சனம் எழுதப்போவதில்லை. எழுதினால் தானே பிரச்சனை எழுதாமலே விட்டு விட்டால்…!

இது கமல் பட விமர்சனத்திற்கு மட்டும் தான். கமலிடம் கேள்விகள் கேட்பதையோ, கமல் ரஜினி பற்றிய சர்ச்சை என்றாலோ அதில் கண்டிப்பாக என் விமர்சனத்தை முன் வைப்பேன்.

இந்த முடிவை உணர்ச்சி வசப்பட்டெல்லாம் எடுக்கவில்லை.

எது எப்படியோ! ஆணியே புடுங்க வேண்டாம் என்கிற நல்ல எண்ணத்துடன் கமல் பட திரை விமர்சனத்திற்கு “கதம் கதம்” போடுகிறேன்.

இனிமேல், என் தளத்தில் கமல் பட திரை விமர்சனம் வராது என்று உறுதி கூறுகிறேன்.

கமல் படம் இல்லை என்றால் என்ன! விமர்சனம் எழுத எனக்குப் படமா இல்லை! த்ரிஷா இல்லைனா திவ்யா 🙂  .

ஏகப்பட்ட தமிழ், மலையாளப் படங்கள் வருகிறது, உலகப் படங்கள் இருக்கிறது அதை எழுதி விட்டுப் போகிறேன்.

திரைவிமர்சனம் சிறப்பாக, அசத்தலாக எழுதக்கூடிய திறமை இல்லை என்றாலும் ஓரளவு எழுதுவேன். என்னையும் நம்புவதற்கு கொஞ்சம் பேர் இருக்காங்க.

இனிமேல் நல்லா படம் புரிந்து பார்ப்பவர்களே விமர்சனம் எழுதுங்கப்பா!! எனக்குப் படம் பார்த்து ஏகப்பட்டது புரியல.

இன்னொரு நண்பர் கிட்ட, கமல் எப்படி அல்கொய்தால இருந்து வெளியே வருகிறார் என்பது உட்பட சில விளக்கங்கள் கேட்ட போது, அவர் கூறிய பதிலைக் கேட்டுத் தலை கிறுகிறுத்து விவேக் சீரியல் காமெடியில் மாதிரி ஆகிட்டேன் 🙂 .

Disclaimer: நான் ஏதாவது ஹாலிவுட் / உலகப் படத்திற்கு விமர்சனம் எழுதி, அது கமல் படம் போல இருந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.

ஒரு சின்ன விதி விலக்கு

ரொம்ப வருடமாக “மகாநதி” படத்தின் விமர்சனம் எழுத வேண்டும் என்பது விருப்பம் ஆனால், அதற்கான நேரம் அமையலை.

எந்த ஒரு விசயத்தையும் எனக்கு எழுதுவதற்கு அந்தப் பதிவுக்குண்டான மன நிலை இருக்கணும். அப்படி எழுதினால் தான் எனக்கு திருப்தி வரும்.

ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக நான் எதையும் எழுதுவதில்லை.

“மகாநதி” படமும் அதற்குண்டான மனநிலை வரும் போது எழுதுவேன்.

எழுதினால், ரொம்பப் பெரிதாக வரும் என்பதால் “விஸ்வரூபம்” மாதிரி இரண்டு பகுதியாக எழுதலாமா அல்லது “எந்திரன்” போல ஒரே பகுதியில் முடித்து விடலாமா என்று யோசிக்கிறேன்.

கமலின் அடுத்த படம் வருவதற்குள் எழுதி விடுவேன் என்று நினைக்கிறேன்.

எனவே நடுநிலையாக யோசித்து படம் பார்க்கும் ரஜினி ரசிகர்களும், உலக ஞானம் கொண்ட புத்திசாலியான கமல் ரசிகர்களும், இந்த ஒரு [பழைய பட] விமர்சனத்திற்கு மட்டும் என்னை மன்னித்து அருளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

“மகாநதி” என்னைப் போன்ற பொது அறிவும், உலக ஞானமும் குறைவானவனுக்கான படம் என்பதால், எனக்கு ரொம்ப நன்றாகப் புரிந்தது, ரசிக்கவும் முடிந்தது.

அதனால், விமர்சனம் நன்றாக எழுதுவேன் கவலை வேண்டாம்.

பிற்சேர்க்கைமகாநதி [1994] ஒரு ரஜினி ரசிகனின் விமர்சனம்

அடுத்த முறை கமல் படம் எடுக்கும் போது, படம் பார்ப்பவர்களுக்கான ஒரு கோச்சிங் சென்டர் ஆரம்பித்து, படத்தைப் பற்றிய செய்திகளை விளக்கி, அதன் பிறகு படத்தைத் திரையிட்டால் என்னைப் போன்றவர்களும் புரிந்து பார்ப்பார்கள்.

அமெரிக்கன் ஆங்கிலம் இருந்தால், அதற்கும் ஒரு கோர்ஸ் வேண்டும்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

66 COMMENTS

  1. ஹா ஹா ஹா. கில்லாடி நீங்க இப்படி எல்லாம் சொல்லப்படாது. உங்களுடைய சேவை எங்களுக்கு தேவை. வேணும்னா ரெண்டு மாளவிகா படம் அனுப்புறேன் 🙂

  2. கிரி ,

    கேவலம்மா எழுதணும் நு வந்துட்டு , எழுதம்மா போரிங்கள்ள a ..

    நீங்கள்ளும் ___________________(dash )

    பொழச்சு போ !!! (அன்பே சிவம் )

  3. கிரி,

    Why this decision. If we don’t like something, we have to say so & you have done that. Don’t stop writing your reviews for a Komali movie just bec some Tom, Dick & Harry wnats you to chnage your opinion according to their whims & fancies.

    இது என்னுடைய ஒபினியன்; இஷ்டம் இருந்தா எடுத்துக்கோ; இல்லைனா போய்கிட்டே இருன்னு சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன்.

    அருண்

  4. சரி விடுங்க கிரி, கமல் படத்துக்கு விமர்சனம் பன்னலீனா என்ன, மத்த படங்கள்தான் இருக்கே, நாம கிளிசெடுக்க.
    எப்போ “கடல்” மற்றும் “டேவிட்” படங்களுக்கு விமர்சனம் பண்ணபோரீங்க?

  5. எப்போதுமே நாம் ஒரு நிலையில் இருக்கும் போது அடுத்த நிலையில் இருப்பவர்களை நேர்மையாக விமர்சிக்க முடியாது

    ஆம் கிரி அப்படி விமர்சிக்கும் போது ஒரு சார்பாய் எழுதபட்டிருக்குமோ என்ற தோற்றம் வர தான் செய்யும்

  6. 🙂 🙂

    i wont argue with any one. I can understand that you were hurt by some persons comments. if any one criticize me in face book or in written, i will reply them with just a smiley. I wont argue with them….

    you too follow two S. Smiley and silence.

  7. ஆபாசமான கருத்துரைகளை இடாதீர்கள். இதை எனக்காக கூறவில்லை. அடுத்து படிக்க வருபவர்களுக்கு சங்கடத்தை உண்டாக்காதீர்கள். உங்கள் கருத்தை நாகரீகமான முறையில் தெரிவியுங்கள் அதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு.

    இதில் பின்னூட்ட மட்டுறத்தல் [Comment Moderation] கிடையாது.

  8. ஆபாச கருத்துகள் தொடர்வதால்.பின்னூட்டம் மட்டுறத்தப்படுகிறது. படிப்பவர்களுக்கு சங்கடத்தை தவிர்க்க.

  9. தட்ஸ்தமிழ் ஆக்கிடுவாங்க போல இருக்கே தல இந்த பசங்க கமெண்ட்ஸ் ல
    ரொம்ப நேர்மையான பார்வை இந்த பதிவு… ஆனா என்ன மாதிரி உங்க ரசிகர்களுக்கு வருத்தம் தான் நீங்க கமல் படம் எழுத மாட்டேன் நு சொன்னது
    உங்க எழுத்துக்கு restriction இல்லாம இருந்தா எங்களால இன்னும் ரசிக முடியும்
    இன்னுமே அவசரப்பட்டு அதை எழுத மாட்டேன் இதை எழுத மாட்டேன் சொல்லுறதுக்கு முன்னாடி பொது குழுவ கூட்டி உங்க ரசிகர்கள் (என்ன சொன்னேன்) கேட்டு அப்புறம் சொல்லுங்க தல

    – அருண்

  10. வணக்கம் கிரி அவர்களே,

    கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன்.இதுவரை யாரையும் புண்படுத்தியோ அல்லது தாழ்மைபடுத்தியோ நீங்கள் எழுதியதை நான் காணவில்லை.ஒரு சில பதிவுகளில் என் தரப்பில் மாற்றுக் கருத்து இருந்திருக்கிறதே தவிர ,மாற்ற வேண்டிய கருத்துகள் ஏதும் இல்லை என்றே தோன்றுகிறது.அப்படிதான் உங்கள் எழுத்தை கண்டிருக்கிறேன்.

    பொதுவாக கமல் ரசிகர்கள் தங்களை அறிவாளிகளாக அல்லது அண்டம் ,பிண்டம் அனைத்தும் அறிந்த விஞ்ஞானியாக காட்டிக் கொள்ள முயற்சிப்பவர்கள்.அப்படி முயற்சிப்பவர்கள்தாம் கமல் ரசிகராக காலப்போக்கில் மாற்றமடைகின்றனரோ என்னவோ?விதண்டாவாதம் என்ற சொல் பதம் கமல் ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருப்பது போல் தோன்றுகிறது.அறிவாளிகள் என்று சொல்லிக்கொண்டால் வாதம் செய்ய வேண்டுமல்லாவா

    !எல்லாவற்றிற்கும் விவாதம் அவசியமானது.விவாதத்தில் இப்படி இருக்கலாம் என்று வாதிடலாம்,இப்படிதான் என்று வாதிடுவது விதண்டாவாதத்தின் உச்சக்கட்டம்.அதைத்தான் கமல் ரசிகர்கள் இப்போது செய்துகொண்டிருக்கிறார்கள்.எல்லோரையும் திருப்திபடுத்துவது என்பது இயலாத காரியம்.அது எல்லோரும் அறிந்ததுதான்.இருந்தாலும் அடுத்தவர் தன்னை திருப்திபடுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர்.அது பொய்யாகவேனும் இருந்தாலும் சரி.ஆகவே அவருக்கு பிடிக்கவில்லை,இவருக்குப் பிடிக்கவில்லை என்று நம்மை நாம் மாற்றிக்கொள்ள நினைப்பது, அறிவாளிகளின் வாதத்தின் விளைவேயென்று கருதப்படும்.

    இது என் தனிப்பட்ட கருத்து.

    நன்றி.

  11. கிரி, ரஜினி ரசிகராய் இருப்பவர்கள் கமல் படத்தையும், கமல் ரசிகர் ரஜினி படத்தையும் நடு நிலையாய் விமர்சிப்பார்கள் என்று எதிர் பார்ப்பது அபத்தம். ஆதலால் அதற்க்கு விமர்சனம் என்று பெயரிடுவதை விட, இந்த படத்தில் எனக்கு பிடித்தது, பிடிக்காதது என்று எழுதிவிட்டு போகலாம். ஆனால் ரஜினி ரசிகராய் இருப்பதாலேயே அவர் படத்து அபத்தங்களை கேள்வி கேட்காமல் ஆஹா ஓஹோ என எழுதுவதும், கமல் படங்கள் என்றால் கேள்வி கேட்பதும் தான் நெருடுகிறது.

    இளவரசன், ஏதோ கமல் ரசிகர்கள் தங்களை அறிவாளிகளாக வெளிப்படுத்திக் கொள்வார்கள் என்பது போல் எழுதி இருந்தார். அப்படியானால் ரஜினி படத்து அபத்தங்களை எல்லாம் விசிலடித்து ஆரவாரம் செய்யும் ரஜினி ரசிகர்கள் தங்களை மடையன்களாக வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா என்ன? ரஜினி படத்தின் ஒரு உதாரண அபத்தம் (நிறைய இருக்கிறது): சிவாஜி படத்தில் கதை படி பார்த்தால் ரஜினி அமெரிக்காவில் 20 வருடங்கள் Software வேலை செய்தே 200 கோடி(???) சம்பாதித்து சேமித்து இந்தியாவில் முதலீடு செய்ய வருவார். அப்படி என்றால் ரஜினி குறைந்த பட்சம் (BE முடித்து) 22 வயதில் அமேரிக்கா சென்று இருக்க வேண்டும். திரும்பி வரும்போது 42 வயது ஆகி இருக்கும். 200 கோடி முதலீடு செய்து போராடிக்கொண்டு இருக்கும் 42 வயது நடுத்தர மனிதர் ஒரு 20+ வயது பெண்ணின் பின்னால் “பழகலாம் வாங்க” என்று ஜொள் விட்டுக்கொண்டு அலைவதையும், வறுமையான குடும்பத்தில் இருந்து அமெரிக்க போய், (அப்படி என்ன அப்பாடக்கர் வேலையோ) 20 வருடத்தில் 200 கோடி (சராசரியாக வருடத்திற்கு 10 கோடி!!!!) சம்பாதிக்க முடியும் என்று நம்பிக்கொண்டு, காதில் பூ வைத்துக் கொண்டு ரஜினி ரசிகர்கள் வேண்டுமானால் ரசிக்கலாம். நீங்களும் அதை சிலாகித்தோ அல்லது விஸ்வரூபம் படத்தில் புரியவில்லை என்று கேட்டது போல், சிவாஜி படத்தில் இது எப்படி என்று புரியவில்லை என்று கேள்வி கேட்காமலோ கூட விமர்சனம் செய்யலாம்.

    ஆகவே இனி நீங்கள் கமல் படம் மட்டுமல்ல, எந்த படமாய் இருந்தாலும் அதை விமர்சனம் என்று சொல்வதை விட ரஜினி ரசிகனின் பார்வையில் இந்த படம் என்று எழுதி அதில் உங்களுக்கு பிடித்ததை, பிடிக்காததை எழுதுங்கள். கீழே ஒரு பின் குறிப்பு போடலாம். இதில் கேட்கப்படும் கேள்விகள் ரஜினி படத்துக்கு பொருந்தாது என்று. ஒரு தனி வழி பதிவர் அப்படி தான் போட்டு இருந்தார். ரஜினி படத்தில் அபத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லையாம். ஏனென்றால் அது ரஜினி, அதனால் அவர் எது செய்தாலும் அது சரி. அது அவருக்கு மட்டுமே உள்ள சலுகை என்று. இளவரசன், அப்படி எழுதி இருந்த ரஜினி ரசிகர் அறிவாளியா இல்லை…..????

  12. ரஜினி ஒரு நடிகர் என்று அதுக்கு நீ விமர்சனம் வேறே. நீ என்ன பாப்பா வா எ போர் ஆப்பிள் என்று சொல்ல.. லூசா நீ..

    • லூசாடா நீ? நடிக்க தெரியாதவரையா, இத்தனை வருடங்களாக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் (அது உனக்கு தெரியவில்லையென்றால், உனக்கு வழக்கம் போல இருக்கிற கமல் சார் “அறிவாளி” என்கிற உலக அறிவில்லாத அறிவு)..

      குறிப்பு: எனக்கு கமல் அவர்கள் மேல் எந்த வெறுப்புமில்லெ, ஒரு நிஜ ரஜினி ரசிகனாக அவரையும் எனக்கு புடிக்கும்.. ஆனா அவருக்குன்னு இருக்கிற உன்ன மாதிரி லூசு பசங்கள தான் புடிக்க மாட்டேங்குது, ஜீரணிக்கவும் முடியல..

  13. எப்படியோ நார்மலா வந்தா அவ்வளவ்வா ஓடாத படத்த எப்படியோ ஓட வச்சிட்டானுங்க…

  14. Saranya வயித்தெரிச்சல் தானே?

    ‘எப்படியோ ஓடுதா’ இல்லை ‘எப்படி ஓடுது’ அப்படீன்னு தெரிஞ்சிக்க கீழ இருக்குற செய்தியை படிச்சிட்டு திரும்ப கடைக்கு போய் இன்னொரு பாட்டில் ஜெலுசில் வாங்குங்க.
    —————–
    விஸ்வரூபத்திற்கு தொடர்ந்து கூட்டம்… இங்கிலாந்தில் தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

    —————-
    ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற விஸ்வரூபம்!

    இதுவரை எந்த தமிழ்ப் படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு 10க்கு 9.5 புள்ளிகளைப் பெற்றுள்ளது விஸ்வரூபம். இந்தப் படத்துக்கு இதுவரை 12800க்கும் அதிகமான வாசகர்கள் வாக்களித்துள்ளனர். இதுவும் ஒரு புதிய சாதனைதான். ஒருவேளை இந்த எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டினால், உலக அளவில் புகழ்பெற்ற 250 படங்களின் பட்டியலில் கமல்ஹாஸனின் விஸ்வரூபமும் இடம்பெற வாய்ப்புள்ளது.

  15. @விஜய் 🙂

    @திண்டுக்கல் தனபாலன் நான் அதே நிலையில் இருக்கிறேனோ இல்லையோ நீங்க மாறிட்டீங்க போல.. 🙂

    @பிரபு அன்பே சிவம்

    @அருண் எனக்கே எழுத பிடிக்கல.. வேறு யாராவது படத்திற்கு கூறி இருந்தால் நிச்சயம் வேறு மாதிரி கூறி இருப்பேன். நமக்கென்ன எழுத படமா இல்லை அருண் 🙂

    @ராஜாகுமார் சரிங்ணா!

    @கௌரிஷங்கர் என் மேலே என்ன இவ்வளவு கோபம் 🙂 இரண்டு படமும் மொக்கையா இருக்காம். அலெக்ஸ் பாண்டியனுக்கு போய் ஏமாந்துட்டேன். இனி ஏமாற மாட்டேன் 🙂

    @சரவணன் ரைட்டு 🙂

    @ராஜேஷ் உங்களை தத்துவம் சொல்ல வைத்துட்டாங்களே அவ்வ்வ்வ்

    @அருண் உங்களின் அன்பிற்கு நன்றி.

    @இளவரசன் விதண்டாவாதம் என்பது கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைத்து ரசிகர்களுக்கும் பொருந்தும். ரசிகர்கள் என்பவர்கள் எங்கும் ஒன்று தான் சில விசயங்களில் மட்டுமே வேறுபாடு.

    @பாமரன் வாங்க பாமரன்! 🙂 எப்படி இருக்கீங்க. ரஜினி கமல் போஸ்ட் என்றால் மட்டும் தான் வறீங்க ..அப்பப்ப வாங்க..

    உங்கள் முதல் பாராவிற்கு என்னுடைய பதிவிலேயே பதில் கூறி விட்டேன்.

    இளவரசன் என் வழி போன்றோர் கருத்து அவர்களுடைய சொந்தக் கருத்து இதற்கு நான் விளக்கம் கூற முடியாது. என்கிட்டே நேரடியா கேளுங்க.. கண்டிப்பா பதில் சொல்றேன்.

    பாமரன், சிவாஜி படத்தையும் விஸ்வரூபம் படத்தையும் ஒப்பிடும் உங்களை என்ன கூறுவது. சிவாஜி படம் பக்கா கமர்சியல் படம்… விஸ்வரூபம் ஆங்கிலப் படத்திற்கு இணையாக அனைவராலும் கூறப்படும் படம். இதையும் அதையும் எப்படி ஒப்பிட முடியும்.

    சிவாஜி படத்துல 200 கோடி மட்டும் தான் கேள்வியா. மொத்த படமே கேள்வி தான் லாஜிக் பார்த்தால் 🙂 லாஜிக்கே இல்லாத படம். சிவாஜி படத்தை பொருத்தவரை நோ லாஜிக் ஒன்லி ரஜினி மேஜிக்.

    சிவாஜி படத்திற்கு எல்லாம் லாஜிக் இல்லை என்று திட்டி விமர்சனம் எழுதினால் நான் அவரை விமர்சனம் இனி எழுதாதீங்க என்று சொல்வேன் என்று எதிர்பார்க்காதீங்க 🙂 .சிவாஜி படத்தை கொத்துகறி போட்டதெல்லாம் உங்களுக்கு தெரியலன்னு நினைக்கிறேன். எந்திரன் படத்தையும் கூடத் தான் பலர் திட்டினார்கள்.. அதுக்கென்ன பண்ணுறது.. நான் போய் ஏன் இப்படி எழுதறேன்னு கேட்க முடியுமா!

    “இனி நீங்கள் கமல் படம் மட்டுமல்ல, எந்த படமாய் இருந்தாலும் அதை விமர்சனம் என்று சொல்வதை விட ரஜினி ரசிகனின் பார்வையில் இந்த படம் என்று எழுதி அதில் உங்களுக்கு பிடித்ததை, பிடிக்காததை எழுதுங்கள்”

    🙂 பாமரன் கமல் படத்திற்கு இது போல கூறினால் மட்டும் எதுவும் சொல்லாம விட்டு விடுவாங்களா… என்ன பேசுறீங்க. எப்படி எழுதினாலும் அதை விமர்சனம் என்று தான் அனைவரும் நினைப்பாங்க. அதுவுமில்லாம கமல் படத்துக்கு இப்படி எழுதுங்க என்று என்னை கூறலாம், மற்ற படங்களுக்கு அல்ல. அதை நான் என்றுமே நிறுத்த மாட்டேன்.

    பாருங்க.. வில்லியம் என்பவர் கூறி இருப்பதற்கு நான் ஏன் இவர் இப்படி கூறுகிறார் என்று உங்களிடம் கேட்க முடியுமா? ரஜினி நடிகர் இல்லாம.. குச்சி ஐஸ் விற்பவரா!

    தாராளமா நீங்க என்ன வேண்டும் என்றாலும் கேட்கலாம் அதற்கு பதில் தர தயாராக இருக்கிறேன் காரணம் எனக்கு ரஜினியை கண்மண் தெரியாமல் ஆதரிக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.

    @வில்லியம் ஆனா உங்கள் அளவிற்கு புத்திசாலி இல்லைன்னு நினைக்கிறேன் 🙂

    @சரண்யா 🙂

  16. வணக்கம் பாமரன் அவர்களே,

    உங்களுடைய கருத்து எனக்கு சரியாக விளங்கவில்லை அல்லது நான் இப்படி புரிந்து கொண்டுள்ளேன் என்று வைத்துக்கொள்ளலாம்.அதாவது ரஜினி ரசிகனென்றால் கமலஹாசன் திரைப்படங்களை ரசித்து பார்க்கலாம் ஆனால் விமர்சிக்கக்கூடாது அப்படித்தானே!என் மனதில் நெருடலாக தோன்றும் காட்சிகளை அல்லது புரியாத காட்சிகளை எப்படி வெளிப்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.உங்களின் திருப்திகளுக்காக எல்லாவற்றையும் ஆஹா,ஓகோ என்று கும்பலில் கோவிந்தா போடவேண்டுமா?பிடிக்காதவற்றை பிடிக்காதென்று சொல்வது என் கருத்து அல்லது விமர்சனம்.அது உங்களுக்காகவோ உங்கள் மேல் திணிக்கவோ வெளிப்படுத்தப் பட்டதல்லவே.அது என்னுடைய தனிப்பட்டக் கருத்து அதை புரிந்து கொள்ளாமல் ரஜினி ரசிகனென்றால் கமலின் எதிரிபோல் கண்டால் அதற்கு நான், அதாவது ரஜினி ரசிகன் பொறுப்பாக முடியாது.

  17. Giri Please accept my applogies for my comments about your Viswaroopam review .

    நான் உங்கள் பதிவுகளை சுமார் ஒன்றரை வருடங்களாக படிக்கிறேன். மிகவும் பிடிக்கும் என்பதால் எல்லா பதிவுகளையும் படிப்பேன். ஆனால் பொதுவாக கருத்துக்களை கூற மாட்டேன். ஒரு முறை adobe பற்றி நீங்கள் கூறிய தகவல்களுக்கு நன்றி கூறி இருந்தேன். விஸ்வரூபம் பற்றி இரண்டாம் முறையாக கருத்து கூறி இருந்தேன். உங்களை புண் படுத்துவதற்காக நான் கூறவில்லை. அப்படி இருந்தால் நீங்கள் கமல் பற்றி கூறிய பல பதிவுகளுக்கு நான் எதாவது சொல்லி இருக்க வேண்டும். உங்களின் பதிவுகள் மற்றும் நீங்கள் வளர்ந்து இந்த நிலைக்கு வந்த பாதையை பற்றி படிக்கும் பொது உங்களை என் சகோதரனாக கற்பனையில் பார்ப்பேன். i thought you may change your writing style when you write about Kamal . but i did not expect this decision and i am sorry that i am too responsible for this .

  18. இளவரசன், விமர்சனம் என வரும் போது அதிக அளவில் விமர்சிக்கப் படுவதும், விமர்சனம் என்ற பெயரில் நையாண்டி செய்யப் படுவதும், காயப்படுத்தப் படுவதும் கமல் தான். இது ஒன்றும் புதிது அல்ல. ஆனால் ரஜினி படங்கள் என்றால் கேள்வியே கேட்காமல் ஜல்லி அடித்து தள்ளுவதும், கமல் படங்கள் என்றால் நொட்டை நொள்ளை களை பற்றி மட்டுமே பெரிதாக ஊதிவிட்டு கமலை சிறுமை படுத்தும் போக்கு தான் பொதுவாக இருக்கிறது. கேட்டால் ரஜினி படத்தில் No Logic only Rajini Magic என்று justification வேறு. அதற்க்கு ரஜினி படத்திற்கு விமர்சனமே தேவை இல்லையே. அதனால் தான் விமர்சனம் என்றால் இருவருக்கும் ஒரே துலா கோலை பயன் படுத்த வேண்டும் என்கிறேன். ரஜினி படம் என்றால் வியாபாரத்தை மட்டுமே முன் வைத்து அந்த ஒரு விஷயத்தினாலேயே படம் சிறப்பானதாக போற்றப்படுகிறது. ஆனால் கமல் படங்கள் என்றால் அதில் இருக்கும் குறைகள் பெரிதாக Blow-up செய்யப்படுகின்றன.

  19. @இளவரசன் உங்கள் கருத்துக்களை வழிமொழிகிறேன் 🙂

    @மகேஷ் சகோதரன் மாதிரி என்று கூறி டச் பண்ணிட்டீங்க மகேஷ் டச் பண்ணிட்டீங்க 🙂

    உண்மையில் நீங்கள் யார் கூறியும் நான் கமல் பட விமர்சனம் எழுதுவதை நிறுத்தவில்லை எனக்கே திருப்தி இல்லாமல் இருந்தது அதனால் தான் எழுதவில்லை, அதைத் தான் இந்தக் கட்டுரையிலும் கூறி இருந்தேன்… எனக்கு திருப்தி தராத எதையும் நான் எழுதவது இல்லை. ரொம்ப நாளாக நினைத்தது இப்ப செயல் படுத்தி இருக்கிறேன். அதனால் எப்போதும் போல படிங்க உங்க கருத்தை எப்படி இருந்தாலும் கூறுங்க .. உண்மையில் எனக்கு பாராட்டி வரும் கமெண்ட் விட விமர்சித்து வந்தால் சந்தோசப்படுவேன். என்னை மாற்றிக்கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு. அதனால் எப்போதும் போல படிங்க. . மாற்றுக்கருத்து இருந்தால் கண்டிப்பாக கூறுங்க. No guilty feelings 🙂

    @பயபுள்ள 🙂

    @பாமரன்

    “இளவரசன், விமர்சனம் என வரும் போது அதிக அளவில் விமர்சிக்கப் படுவதும், விமர்சனம் என்ற பெயரில் நையாண்டி செய்யப் படுவதும், காயப்படுத்தப் படுவதும் கமல் தான். இது ஒன்றும் புதிது அல்ல”

    பாமரன் இதெல்லாம் ரொம்ப ஓவர் 🙂 கமல் மட்டுமே இது போல பாதிக்கப்படுவதாக கூறுவதெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. சிவாஜி படம் வந்த போது எத்தனை பேர் ரஜினியை திட்டி எழுதினார்கள் என்பது உங்களுக்கு நினைவில்லை ஆனால் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. விஜய் படம் வந்தால் யாரும் கிண்டல் அடிப்பதில்லையா.. பிரிச்சு மேஞ்சுடுவாங்க… அனைத்து நடிகர்களுக்கும் இது நடப்பது தான் கமலுக்கு மட்டுமல்ல.

    “ஆனால் ரஜினி படங்கள் என்றால் கேள்வியே கேட்காமல் ஜல்லி அடித்து தள்ளுவதும், கமல் படங்கள் என்றால் நொட்டை நொள்ளை களை பற்றி மட்டுமே பெரிதாக ஊதிவிட்டு கமலை சிறுமை படுத்தும் போக்கு தான் பொதுவாக இருக்கிறது. ”

    ஏன் இதை தற்போது விஸ்வரூபம் படத்திற்கு கமல் ரசிகர்கள் செய்வதில்லையா! படத்தில் ஒரு குறை கூட கூறாமல் பாராட்டி எழுதி தள்ளிட்டு இருக்காங்க… ரஜினி படம் வந்தாலும் மோசமாக கிழித்து எடுப்பாங்க. ஓரளவு தப்பித்த படம் எந்திரன் தான்.

    “கேட்டால் ரஜினி படத்தில் No Logic only Rajini Magic என்று justification வேறு. ”

    ரஜினி ஆஸ்கார் வாங்க நடிப்பதில்லை அதனால் அவருக்கு நடிப்பை / கதையை முன்னிறுத்தி யாரும் கேட்பதில்லை. ரஜினி படத்தை பொறுத்த வரை திரைக்கதை தான். ரஜினி தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாக என்றும் கூறவில்லை. எனவே என்ன சொல்றாங்களோ அதை வைத்து விமர்சனங்களும் வரும்.

    ரஜினி அரசியல் பற்றி பேசுவதால் அரசியல் பற்றி கூறினால் பாட்டு வாங்குகிறார்.. கமல் பேசுவதில்லை அதனால் இது குறித்து சர்ச்சையில் மாட்டுவதில்லை.. அவ்வளோ தான் மேட்டர்.

  20. Anna, why should you stop writing about Kamal movies?! Once people start recognizing us, as Rajni fans, they would always tend to see our views as biased ones, however neutral it may be. We can’t help that. Just put a disclaimer, “Kamal pada vimarsanam.. Oru Rajini Rasiganin Paarvayil..” 🙂 In fact, i would like to read it as a fellow Rajini fan and want to know your views. Be as neutral as you are and let the readers recognize your neutrality on their own. I always recognize your neutrality in all your Movie reviews. Like and appreciate them very much.

  21. பாமரன், commets-a படிக்கும்போது, இது கரெடுதானே என்று தோனுது. அதுக்கு கிரியோட reply comment படிக்கும்போது, அட இதுவும் கரெக்டுதான என்றும் தோணுது.
    எது எப்படியோ, எங்களுக்கு நல்லா பொழுது போகுது. blog-க விட comments-ச தான் அதிகம் படிக்கறேன் 🙂

  22. //ரஜினி தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாக என்றும் கூறவில்லை. //

    கமல் என்னைக்கு அப்படி சொல்லி இருக்காரு கிரி? மத்தவங்க தான் அவரை பார்த்து அப்படி சொல்றாங்க. யூகி சிவத்தோட, விஸ்வரூபம் திரைப்படம் பற்றிய ஒரு சந்திப்பில் பேசும் போது (விஜய் டி வியில்) கமல் சொன்னது, “உலக தரத்துக்கு எல்லாம் நாம இப்ப படம் எடுக்கறது கஷ்டம். ஏழை வீட்டு குழந்தையா இருந்தா கூட அதோட தாய், என் ராஜா, என் தங்கம், அப்படீன்னு கொஞ்சுற மாதிரி தான் நம்ம படங்கள் உலக தரத்துக்கு இணையா இருக்குன்னு பேசுறதெல்லாம்”.

    இந்த நேர்மை இங்க யாருக்கு இருக்கு?

    அதே மாதிரி தான் கமல் என்னைக்குமே ஆஸ்கார் விருது தான் என் லட்சியம்னு எல்லாம் சொன்னதே இல்லை. மத்தவங்க தான் அவரை வச்சு அந்த பில்ட்-அப் குடுக்கறதும், அப்புறம் அதையே வச்சு அவரை கேலி பேசுறதும்.

    இந்திய நண்டுகள் மனப்பான்மை. வேற என்ன சொல்ல?

  23. @மகேஷ் 🙂

    @கௌரிஷங்கர் இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பா உங்களுக்கு 😀

    @பாமரன்

    “அதே மாதிரி தான் கமல் என்னைக்குமே ஆஸ்கார் விருது தான் என் லட்சியம்னு எல்லாம் சொன்னதே இல்லை”

    அவ்வ்வ்வ் 🙂

  24. ” கமல் பட திரை விமர்சனத்திற்கு இனி “கதம் கதம்” ”
    இது கொஞ்ஜம் ஓவர். தலைப்பை மாற்றவும்.

    யாரோசொல்வதை கேட்டு ஒருத்த >> எதையோ கழுவாமல் போன கதை ஆகிவிடும்.

    குதிரை – அதன் மேல் சவாரி செய்த ஆள் கதை போல் ஆகி விடும்.
    கதை தெரியவில்லை என்றால் கேலுங்கள் அடுத்த பின்னுட்டத்தில் சொல்கிறேன்.

    உங்கள் எழுத்தை நான் ஆதரிக்கிறேன் அதுவே தவறு என்று பட்டால் நானே மறுமொழி தெரிவிப்பேன்.

    உங்கள் கருத்து சுதந்திரத்தை யாருக்காவும் விட்டுக்(பரி)கொடுக்கவேண்டம்.
    இப்பொழுது கமல் பட திரை விமர்சனத்திற்கு “கதம் கதம்” சொல்லவத்தவர் அடுத்து உங்கள் இடுக்கைகே(blog) “கதம் கதம்” சொல்ல வைத்து விடுவர்.

    அதிகம் கோபப்படுற(உணர்சிவசப்) ஆம்பலையும் ஆசைபடுற பொம்பலையும் …..
    இதற்கு மேல் உங்களுக்கு புரிந்திருக்கும்..

    அதுக்குன்னு பழமொழி(இடுக்கை கருத்தை) சொன்னால் ஆராய்சி பன்ன கூடாது அனுபவிக்கனும்னு சொன்னால் நாங்கள் எற்க மாட்டோம் அண்ணா….

  25. பொதுவாக நம்ம ரஜினி ரசிகர்கள் ஆறரை மணிக்குதான் டாஸ்மாக் போவார்கள். இந்த கலெக்‌ஷன் ரெக்கார்டை பார்த்தவர்கள் இப்போதே கிளம்பிவிடுவார்கள் 🙂

    1st wknd Chennai BO Collections

    Endhiran – Rs.2,02,38,075 (894 shows)

    Vishwaroopam – Rs.3,06,40,101 (891 Shows)

    என்னுடைய பின்னூட்டம் – இந்த வெற்றியை கமல் எதிர்ப்பு பதிவர்களான (ரஜினியின் அல்லக்கைகள்) ****, ****, கிரி ஆகியோருக்கு அர்ப்பணம் செய்யலாம்.

  26. பொதுவாக நம்ம ரஜினி ரசிகர்கள் ஆறரை மணிக்குதான் டாஸ்மாக் போவார்கள். இந்த கலெக்‌ஷன் ரெக்கார்டை பார்த்தவர்கள் இப்போதே கிளம்பிவிடுவார்கள் 🙂

    1st wknd Chennai BO Collections

    Endhiran – Rs.2,02,38,075 (894 shows)

    Vishwaroopam – Rs.3,06,40,101 (891 Shows)

    யுவகிருஷ்ணா

    என்னுடைய பின்னூட்டம் – இந்த வெற்றியை கமல் எதிர்ப்பு பதிவர்களான (ரஜினியின் அல்லக்கைகள்) ****, ****, கிரி ஆகியோருக்கு அர்ப்பணம் செய்யலாம்.

    • (ரஜினியின் அல்லக்கைகள்) ****, ****, கிரி —
      HARRIS DAVID பேர வச்சிகிட்டு ஹரச்ச்மென்ட் டா எழுதுரா.
      இது கொஞ்சம் ஓவர். நீ நிப்பாட்டலைனா நான் நிப்பாட்ட வைகவேண்டி இருக்கும். நான் யாருடைய ரசிகனும் அல்ல விரோதியும் அல்ல.

    • //1st wknd Chennai BO Collections

      Endhiran – Rs.2,02,38,075 (894 shows)

      Vishwaroopam – Rs.3,06,40,101 (891 Shows)//

      ரெண்டு படத்துக்கும் தியேட்டர் ஆகுபன்சி 99% தான்.
      அப்பறம் எப்டி இது சாத்தியம்…

      தென்னாடுடைய ராமானுஜரே போற்றி :த

  27. Harris David இது தேவை இல்லாதது என நினைக்கிறேன். எந்த ஒரு படத்தையும் எதனோடும் ஒப்பிட தேவை இல்லை. ஒப்பீடுகள் செய்யப்பட்டால் கமலின் மன்மதன் அம்பு போன்ற தோல்வி படங்களும் ஒப்பீடுகளுக்கு உள்ளாகும். அது தேவையா?

    கமல் இடம் தனித்துவமான இடம். அவரால் மட்டுமே அன்பே சிவமும் செய்ய முடியும், உ.போ. ஒருவனும் செய்யமுடியும், தசாவதாரமும் செய்ய முடியும், விஸ்வரூபமும் செய்ய முடியும். வெறும் வர்த்தக எல்லைகளுக்குள் மட்டும் அடங்கி விடுவதில்லை கமல் படங்கள். அதை கடந்து தர்கங்கள், சர்ச்சைகள், விவாதங்கள், தவறுகள், நியாயங்கள், புதுமைகள், வியப்புகள், என சர்வ விஷயங்களுக்கும் உட்படுத்தப்படுபவை. கமல் தவிர்த்து மற்ற எல்லா முன்னணி நடிகர்களின் படங்களும் வர்த்தக வரையறைகளை மட்டுமே சார்ந்து நிற்பவை. அதை தவிர அவர்களின் படங்களுக்கு வேறு Impacts எதுவும் இல்லை.

    ஆகவே சர்ச்சைகளை தவிர்ப்போமே!

    • சரியாச் சொன்னீன்கள். கமல் சமுதாயத்திற்கு முறனான கருத்துகலையும் சொல்கிறார் என்றாலும் அவர் புதுமைக்கும் தோலைநோக்கு சிந்தனைக்கு பெயர் போனவர் மாற்று சிந்தனையாலர். இன்று ஏற்று கொள்ள முடியாவிட்டாலும் எற்றுக்கொள்ளும் காலம் வரும்

  28. @அர்ஜுன் 🙂 யார் கூறியும் நான் எழுதுவதை நிறுத்தவில்லை. மேலே கூறியது தான் உங்களுக்கும்.

    நீங்க கூறிய குதிரை கதை தெரியும் ஆனால் அது கழுதை என்று நினைக்கிறேன். ஆளாளுக்கு ஒரு கதை சொல்லுவாங்க போல 🙂

    @சாலை சிவா 🙂

    @ஹாரிஸ் டேவிட்

    முதல் வார வசூலில் விஸ்வரூபம் வெற்றி பெற்றது உண்மை தான். அதை நான் மறுக்கவில்லை, மறுக்கவும் முடியாது. இதெல்லாம் முஸ்லிம் பிரச்சனையால் ஏமாந்து வந்தவங்க 🙂 நான்கு வாரம் கழித்து உலகளவில் வரும் வசூல் நிலவரம் பார்ப்போம் அப்புறம் பேசுவோம்.

    உங்கள் ஆறரை மணி விளக்கம்… இதற்கு பதில் கூறினால் சண்டை தான் வரும். ஒரு வாரம் சந்தோசமா இருங்க 🙂 .

    @பாமரன் 🙂

  29. கிரி வ்ரோடே::: Disclaimer: நான் ஏதாவது ஹாலிவுட் / உலகப் படத்திற்கு விமர்சனம் எழுதி, அது கமல் படம் போல இருந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல. “கிரி! நீங்க கமல் படத்தை ஆங்கிலப் பெயர் மாற்றி விமர்சிக்கறீங்க” என்று அதுக்கும் சண்டைக்கு வந்துடாதீங்க… ஒருவேளை, அது கமல் சுட்ட படமாகக் கூட இருக்கலாம். ஐம் பாவம் icon biggrin கமல் பட திரை விமர்சனத்திற்கு இனி கதம் கதம் : )

    இங்க வச்சீங்க பாருங்க பஞ்ச் 🙂 🙂

  30. கிரி,

    Komali film’s collections can’t be trusted at first glance because his fans are capable of making all sorts of bogus claims. If they have to be believed, then where is the Rs. 300 crore which VISHA ROOPAM is supposed to have collected from just 1 DTH player in the “DTH-first” initiative? So, one has to properly cross-check and then only we will know the truth if some Komali fans ferret out some collection figures.

    Komali stopped acting in front of camera long, long ago. Nowadays, he believes only in gimmickery like plaster of paris on his face, wantonly creating some debate about his movie (like a song in Manmadhan Sombu and the depiction of Muslims in Visha Roopam, etc.). Like his fans, he is unable to digest the world-wide popularity of Thalaivar and his movies even though, according to them, Thalaivar doesn’t have acting capabilities. That is what they are really pissed off coolly forgetting about the fact that Thalaivar movies are Total Entertainment to the entire family & thats the reason they click with viewers irrespective of the demography or geography or race or religion. In order to somehow make people to remember him, he is resorting to all these kinds of gimmickery and when someone reviews his movies & points it out, they can’t digest that too. It is understandable that they feel offended when their bluff is called by us. Komali first let him get Oscar Ravichandran to take another movie with him; then he can think of entering Oscar. Barry Osborne is going to learn the lesson of his life – whatever he might have earned thru LOTR, he is going to become a pauper now that he is caught under the net of Komali. All in all, good for Tamil cinema producers; one loss maker is gone.

    Arun

  31. கிரி,

    இது நல்ல முடிவு! நான் உங்கள் விமர்சனம் படிக்கவில்லை. ஆனால், விஸ்வரூபம் DTH விவகாரம் குறித்து என் மின்னஞ்சலுக்கு நீங்கள் எழுதிய பதில் உங்கள் ஒருதலைப்பட்சமான நிலையைக் காட்டியது.

    கருணாநிதி குடும்பத்தினரும், மாறன் சகோதரர்களும் எதற்காக சினிமா எடுத்தார்கள் என்று விவரம் அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும் – கறுப்பை வெளுப்பாக்க மட்டுமே! மற்ற எந்த தயாரிப்பாளருக்கும் இவர்களைப் போன்ற ”பணச்சுரங்கம்”
    இல்லை. எனவே, ”எந்திரன்” 200 கோடி வசூல் என்பது டவுட் தான்! ஏனெனில்,
    இன்னும் சன் டிவி தொடர்பான நிறைய குற்றச்சாட்டுகள்/கேஸ்கள் நிலுவையில்
    இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரை ”சிவாஜி” எந்திரனை விடவும் பரவாயில்லை, வசூலும் கட்டாயம் அதிகம்! எந்திரனில் கிளைமாக்ஸ் திருப்தி இல்லை! முக்கியமாக படம் பார்க்கும் போது அதன் லாஜிக் ஓட்டைகள் நமக்கு தோன்றாமல் இருந்தாலே படம் வெற்றி தான்! (உதாரணம் – ஷங்கர்).

    நான் கமல் ரசிகன் என்றாலும் பாட்ஷா, அருணாச்சலம், சிவாஜி போன்ற பல படங்களை கண்டு ரசித்திருக்கின்றேன். கமல் – ரஜினி ஒப்பீடே தேவையற்றது தான். “நாயகன்” படத்தைவிட “மனிதன்” அதிக வசூல் என்று முக்தா சீனிவாசன் சொன்னார். 25 ஆண்டுகள் கழித்து இன்னும் நாயகன் நினைவுகூறல்/தாக்கம் இருக்கின்றது. ரஜினியின் “படையப்பா”, “முத்து” போன்ற படங்களை என்னால் ரசிக்க முடியவில்லை. படையப்பாவில் அடுத்து வரும் சீரியசான வசனங்களுக்கு எனக்கு சிரிப்பு வந்தது. கூடவந்த
    நண்பன் தீவிர ரஜினி ரசிகன். என்னால் தியேட்டரில் உட்கார முடியவில்லை. இது
    அப்படியே ரிவர்சானது நானும், அவனும் ”வேட்டையாடு விளையாடு” போனபோது.
    அவனுக்கு ஒன்றும் புரியவில்லை, பேசிக் கொண்டேயிருந்தான். கமல் எல்லாவிதமான படங்களும் கொடுத்திருக்கின்றார், ரஜினி ஒரேவிதமான படங்கள் தான் – சில சமயங்களில் இதுவும் கஷ்டம் தான், அது எப்போதும் கஷ்டம்!

    லாஜிக் இல்லை என்பது சுந்தர் சி. எடுப்பது போன்ற காமெடி படத்திற்கு ஒத்துக்
    கொள்ளலாம் மற்ற படங்களுக்கு… சாரி! திரைப்படம் என்பதே மிகை தான்!
    காரெக்டர், திரைக்கதை மூலம் பார்வையாளர்கள் ஏற்பது வேறு! ரஜினி ரசிகர் என்னும்
    போதே உங்கள் Mindset கமல் படத்திற்காக ”வேறுமாதிரி” செட்டாகிவிடுகின்றது.
    இது தவிர்க்கமுடியாதது. இன்னும் ”பாபா”, “குசேலன்” வெற்றிப் படங்கள் என்று
    சொல்லும் ரஜினி ரசிகர்களை எனக்குத் தெரியும். இதிலும் ரஜினி பணத்தை திருப்பிக்
    கொடுத்தார் என்று புளகாங்கிதப்படுவார்கள் (ரஜினி நேரடியாக தியேட்டர் ஓனர்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்ட காரணங்கள் வேறு). அந்தப் படங்களில்
    ஏன் ரஜினி மேஜிக் வேலை செய்யவில்லை?

    எப்படி உங்கள் பார்வையில் திரை விமர்சனம் எழுத உங்களுக்கு உரிமை இருக்கின்றதோ அதே போல, பின்னூட்டம் எழுதுபவர்களுக்கும் அவர்கள் கருத்துக்களை சொல்ல உரிமை இருக்கின்றது. இது ஒரு கருத்துப் பரிமாற்றம், பொழுதுபோக்கு அவ்வளவே! கமல் சொன்னது போல் “இது சினிமா, ரொம்பச் சின்ன விஷயம்…” இதற்காக ரொம்ப உணர்ச்சிவசப்பட வேண்டாம்! 🙂

  32. @விக்னேஷ் 🙂

    @அருண் Barry Osborne என்ன ஆகப்போகிறாரோ தெரியவில்லை 🙂 PVP மாதிரி சொல்லாம இருந்தா சரி 🙂

    @ஸ்ரீதர் ஆஹா! ஆஹா! இது மாதிரி கேள்வி கேட்டா எனக்கும் பதில் கூற ஆர்வமா இருக்கும். அசிங்க அசிங்கமா கேட்டா என்ன பதில் சொல்றது. உங்களுக்கு பதில் அளிக்க ரொம்ப ஆர்வமா இருக்கிறேன், கூற ஏகப்பட்ட விஷயம் இருக்கு :-). தற்போது நேரமில்லை பின்னர் வருகிறேன்.

  33. Mr. Arun,

    I would say onething don’t degrade yourself by denying a person the least that he deserves – respect! that too to a talented, hardworking person like Kamal! You may like/hate him! that’s your
    personal.

    Reg. DTH I think you should read the write-up in “The Hindu” for which I wrote to Mr. Giri that exposed his one-sided version. Total DTH subscribers in India is 5 Crores of all brands 5% of it
    makes nearly 200 crores, but after tax, etc. Kamal may get 50 cr. in the price that he told for Hindi & Tamil versions.

    If “Endhiran” is a Blockbuster film then why SUN PICTURES stopped producing movies?

    //Like his fans, he is unable to digest the world-wide popularity of Thalaivar//

    I hope you would’ve read the recent news item that “Rajini is பிங் invited by a US State to be their guest?” These are all PR activities of media people. Even in many Hindi films Rajini is a comedy piece doing all the gimmicks. I think you should see those films. Kamal told Rajini to stop acting in Hindi films in unimportant side roles.

    //All in all, good for Tamil cinema producers; one loss maker is gone.//

    How come a லாஸ் maker work in an industry for 50 years in many languages?

    Mr. Giri, by saying that you’ve stopped reviewing Kamal’s பிளம்ஸ் you’ve accepted knowingly/unknowingly one thing that your ரெவிஎவ்ச் were one sided! 🙂

  34. //@அருண் Barry Osborne என்ன ஆகப்போகிறாரோ தெரியவில்லை PVP மாதிரி சொல்லாம இருந்தா சரி //

    இதிலேயே உங்கள் மனப்போக்கு தெரிகின்றது. ஒரு (அரசியல்வாதியல்லாத)
    மனிதருக்குரிய மரியாதையை அளிக்கத் தவறியவரைக் கண்டிக்கும் குறைந்தபட்ச கண்ணியம் கூட உங்களிடம் இல்லாதது வருத்தத்திற்குரியது. இங்கு உள்ள பதிவுகளைப் பார்த்தாலே உங்கள் தேர்வும் புரிகின்றது. அதனாலேயே இது நல்ல முடிவு என்று சொன்னேன். ரஜினி, கமலை திரைப்படத்திற்கு வெளிப்பட்ட வாழ்க்கை காரணமாகவும் எனக்குப் பிடிக்கும். இல்லை இது அத்தனையும் உங்கள் பிளாக்கிற்கான விளம்பர யுக்தியா? கமல் உணர்ச்சிவசப்பட்டதற்கு காரணம் இருக்கின்றது, நீங்கள் ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்பட வேண்டும்? :-).

  35. Mr. Sridhar,

    I don’t consider Komali to be a talented person and being an anti-Hindu fanatic that he is, I will never respect him. Over and above all this, he has also ‘shown-off’ his patriotism by threatening to fly out of the country like painter Hussain. I will be the last person on earth to respect such characters. If you want to respect such characters its your wish; but, please don’t thrust your opinion on others.

    Regardiing DTH, I only tried to bring up the claim of someone by name Nag Ravi who claims he is a film distributor (the same guy who said Sivaji is a loss in JV) who said Visha Roopam has already garnered Rs. 300 crore and that too from only 1 DTH operator. If that be the case, then there is no need for Komali to have acted before TV cameras and made all those oppaaris. After all, he had already made double his target money of Rs. 150 crore, right? Then where is the need for him to come down and start talking with theatre owners? So, what I am trying to say is, we don’t believe any Komali fans’ numbers because more often than not it will be wrong/bogus number. When a Komali fan can’t even believe a company like Sun TV which has filed as per its regulatory duties with SEBI the collection figures, how do you guys expect to believe a Komali fans’ exhuberant numbers?

    As far as Endhiran collections is concerned, it is a fact that Sun TV which is the company which has produced the movie has reported the collection figures to SEBI as per regulatiory requirements. If you think those audited figures are also fudged, then please make a formal complaint to SEBI so that they can do the investigations. In spite of this you still want to think the figures are not right, then you can’t believe the figures reported by Infosys also to the same SEBI. Choice is yours.

    Why Sun stopped producing movies after Endhiran? It is simple, dude. Within 6 months of Endhiran’s release, TN underwent Assembly elections and DMK Govt. was thrown out & all DMK people were getting arrested and also Sun TV’s then CEO Saxena was also arrested and beaten up by TN Police. That could be the reason, I think. In any case, I can understand why as a Komali fan you can’t digest Endhiran’s record collections. After all Endhiran was originally conceived by Shankar to have Komali as the protagonist but, alas, Komali doesn’t have the market to recover the investment. So, the project had to be dropped. So, you can continue to believe Endhiran has not collected so that you don’t get into ulcer.

    Loss maker means Komali will make others to lose money. How come he can survive for 50 years? 50 years is an imaginary number. Komali’s real number of years as Hero is almost same as that of Rajini or 1 or 2 years more; rest of the previous period he was either a baby actor or asst dance master or acting in small roles. Since he is in the habit of making his producers either a pauper (Dhaanu, Anbe Sivam producers, etc) or dead-body (TN Balu, Major Sundarrajan, Kaja Moideen), he is a loss-maker. He knows the knack of bringing in new producers – the latest victim-to-be is Barry Osborne.

    Arun

  36. // ரஜினி, கமலை திரைப்படத்திற்கு வெளிப்பட்ட வாழ்க்கை காரணமாகவும் எனக்குப் பிடிக்கும்//

    ரஜினியோட தனிப்பட்ட வாழ்க்கைய புடிக்கும்னு சொன்னீங்க சரி. கமலோட தனிப்பட்ட வாழ்க்கையும் புடிக்கும்னு ஒரு பஞ்ச் வெச்சீங்களே அங்கதான் நீங்க எங்கயோ போயிட்டீங்க தெய்வமே! பாத்து சார், உங்க வீட்ல உங்களோட இந்த இன்னொரு பக்கத்த தெரிஞ்சுகிட்டா அப்புரம் உங்கள ஒதுக்கி வெச்சுட போறாங்க.

    அருண்

  37. Mr. Arun,

    Your reply reveals more about YOURSELF, YOUR ATTITUDE than அபௌட் the matter in discussion – That too FIRST PARAGRAPH! The அங்கேர் reveals more. Try to control your misplaced anger.
    The enthusiasm in Mr. Giri’s replies too reveals the same.

    //someone by name Nag Ravi who claims he is a film distributor (the same guy who said “Sivaji” is a loss in JV)//

    You won’t believe that statement since it was told by Nag Ravi. 🙂

    I said DTH bookings as per article in “The Hindu.” First read that.

    When MK’s grandsons are acting & producing movies why ஷௌல்து only SUN TV stop producing movies? Only becz of Mr. ஸக்ஷென, who cheated(?) Kalanidhi Maran more than 1000 crores? 🙂

    Reg. SEBI & SUN TV, it seems you don’t know both well. Know company affairs & SEBI activities, etc. For your info, Dayanidhi Maran was central minister! 🙂

    Kamal’s successes are single-handed both in Dasavatharam (KSR) & Viswaroopam. Other players are little known.

    //Komali doesn’t have the market to recover the investment// 🙂

    I have only one question to you? Do you work hard to earn or ஜஸ்ட் fool around or make easy money? It is just a film for entertainment don’t lose your image for that! That too you can’t understand. I know you would’ve wrote/deleted obscene words about Kamal while typing. 🙂

    Your hatred towards Kamal is more of “personal” and that includes your personal life style, beliefs, etc. I don’t like talking about personal matter in public forums, as that may result in
    offending people not involved here, I have that much decency. I don’t want to degrade myself by stooping to that level.

    Remember LIFE is a VERY LONG journey, buddy! All the best!

  38. @sridhar

    //நான் கமல் ரசிகன் என்றாலும் பாட்ஷா, அருணாச்சலம், சிவாஜி போன்ற பல படங்களை கண்டு ரசித்திருக்கின்றேன். //

    நான் ரஜினி ரசிகன்… நான் பார்த்த கமல் படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்… மண் மதன் அன்பு உட்பட..

    //கமல் – ரஜினி ஒப்பீடே தேவையற்றது தான். “நாயகன்” படத்தைவிட “மனிதன்” அதிக வசூல் என்று முக்தா சீனிவாசன் சொன்னார். 25 ஆண்டுகள் கழித்து இன்னும் நாயகன் நினைவுகூறல்/தாக்கம் இருக்கின்றது.//
    மனிதன் ஒரு பக்கா மசாலா படம்… நாயகன் ஒரு நல்ல கிளாசிக் படம்… மனிதன் வசூல் அதிகம் என்று தானே அவர் சொன்னார்… மனிதன் நாயகனை விட சிறந்த படைப்பு என்ற அவர் சொன்னார் ??

    // ரஜினியின் “படையப்பா”, “முத்து” போன்ற படங்களை என்னால் ரசிக்க முடியவில்லை. படையப்பாவில் அடுத்து வரும் சீரியசான வசனங்களுக்கு எனக்கு சிரிப்பு வந்தது. கூடவந்த
    நண்பன் தீவிர ரஜினி ரசிகன். என்னால் தியேட்டரில் உட்கார முடியவில்லை. இது
    அப்படியே ரிவர்சானது நானும், அவனும் ”வேட்டையாடு விளையாடு” போனபோது.
    அவனுக்கு ஒன்றும் புரியவில்லை, பேசிக் கொண்டேயிருந்தான்.//

    ரஜினி படம் என்றால் உங்களுக்கு பிடிக்கவில்லை… அதே கமல் படம் என்றால் அவர்களுக்கு புரியவில்லை… இதுதான் கமல் ரசிகர்களுடன் எனக்கு பிடிக்காத ஒன்று 🙂 கமல் மற்றும் அவர் ரசிகர்கள் அறிவாளியாகவே இருங்கள்..அதற்காக ரஜினி பிடித்த அனைவரும் முட்டாள்கள் என்று நீங்கள் ( இந்த நீங்கள் , இதே கருத்துடைய கமல் ரசிகர்களுக்கு ) நினைத்தால்… உங்களை விட முட்டாள்கள் இருக்க முடியாது…

  39. @ஸ்ரீதர்
    // கமல் எல்லாவிதமான படங்களும் கொடுத்திருக்கின்றார், ரஜினி ஒரேவிதமான படங்கள் தான் – சில சமயங்களில் இதுவும் கஷ்டம் தான், அது எப்போதும் கஷ்டம்!//

    ரஜினி ஒரே விதமான படங்கள் தன் கொடுத்திருக்கிறார் என்று நீங்கள் கூறுவதை ஏற்க முடியாது… ரஜினி நடித்த எல்லா படங்களையும் பார்த்து விட்டு கூறுங்கள்.. ஏன் என்றால் நீங்கள் கமல் எல்லாவிதமான படங்களும் கொடுத்திருக்கிறார் என்று சொன்னதால் சொல்கிறேன் ..:)

    // லாஜிக் இல்லை என்பது சுந்தர் சி. எடுப்பது போன்ற காமெடி படத்திற்கு ஒத்துக்
    கொள்ளலாம் மற்ற படங்களுக்கு… சாரி! திரைப்படம் என்பதே மிகை தான்!
    காரெக்டர், திரைக்கதை மூலம் பார்வையாளர்கள் ஏற்பது வேறு! ரஜினி ரசிகர் என்னும்போதே உங்கள் Mindset கமல் படத்திற்காக ”வேறுமாதிரி” செட்டாகிவிடுகின்றது.இது தவிர்க்கமுடியாதது//

    நான் கமல் படம் பார்க்கும் போது ரஜினி ரசிகனாக வெல்லாம் பார்கவில்லை ,,,
    aaanaal கமல் பற்றி .. கமல் படங்கள் எங்களுக்கு உண்மையாக தோன்றியதை பற்றி எழுதும் போது தான் ரஜினி ரசிகனாக பார்க்க படுகிறேன்.. அதுவும் புகழ்ந்து எழுதும் போது கெடையாது இது தான் கிரி அவர்களின் இந்த பதிவுக்கு முக்கிய காரணம்…

    . // இன்னும் ”பாபா”, “குசேலன்” வெற்றிப் படங்கள் என்று
    சொல்லும் ரஜினி ரசிகர்களை எனக்குத் தெரியும். இதிலும் ரஜினி பணத்தை திருப்பிக்
    கொடுத்தார் என்று புளகாங்கிதப்படுவார்கள் (ரஜினி நேரடியாக தியேட்டர் ஓனர்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்ட காரணங்கள் வேறு). அந்தப் படங்களில்
    ஏன் ரஜினி மேஜிக் வேலை செய்யவில்லை? //

    பாபா வெற்றி படம் என்று யாரும் கூற வில்லை.. ஆனால் பாபா எதிர்பார்த்த வசூல் செய்யவில்லை என்பதால் நஷ்டம் என்று கூறினார்கள்.. குசேலன் சமயத்தில் அவர்கள்..உண்மையில் பாபா வால் எங்களுக்கு நஷ்டம் இல்லை..அதற்கே ரஜினி கொடுத்தார் என்றார்கள்.. எனக்கு மிகவும் பிடித்த படத்தில் பாபா கண்டிப்பாக உண்டு.. அருமையான படம்.. திரைக்கதையை இன்னும் சரியாக அமைத்திருந்தால் அட்டகாசமாய் ஓடியிருக்கும்..

    // எப்படி உங்கள் பார்வையில் திரை விமர்சனம் எழுத உங்களுக்கு உரிமை இருக்கின்றதோ அதே போல, பின்னூட்டம் எழுதுபவர்களுக்கும் அவர்கள் கருத்துக்களை சொல்ல உரிமை இருக்கின்றது. இது ஒரு கருத்துப் பரிமாற்றம், பொழுதுபோக்கு அவ்வளவே! கமல் சொன்னது போல் “இது சினிமா, ரொம்பச் சின்ன விஷயம்…” இதற்காக ரொம்ப உணர்ச்சிவசப்பட வேண்டாம்! //

    அவர் உணர்ச்சி வசப்பட்ட மாதிரி தெரில… அப்படி பட்டிருந்தால் மகாநதிக்கு விமர்சனம் எழுத போறேன்னு சொல்லிருக்க மாட்டாரு … பின்னூட்டம் என்ற பெயரில் கண்டதை எல்லாம் எழுதுவதால் இப்படி ஒரு பதிவு அவ்வளவு தான்..
    இது யு சான்றிதழ் தளம் .. 🙂 அந்த மாதிரி படங்கள் மட்டுமில்லை… பார்பவர்களும் வர வேண்டாம் என்று தான்…

    என்னடா இவன்…கிரி ரஜினி ரசிகன் என்பதால் நானும் ஆதரவ பேசறேன்னு இல்ல…நீங்க சொன்ன தனி வழியோ… இல்ல வேற வழியோ இந்த மாதிரி போட்டிருந்த நான் அங்க பொய் இப்படி ஆதரவா பேசியிருக்க மாட்டேன்..
    கிரி யின் பதிவை கடந்த நாலு வருடங்களாக பார்த்து வருகிறேன்.. எனக்கு தப்ப தெரில…

    – ரஜினி ரசிகன்…

  40. @கிரி :
    எனது முந்தைய கருத்துகளை படித்தேன்.. கீழ இருக்கற ரெண்டு வாக்கியத்தில் சிறி மாறுதல்கள் செய்தால் படிப்தற்கு நன்றாக இருக்கிறது… இத தான் வார்த்தை ஜாலம் என்று சொல்ஹிரார்களோ…
    //நான் கமல் படம் பார்க்கும் போது ரஜினி ரசிகனாக வெல்லாம் பார்கவில்லை//

    நான் கமல் படம் பார்க்கும் போது ரஜினி ரசிகனாக வெல்லாம் பார்கவில்லை / பார்க்கபடுவதில்லை …நும்

    //ரஜினி படம் என்றால் உங்களுக்கு பிடிக்கவில்லை… அதே கமல் படம் என்றால் அவர்களுக்கு புரியவில்லை… இதுதான் கமல் ரசிகர்களுடன் எனக்கு பிடிக்காத ஒன்று //

    ரஜினி படம் என்றால் உங்களுக்கு பிடிக்கவில்லை… அதே கமல் படம் என்றால் அவர்களுக்கு புரியவில்லை… இதுதான் கமல் ரசிகர்களுடன் எனக்கு பிடிக்காத/புரியாத ஒன்று 🙂

    நான் இன்னும் ப்ளாக் எழுதவே தொடங்கவில்லை … தங்களிடம் எந்திரன் படத்திலிருந்து தொடங்குவதை கூறியிருந்தேன்.. கோச்சடையான் மூலம் தொடங்க ஆண்டவன் அருள வேண்டும் 😀

  41. @ஸ்ரீதர்

    “இது நல்ல முடிவு! நான் உங்கள் விமர்சனம் படிக்கவில்லை.”

    என்னுடைய விமர்சனத்தை படிக்காமலே நல்ல முடிவு என்று கூறிய உங்களுக்கு நன்றி

    “ஆனால், விஸ்வரூபம் DTH விவகாரம் குறித்து என் மின்னஞ்சலுக்கு நீங்கள் எழுதிய பதில் உங்கள் ஒருதலைப்பட்சமான நிலையைக் காட்டியது.”

    ஸ்ரீதர் நான் எப்போதுமே ஒரு தவறு செய்து அது யாராவதால் சுட்டிக்காட்டப்பட்டால் அதை அவமானமாகவே தவறாகவோ நினைக்க மாட்டேன் காரணம், நம்முடைய தவறை திருத்திக் கொள்ள கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவே நினைப்பேன்.

    இதை எதற்கு தற்போது கூறுகிறேன் என்றால், எந்த ஒரு கருத்தையும் தனிப்பட்ட முறையில் கூறக் கூடாது என்பதை தான். நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் கூறியதை, நான் என்ன கூறினேன் என்று கூட இங்கே கூறாமல் மொட்டையாக நான் ஒரு தலை பட்சமாக கூறி இருக்கிறேன் என்று கூறி இருக்கிறீர்கள். இதை சரியான செயல் என்று கருதுகிறீர்களா?

    நான் கூறியது ஒரு தலைப்பட்சமா இல்லையா என்பதை ரஜினி கமல் ரசிகர்கள் முடிவு செய்யகூடாது அதை படிக்கும் பொது வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நான் பதில் கூறியது உங்களுக்கு மின்னஞ்சலில், அதனால் அதற்கான ஃப்ரூப் இருக்கிறது. இதே நான் உங்களிடம் தொலைபேசியில் பேசி அதை நீங்கள் ஒரு தலைபட்சம் என்று இங்கே கூறி இருந்தால் நான் எப்படி நிரூபிப்பது? படிப்பவர்கள் நான் என்ன கூறினேன் என்றே தெரியாமல் என்னை தவறாக நினைக்க மாட்டார்களா? இதை அருணிடமும் கூறி இருக்கிறீர்கள். அவருக்கு என்னைப் பற்றி தெரியும் அதனால் பிரச்சனை இல்லை.. புதிதாக படிப்பவர் என்றால் அவர் என்ன நினைப்பார்?

    உண்மையில் நான் உங்களிடம் என்ன கூறினேன் என்று கூட மறந்து விட்டேன். நீங்கள் ஒரு தலைப்பட்சம் என்று கூறியதால் நாம் தவறாக கூறி விட்டோமோ என்று சிறு அதிர்ச்சி ஆகி விட்டேன். திரும்ப சென்று பார்த்த பிறகு தான் புரிந்தது.. தற்போதும் இதுவே என்னுடைய கருத்தும் என்பதும்.

    இனி மின்னஞ்சலில் இது போல யாரும் கருத்துக் கேட்டால் இதை என் தளத்திலேயே கேளுங்கள் என்று கூறி விட போகிறேன். எனக்கு இது ஒரு நல்ல அனுபவம்.

    நீங்கள் DTH பற்றி என் கருத்தைக் கேட்டு அதற்கு நான் கூறிய பதிலை இங்கே எந்த வித எடிட்டும் செய்யாமல் தருகிறேன். இதை படிக்கும் மற்றவர்கள் முடிவு செய்யட்டும் இது ஒரு தலைபட்சமா அல்லது வேறு மாதிரியா என்று! உங்கள் பகுதி அவசியமில்லை என்று நினைக்கிறேன். வேண்டும் என்றால் அதையும் குறிப்பிடுகிறேன் அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் இருக்கும் நீங்களும் பதியலாம்.

    “ஸ்ரீதர் இது மிக்க நல்ல முயற்சி. இதில் சந்தேகமே இல்லை.

    ஆனால் 1000 ருபாய் கொடுத்து பார்க்க நம்மவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள். எனவே இது வெற்றிகரமாக வர வாய்ப்பில்லை. சில ஆயிரங்கள் மட்டுமே முன்பதிவு செய்து இருக்கிறார்கள் பல லட்சம் பேர் DTH ல் இருந்தும். அதனால் தான் கமல் வேறு வழி இல்லாமல் திரையரங்கு உரிமையாளர்களிடம் சரணடைய வேண்டியதாகி விட்டது.

    மற்றபடி திரையரங்கு கொள்ளையர்களை அடக்க இது சிறந்த வழி என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. குறிப்பாக திரையரங்கு கிடைக்காமல் இருப்பவர்கள இதில் வெளியிடலாம்.. ஆனால் சப்ஸ்க்ரைப் பண்ண ஆள் இருக்க மாட்டார்கள்.. இது தான் பிரச்சனை.

    நீங்கள் இதை கமெண்ட் லையே கூறி இருக்கலாம்.. இன்னும் சிலர் தங்களுடைய கருத்தை பகிர்ந்து இருப்பார்கள்.

    நன்றி.”

    இதுவே நான் கூறியது. இதை படிப்பவர்கள் முடிவு செய்யட்டும் இது ஒரு தலைபட்சமா அல்லது பலதலை பட்சமா என்று.

  42. @ஸ்ரீதர்

    “எனவே, ”எந்திரன்” 200 கோடி வசூல் என்பது டவுட் தான்! ஏனெனில், இன்னும் சன் டிவி தொடர்பான நிறைய குற்றச்சாட்டுகள்/கேஸ்கள் நிலுவையில் இருக்கின்றது. ”

    எந்திரன் 200 கோடி அல்ல அதை விட அதிகம். இதை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் உங்கள் தனிப்பட்ட விஷயம்.

    “என்னைப் பொறுத்தவரை ”சிவாஜி” எந்திரனை விடவும் பரவாயில்லை, வசூலும் கட்டாயம் அதிகம்!”

    🙂 ஓகே

    “நான் கமல் ரசிகன் என்றாலும் பாட்ஷா, அருணாச்சலம், சிவாஜி போன்ற பல படங்களை கண்டு ரசித்திருக்கின்றேன்.”

    நல்லது. இதெல்லாம் தேவையில்லை என்று நினைக்கிறேன். இதெல்லாம் வழக்கமா இரு ரசிகர்களும் கூறுவது தான்.

    ““நாயகன்” படத்தைவிட “மனிதன்” அதிக வசூல் என்று முக்தா சீனிவாசன் சொன்னார். 25 ஆண்டுகள் கழித்து இன்னும் நாயகன் நினைவுகூறல்/தாக்கம் இருக்கின்றது. ”

    இதற்கு ஸ்ரீநிவாஸ் பதில் கூறி விட்டார்.

    “ரஜினியின் “படையப்பா”, “முத்து” போன்ற படங்களை என்னால் ரசிக்க முடியவில்லை. படையப்பாவில் அடுத்து வரும் சீரியசான வசனங்களுக்கு எனக்கு சிரிப்பு வந்தது. ”

    அது உங்கள் ரசனை. அதில் என்னால் குறை காண முடியாது. உங்களை ரசித்து ஆக வேண்டும் என்று யாரும் வற்புறுத்தவும் இல்லை.

    “என்னால் தியேட்டரில் உட்கார முடியவில்லை.”

    இதை நாங்கள் கூறினால் ஒருதலைபட்சம்! 🙂 அதோடு உட்கார முடியவில்லை என்று நீங்கள் கருதியவுடன் வெளியில் எழுந்து வந்து இருக்கலாம். கஷ்டப்பட்டு உங்களை பார்த்து ஆக வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தி இருக்க மாட்டார்கள்.

    “கமல் எல்லாவிதமான படங்களும் கொடுத்திருக்கின்றார், ரஜினி ஒரேவிதமான படங்கள் தான்”

    இதற்கும் ஸ்ரீநிவாஸ் பதிலே என் பதில்.

    “ரஜினி ரசிகர் என்னும் போதே உங்கள் Mindset கமல் படத்திற்காக ”வேறுமாதிரி” செட்டாகிவிடுகின்றது.”

    அதாவது ரஜினி படம் பார்க்கும் கமல் ரசிகர்களுக்கு ”வேறுமாதிரி” செட் ஆவது போல 🙂

    “இன்னும் ”பாபா”, “குசேலன்” வெற்றிப் படங்கள் என்று சொல்லும் ரஜினி ரசிகர்களை எனக்குத் தெரியும்.”

    இன்னும் “மும்பை எக்ஸ்பிரஸ்”, “மன்மதன் அம்பு” போன்ற படங்கள் வெற்றிப் படங்கள் என்று கூறும் கமல் ரசிகர்களை எனக்குத் தெரியும்.

    “அந்தப் படங்களில் ஏன் ரஜினி மேஜிக் வேலை செய்யவில்லை?”

    ரஜினி படமல்ல எவர் நடித்தாலும் கதையும் திரைக்கதையும் இருந்தால் தான் ஓடும். இதை குசேலன் படத்தில் ரஜினியே கூறி விட்டார்.

    “எப்படி உங்கள் பார்வையில் திரை விமர்சனம் எழுத உங்களுக்கு உரிமை இருக்கின்றதோ அதே போல, பின்னூட்டம் எழுதுபவர்களுக்கும் அவர்கள் கருத்துக்களை சொல்ல உரிமை இருக்கின்றது. இது ஒரு கருத்துப் பரிமாற்றம், பொழுதுபோக்கு அவ்வளவே! ”

    தாராளமாக! அதனால் தான் என்னுடைய தளத்திற்கு கமெண்ட் மாடரேசன் கூட வைக்காமல் இருந்தேன் அதை வைக்க வைத்தது உங்கள் கமல் ரசிகர்கள் தான்.

    கருத்துப் பரிமாற்றம் பொழுதுபோக்காக இருக்கலாம் ஆனால் ஆபாச அர்ச்சனைகளை வாங்குவது எனக்கு பொழுது போக்கல்ல. அதுவுமில்லாமல் என்னுடைய தளத்தை படிப்பவர்கள் ஆபாச வார்த்தைகளை படிக்க நேர்ந்து சங்கடத்திற்கு உள்ளாவதை விரும்பவில்லை. நான் யாருடைய கருத்தையும் இங்கே தடை செய்ய வில்லை. யார் வேண்டும் என்றாலும் கூறலாம். நான் யாரையும் உங்கள் கருத்தைக் கூற கூடாது என்று கூறவில்லை.

    “கமல் சொன்னது போல் “இது சினிமா, ரொம்பச் சின்ன விஷயம்…” இதற்காக ரொம்ப உணர்ச்சிவசப்பட வேண்டாம்! ”

    நான் உணர்ச்சிவசப் படுகிறேனா!! நான் எழுதியதைப் பார்த்தால் அப்படியா இருக்கிறது. 🙂

    “இதிலேயே உங்கள் மனப்போக்கு தெரிகின்றது. ஒரு (அரசியல்வாதியல்லாத) மனிதருக்குரிய மரியாதையை அளிக்கத் தவறியவரைக் கண்டிக்கும் குறைந்தபட்ச கண்ணியம் கூட உங்களிடம் இல்லாதது வருத்தத்திற்குரியது.”

    என்னுடைய கண்ணியத்தைப் பற்றிய உங்கள் சான்றிதல் எனக்கு அவசியமில்லை. என்னையும் நம்பி படிக்க கொஞ்சம் பேர் இருக்கிறார்கள் அது போதும்.

    இதே மேலே என்னை ரஜினியின் அல்லக்கை என்று ஒருவர் கூறி இருக்கிறார். இதற்கு நான் அவரை திருப்பி அதே போல கூற எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்!

    உலகிலேயே கடவுளை விட அதிகம் மதிக்கும் என்னுடைய அம்மாவையே ஆபாசமாக திட்டி கமல் ரசிகர்கள் கமெண்ட் போட்டார்கள். இதற்காக நானும் அதே போல இறங்கி சண்டை போடக் கூடாது என்ற கண்ணியம் எனக்குப் தெரியும். எனவே என்னுடைய கண்ணியம் பற்றிய உங்கள் சான்றிதல் எனக்கு அவசியமில்லை.

    “இங்கு உள்ள பதிவுகளைப் பார்த்தாலே உங்கள் தேர்வும் புரிகின்றது. அதனாலேயே இது நல்ல முடிவு என்று சொன்னேன்”

    நல்லது. இதையே தான் நானும் கூறி இருக்கிறேன்.

    “இல்லை இது அத்தனையும் உங்கள் பிளாக்கிற்கான விளம்பர யுக்தியா? ”

    நான் விளம்பரத்திற்காக எழுதுவதில்லை ஸ்ரீதர். அது எனக்கு அவசியமும் அல்ல. போலி விளம்பரத்தால் என்னுடைய தளத்தை நடத்த வேண்டிய எந்த அவசியமும் எனக்கில்லை. என்னை நம்பி படிக்க கொஞ்சம் பேர் இருக்கிறார்கள் அவர்கள் எனக்குப் போதும். இது போல எழுதி என்னுடைய தளத்தை பிரபல படுத்த வேண்டிய மோசமான நிலையில் நான் இல்லை.

    “கமல் உணர்ச்சிவசப்பட்டதற்கு காரணம் இருக்கின்றது, நீங்கள் ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்பட வேண்டும்?”

    எனக்கு துவக்கத்தில் இருந்தே புரியாத விஷயம் ஒன்று தான், எதற்கு உணர்ச்சிவசப் படாதீர்கள் என்று கூறி கொண்டு இருகிறீர்கள் என்பது தான். விஸ்வரூபம் படம் போல எனக்கு இதுவும் புரியவில்லை. அதே போல உலகில் கமலுக்கு மட்டுமே உணர்ச்சிவசப் பட உரிமை / காரணம் இருப்பதாக நினைத்துக்கொள்ளாதீர்கள்.

    அப்படியே உணர்ச்சிவசப்பட்டாலும் கமல் போல கிளிப் பிள்ளை மாதிரி நான் வேறு நாட்டுக்கு / மாநிலத்திற்கு போய் விடுவேன் என்று கூறிக்கொண்டு இருக்க மாட்டார்கள் 🙂

  43. @ஸ்ரீநிவாஸ்

    “அவர் உணர்ச்சி வசப்பட்ட மாதிரி தெரில… அப்படி பட்டிருந்தால் மகாநதிக்கு விமர்சனம் எழுத போறேன்னு சொல்லிருக்க மாட்டாரு … பின்னூட்டம் என்ற பெயரில் கண்டதை எல்லாம் எழுதுவதால் இப்படி ஒரு பதிவு அவ்வளவு தான்.. இது யு சான்றிதழ் தளம் ”

    🙂 நன்றி ஸ்ரீநிவாஸ்

    “நான் இன்னும் ப்ளாக் எழுதவே தொடங்கவில்லை … தங்களிடம் எந்திரன் படத்திலிருந்து தொடங்குவதை கூறியிருந்தேன்.. கோச்சடையான் மூலம் தொடங்க ஆண்டவன் அருள வேண்டும்”

    வாங்க வாங்க 🙂

  44. M அருணாசலம்
    அதென்ன கோமாளி இப்படித்தான் ரஜினி ரசிகர் மனதில் கமல் இருக்கிறாரா.
    இது கொஞ்சம் ஓவர். யார்கோமாளி என்பதை உலகம் அறியும்
    அருண் உங்கள் பின்னுட்டத்தை நிருத்தவில்லை என்ரால் நான் நிறுத்த வேண்டி வரும்.

    முதலில் நீங்கள் கோமாளியா இல்லையா என்பதை யோசித்து பாருங்கள்.

    எனக்கு கிரிகெட் பிடிக்காது 11 ரு கோமாளி ஆடுரதை 11,000 கோமாளி பாக்குறானுங்கன்னு சொல்லுவோம் இதுபோல கோமாளி எழுதுவதை கோமாளி படிக்கின்றனர் என்று சொன்னால் நீங்கள் எற்று கொள்வீர்களா.

    பின்னூட்டம் இடுவதர்க்கு முன்னூட்டமாக உங்கள் நீங்களே சரிபார்த்துக்கொள்ளவும்.

    கிரி நீங்களும் இதற்க்கு சப்போட்டா.
    ரஜினியை பற்றி எழுதும் போது இப்படி துள்ளி நீர்கள் இப்போது கமல் பற்றி கேவலமாக எழுதியதர்க்கு ஒன்றுமே கூரவில்லை

  45. @அருண் அர்ஜுன் கூறுவது சரி தான். இது போல கிண்டல்களை தவிருங்கள். இது தேவையற்ற வாக்குவாதங்களை கொண்டு வரும்.

    @அர்ஜுன் நீங்கள் இதற்கு முன் “உங்கள் பின்னுட்டத்தை நிருத்தவில்லை என்ரால் நான் நிறுத்த வேண்டி வரும்.” கூறிய பின்னூட்டத்திற்கே உங்களோடு என்னையும் சேர்த்து திட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஃபில்டர் போட்டதால் வெளி வரவில்லை. இதற்கு அவர் என்னை அல்லக்கை என்று சொன்னதே பரவாயில்லை என்று தோன்றியது. யாருடைய பின்னூட்டத்தையும் உங்களால் நிறுத்த முடியாது என்னால் தான் முடியும் உங்களால் அதை பார்க்காமல் வேண்டும் என்றால் இருக்கலாம்.

    ஒரு தளம் நடத்துவது என்பது எளிதான காரியம் அல்ல அனைவரையும் திருப்தி செய்யும் படி என்னால் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்ய முடியாது. அனைவருக்கும் நல்லவனாக என்னாலும் இருக்க முடியாது. கிரி! இது தப்பு சரி என்று உங்களால் வெளியே இருந்து எளிதாக கூறி விட முடியும். இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்னை போன்றவர்களுக்கே தெரியும். உங்கள் புரிதலுக்கு நன்றி.

  46. யாரும் யாரையும் அவமானப்படுத்தும் நோக்கத்துடன் எழுதவேண்டாம் என்பதே என் கருத்து.

    எல்லோறும் ஒரு வகையில் சாதித்தவரே..எல்லோரிடமும் குறை இருக்கிறது நிறை இருக்கிறது. சாதித்தவரை சாடினால் முதலில் நீ எதை சாதித்தாய் என்று நினைத்துப்பார். உனக்கு புரியும்.

    எனவே மனிதனை மனிதத்தன்மையுடம் மனிதனாக பார்கவும். பின்னூட்டத்தில் வசை பாட(டும்) இடம்/ நினைக்க வேண்டாம.

    நன்றி தோழர்களே.

  47. கிரி,

    இது உங்கள் தளம். நீங்கள் கேட்டுக்கொண்டதனால் (மட்டுமே) நான் அவரை “கோமாளி” என்று இனிமேல் இந்த தளத்தில் (மட்டும்) எழுதவில்லை. ஆனால், என்னுடைய FB page, Twitter and என்னோட ப்ளாக் எல்லாத்துலயும் நான் அப்பிடிதான் எழுதினேன்; எழுதுறேன்; இன்னமும் எழுதுவேன்.

    In fact, நடிகர் டெல்லி கணேஷ் கூட FBல கேட்டார் ஏன் நீங்க “கோ….ளி” ன்னு கூப்புடரீங்கன்னு? நான் அவருக்கு அதுக்கான காரணத்தையும் சொன்னேன். அதுக்கு பிறகு அவர் கம்முனு போயிட்டார். அவர், நடிகர் மோகன் ராம் இவங்க மூலமா இப்ப “அவருக்கே’ தனக்கு “கோ…ளி”ன்னு ஒரு பேரு FB ல இருப்பது ஒருவேளை தெரிஞ்சுகூட இருக்கலாம்.

    ஆனால், என்னை பொருத்தவரை அவர் அதேதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. யார் என்னைப்பற்றி என்ன நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை. I don’t give a damn about it. On the contrary, I enjoy calling him “that” 🙂

    என்னை பொருத்தவரை, ‘கமல்’ என்ற தீய சக்தி ஒரு பிரபலமாக இருப்பதே கலாசார சீர்கேடுக்கு வழி வகுக்கும். அந்த தீய சக்தி எவ்வளவு சீக்கிரம் துபாயோ, டோஹாவோ போகின்றதோ அவ்வளவு நல்லது தமிழ் நாட்டுக்கும், தமிழர்களுக்கும்.

    சீக்கிரம் தொரத்துங்கலேன்பா அவரை; விஷ ரூபம் 2ம் பாகம் வருதாம்; அதுல வட்டியும், முதலுமா இந்துக்களை காய்ச்சி எடுக்க போறார் (அப்பதானே தான் ஒரு Secular வாதின்னு காட்ட முடியும்; முஸ்லிம்கள் கூட பிரியாணி மறுபடியும் சாப்பிடலாமே); இதுதான் நல்ல சந்தர்ப்பம்; விட்டா மறுபடியும் கிடைக்காது.

    என்னுடைய இந்த பின்னூட்டத்த பார்த்து எத்தனை ‘கமல்’ அல்லக்கைகள் நிறுத்த போறீங்க? இல்ல, மொதல்ல அவன நிறுத்த சொல்லு; அப்புறம் நான் நிறுத்தறேன்னு சொல்ல போறீங்களா? என்னவோ, இங்க பின்னூட்டம் போட்டு உங்க நேரத்த வேஸ்ட் பண்றதுக்கு பதிலா, துபாய்க்கு டிக்கெட் புக் பண்ணி வச்சிகிட்டா வசதியா இருக்கும் இல்ல, அவர் கூடவே ஓடறதுக்கு?

    அருண்

  48. அருண் இதை கொஞ்சம் படியுங்கள். அப்பொழுது நீங்கள் எங்கு இருக்கிறீற்கள்
    என்று தேரியும்.

    இதுதான் பார்வை!

    ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார்.

    அவருக்குப் பார்வை கிடையாது.

    அவ்வழியாக வந்த ஒருவன் ” ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான்.

    அதற்குத் துறவி , “இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை.” என்றார்.

    சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, ” ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான்.

    அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்.” என்றார்.

    மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன் “துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக்
    கேட்டதா? தயவு செய்து கூறுங்கள்” என்று பணிவோடு கூறினான்.

    உடனே துறவி, ” மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில்
    ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்.” என்றார்.

    மிகவும் வியந்த அரசன், ” துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்? என்று கேட்டான்.

    “அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும்.”

    முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார்.

    அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தொனித்தது.

    ஆனால் தாங்களோ மிகவும் பணிவாகப் பேசுகிறீர்கள்.” என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி.

  49. அய்யா அர்ஜுன் ஸ்ரீதர் – நான் எங்கயோ இருந்துட்டு போறேன். நான் எங்க இருந்தாலும், நீங்க என்னை என்ன சொன்னாலும், செஞ்சாலும் கோ…..ளியபத்தின என்னுடைய விமர்சனம் என்னிக்கும் மாறாது. போதுமா?

    அருண்

  50. அருண்
    நீங்கள் உங்கள் மனதலவில் கோ-லி என்று ஒரு விதை/வேளியை போட்டு அதை தீவிரமாக உங்கள் மனதலவில் நேசிக்க ஆரம்பித்து (வளர்து) விட்டீர்கள். அதனால் உங்களால் அதை ரசிக்க முடிகிறது. நீங்கள் எப்பொழுது அதையும் கடந்தவர் என்று எண்ணுகிறிர்களோ அப்பொழுதுதான் உங்களால் அதை மாற்ற முடியும். உங்கள் சிந்தனைதிறன் மாறும். செக்கு மாடு போல் செய்வதையே செய்வாது மனித மரபு அல்ல. கிலி பிள்ளைப்போல் சொல்வதையே சொல்வத மனித பண்பு அல்ல. பூக்கைளை விற்பவர்களுக்கு பூ மணம் பிடிக்கும், கருவாட்டை விற்பவர்களுக்கு கருவாட்டு மணம் தான் பிடிக்கும், சேரில் உளும் பன்றிகளுக்கு சேர் தான் பிடிக்கும். ஆனால் அறிவு போருந்திய மனிதனுக்கு எல்லாம் பிடிக்கும். எதையும் ரசிப்பான் ஆனால் அதிலேயே உழல நினைக்க மாட்டான். எவன் ஒருவன் மற்றி மற்றி யோசித்து ரசித்து ருசித்து வாழ்கிறானோ அவனே சிறந்தவனாகிறான்.
    மாற்றி யோசியுங்கள் உங்கள் வாழ்கை சிறக்கும். உங்கள் இடுக்கைகளையும் பின்னூட்டத்தையும் ரசிப்பார்கள். இல்லை என்றால் நீங்கள் இப்படிதான் என்று விட்டு விடுவார்கள். உங்கள் சிந்தனா சக்தி அதற்கு மேல் இல்லை என்று எண்ணி விடுவார்கள்.

    உங்கள் எழுத்து திறன் சிறந்து வளர நான் இறைவனை வேண்டுகிறேன்.

    • சில பல திறன் இருந்தும், மனதளவில் கோ.லி என்று நினைத்துக்கொண்டு அடுத்தவர்களை ரசிக்க வைப்பது, தைரியாமான மாற்றி யோசிக்கும் திறன்.. எனவே நண்பர் கிரி சிறந்தவன்..

      சில பல கமல் ரசிகர்கள், கமல் ரசிகன் என்பதால் தன்னை அறிவுள்ளவன் என்று எண்ணுவார்கள் (தவறுதலாக) என்று ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக இருப்பவர்களில் ஒருவராக நீங்கள் இல்லாமல், கருத்துகளை பிரித்தாளும் திறனோடு இருக்க இறைவனை வேண்டுகிறேன்..

      • முதலில் யாருக்கு எழுதி இருக்கிறேன் என்று பார்க்கவும். இது கிரிக்கு அல்ல அருண்ணுக்கு. நான் கமல் ரசிகனும் இல்லை நிச்சயமாக ரஜினி ரசிகனும் இல்லவே இல்லை.
        நான் ரசிகனாகவோ, தலைவனாகவோ நினைக்கும் அளவுக்கு யாரும் இல்லை.
        ஆனால் ஒவ்வொரு சிறந்த மனிதர்கள் பற்றியும் நிறையா படித்திருக்கிறேன், சிந்தித்திருக்கிறேன். எனக்கு நான் எற்றுக்கொள்ளும் காலம் வரும் வரை தேடுவேன்.
        இது என் கருத்து. பிறகு எப்படி கமல் ரசிகன் என்ற முத்திரையை என்னிடம் பதித்தீர்கள்.
        எனக்கு ரஜினி கமல் இருவரையும் ஒரு கட்டத்தில் பிடிக்காது.
        கமல் : அமெரிக்காவும் சவுதிமன்னரும் எண்ணையை டாலர் கணக்கில் பேரம் பேசி அதுமட்டுமில்லாமல் இரானிலிருந்து எண்ணை இந்தியாவுக்கு கொண்டு வரவும் மறுக்கும் அண்ணனன் இந்திய ருபாயை நசுக்கும் நாட்டுக்கு தாலம் போடும்/ கொடிபிடிக்கும் கமலை எப்படி பிடிக்கும்.
        ரஜினி: காவேரி பிறச்சனை எரிந்து கொண்டிருக்கும் போது அதை கண்டுகொள்ளாமல் தம் தாய் மொழிக்கு அதரவாக எந்த எதிர்ப்பும் காட்டவில்லை.
        தமிழ் மக்கள் பணத்தை அனுபவிக்க மட்டும் முடியும். பாசம் தன் மொழி கர்னாடக மக்களுக்க என்னையா ஞயாயம். ஐந்து அறிவு படைத்த நாய் கூட ஒரு வேலை சோறுபோட்டால் வாழ் நாள் முழுவதும் மறவாது.

        இன்னும் என்னிடம் கேட்டால் நீங்களே அவர்களை சேரு….. ல் அடிப்பீர்கள்.
        முதலில் என்ன எழுதுகிறோம் யாருக்கு எழுதுகிறோம் எப்படி எழுதுகிறோ என்பதை சிந்தித்து எழுத உங்களுக்கு திறனைக் கோடுக்க இறைவனை வேண்டுகிறேன்…………….

  51. ஒருத்தன் இவ்வலவு காட்டு கத்து கத்திக்கிட்டிருக்கான் ஒன்னுமே தெரியாத மாதிரி எந்த ரியாக்‌ஷனும் காட்டாம இருக்கிறிங்களே கிரி எப்படி உங்களால் மட்டும் இது முடியுது….

  52. அட போங்கப்ப உங்க சூட்சுமமான பதிலை புரிந்து கொள்கிற அளவுக்கு எல்லாம் எனக்கு ஞானம் எல்லாம் கிடையாது…

    பின்குறிப்பு:
    என்னுடைய பின்னூட்டத்தை நானே முதல் முறையா நிறையா தடவை படித்தும் உங்கள் பதிலை புரிந்துக்கொள்ள முடியவில்லை. தலை வெடிச்சிடும் போல இருக்கு(சிந்து பைரவி பட ஜனகராஜ் மாதிரி). புரியும் படி என்னுடைய மின் அஞ்ஜாலிலாவது சொல்லலாமே… ப்ளீஸ்…

  53. // செக்கு மாடு போல் செய்வதையே செய்வாது மனித மரபு அல்ல. // நான் கோ…ளி என்று கூறுபவனும் என்னை பொருத்தவரை ஒரு மனிதனே அல்ல.

    // கருவாட்டை விற்பவர்களுக்கு கருவாட்டு மணம் தான் பிடிக்கும்// கருவாடு தின்பவனை பற்றி பேசுவதும், எழுதுவதும் கருவாட்டு மனத்தோடு இருப்பதால் ஒன்றும் குடிமுழுகி போகாது.

    // இல்லை என்றால் நீங்கள் இப்படிதான் என்று விட்டு விடுவார்கள். உங்கள் சிந்தனா சக்தி அதற்கு மேல் இல்லை என்று எண்ணி விடுவார்கள்.// விடட்டுமே? Do I care?

    அருண்

  54. ஹாய் கிரி அவர்களே வணக்கம்… நான் இன்று தான் முதன்முதலில் உங்கள் பதிவை படிக்கிறேன். கமல் படத்திற்கு விமர்சனம் எழுதமாட்டேன் என்பதையே இவ்வளவு நீட்டி எழுதியிருக்கிறீர்கள் அதிலும் கமலையும் அவர் திரைப்படங்களையும் தாக்கி …. பிறகு தான் உங்கள் விமர்சனம் படித்தேன் ….. ஒன்று புரிந்தது… உங்களை குற்றம் சொல்ல முடியாது உங்களு விமர்சனம் எழுதத் தெரியவில்லை உங்கள் சொந்த வலைப்பக்கம் என்பதால் எழுத முடிகிறது நீங்கள் ஆனந்த விகடன் குமுதம் கல்கி மற்றும் ஏதாவது ஒரு பத்திரிகையில் சினிமா விமர்சகராக பணிக்கு சென்றிருந்தால் உங்கள் தகுதி உங்களுக்கு தெரிந்திருக்கும் …. அவர்களும் கூட மோசமான படங்களை கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். அவர்களை யாரும் குறை சொல்லவில்லையே … ஆனந்தவிகடன் “பாய்ஸ்” படத்திற்கு எழுதிய விமர்சனம் மிக மிக கடுமையாக இருந்ததே … அதை ஷங்கர் கூட ஏற்று திருத்திக் கொணடன் எனக் கூறினாரே… அப்படி இருப்பதுதான் விமர்சனம். நீங்கள் உங்கள் சொந்த வலைப்பக்கத்தில் எழுதுகிறீர்கள்… அதை யாருக்கோ வேண்டி ஏன் நிறுத்துகிறீர்கள்..?? ரஜினி ரசிகன் என்ற மன்ற இதழ்களில் எழுத வேண்டிய உங்கள் அபிப்ராயங்களை விமர்சனம் என்ற பெயரிட்டு இனியும் எழுதுங்களேன்… சா்ச்சைகள் உள்ளதாலேயே ஒரு “புரியாத” படம் வசூல் சாதனை எப்டி புரியும்?? அந்தளவுக்கு உலக மக்கள் எல்லாருமே முட்டாள்களா ?? ஒருவேளை உங்களுக்கு புரியவில்லை எனில் விமர்சனம் எழுதாமலே இருந்திருக்கலாம் … உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் ..இவண் ராஜேஷ்

    • திரு ராஜேஷ்,
      அவருக்கு விமர்சனம் எழுத தெரியவில்லை என்பது உங்கள் கருத்து. அவர் நன்றாகவே எழுதுபவர் என்பது எங்கள் கருத்து, அதற்கு ஆதாரம் கிரிக்கு இருக்கும் என்னை போன்ற பல ரசிகர்கள்.உங்கள் கருத்தை பார்க்கும்பொழுது நீங்களும் மிக அதி மேதாவி தனமான கமல் ரசிகர் என்றே தெரிகிறது. விஸ்வரூபம் எனக்கு பிடித்து இருந்தது, என்னுடைய நண்பர் உடன் நேற்றுதான் இந்த படத்தின் விவாதம் வந்தது. இது எல்லாம் ஒரு படமா, எனக்கும் பிடிக்கவில்லை, குடும்பத்தில் யாருக்கும் பிடிக்க வில்லை என்று தான் சொன்னான். பலருடைய கருத்தும் இதுவே. , படம் புரியாமல் படம் சூப்பர் என்று பொய் சொல்லாமல் paravaillai நாங்கள் சாதாரண (ரஜினி) ரசிகர்கள் ஆகவே இருந்து விட்டு போகிறோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here