மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாமா?

2
மியூச்சல் ஃபண்ட்

ற்போது பலரால் பரவலாகப் பேசப்படும் விஷயமாக மியூச்சுவல் ஃபண்ட் உள்ளது. மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. Image Credit

மியூச்சுவல் ஃபண்ட்

முதலீடு பற்றிப் பேச்சு வரும் போது ஷேர் முன்பு பரவலாகப் பேசப்பட்டது ஆனால், அதில் உள்ள நெருக்கடிகளால் குறிப்பிட்ட பிரிவினரிடையே மட்டுமே பிரபலமானது.

ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் பலரிடையே எளிதில் சென்றடைந்து விட்டது.

Share Market ல் (பங்குச்சந்தையில்) எப்படி முதலீடு செய்வது என்று தெரியாதவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் எளிதானது.

நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை, எதில் முதலீடு செய்வது என்று இதில் அனுபவமுள்ள ஒருவரிடம் கேட்டு அதைச் செயல்படுத்துவது மட்டுமே.

SIP (Systematic Investment Plan)

மியூச்சுவல் ஃபண்ட் வரும் போது SIP பற்றிப் பலரும் கூற கேட்டு இருப்பீர்கள். இது ஒன்றுமில்லை வங்கியில் RD (Recurring Deposit) போடுவது போலத்தான்.

  • வங்கியிலிருந்து தானியங்கியாகப் பணத்தை ஒவ்வொரு மாதமும் எடுத்துக்கொள்ளும்.
  • தொடர முடியவில்லையென்றால், உடனே SIP நிறுத்திக்கொள்ளலலாம்.
  • ₹500 முதல் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யலாம்.
  • வங்கி நிரந்தரமாக இவ்வளவு சதவீதம் வட்டி என்று கொடுத்து விடுவார்கள். மியூச்சுவல் ஃபண்ட்டில் நிரந்தர வட்டி கிடையாது.
  • பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப, கிடைக்கும் வட்டியில் மாற்றம் இருக்கும்.
  • எப்போது வேண்டும் என்றாலும், பணத்தை எடுக்கலாம்.
  • பணத்தை எடுக்க அனுமதித்த மூன்று வேலை நாட்களில் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
  • SIP ல் முதலீடு செய்கிறீர்கள் என்றால், குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்குப் பணம் எடுப்பதைப் பற்றி மறந்து விட வேண்டும்.
முதலீட்டுப் பணத்தை பல ஆண்டுகள் எடுக்காதவரை உங்களுக்கான இலாபமும் அதிகரிக்கும்.

இதன் மூலம் முதலீட்டு பணத்துக்கான RISK குறைகிறது. அதாவது பங்குச்சந்தையில் பெரிய சரிவு ஏற்பட்டாலும் அசல் பணம் குறைவதற்கான வாய்ப்புக் குறைவு.

அதிக இலாபம் வேண்டும் என்றால் RISK எடுக்கத் தயாராக இருக்க வேண்டும். இதில் RISK என்றாலும் நீண்ட கால முதலீடு என வரும் போது RISK குறைவாக இருக்கும்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது வங்கிகள் 5% – 7% வட்டி கொடுத்தால், மியூச்சுவல் ஃபண்ட்டில் தோராயமாக 11% – 15% கிடைக்கும்.

சில நேரங்களில் 25% வரையும் அதற்கு மேலும் கூடச் செல்லும்.

SIP அல்லாமல் குறிப்பிட்ட தொகையையும் ஒரு முறையில் முதலீடு செய்யலாம்.

எடுத்துக்காட்டுக்கு அலுவலகத்தில் ஊக்கத்தொகையாக ₹20,000 கிடைக்கிறது என்றால், அதை ஒரு முறையாக முதலீடு செய்து விடலாம்.

அனுபவம்

கடந்த ஐந்து வருடங்களாக (2016 – 2021) மியூச்சுவல் ஃபண்ட் பயன்படுத்துகிறேன். ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் அதிக இலாபம் மட்டுமே அடைந்துள்ளேன்.

இடைப்பட்ட காலத்தில் தனிப்பட்ட காரணத்துக்காகச் செலவுக்குப் பணத்தையும் எடுத்துள்ளேன். குறைந்த காலத்தில் அதிக இலாபம் கொடுத்துள்ளது.

பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள்

தற்போதைய நிலையில் (2021) பாஜக ஆட்சியில் இருக்கும் வரை பங்குச்சந்தை உயர்வில் இருக்கும், உயர்ந்து கொண்டே செல்லும்.

ஆட்சி மாறினால் இது போலத் தொடருமா என்பது நிச்சயமில்லை. எதையுமே கணிக்க முடியாது என்பதாலே இது RISK என்பதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் நீண்ட கால முதலீட்டில் இலாபம் கிடைக்கும் என்பதே அனுபவம் உள்ளவர்களின் கருத்து. என் அனுபவத்தில் இது உண்மையே!

நம்பிக்கை வரும் வரை குறைந்தளவில் முதலீடு செய்து, ஓரளவு நம்பிக்கை வந்த பிறகு முதலீட்டுத் தொகையை அதிகரிக்கலாம்.

இலாபம் கிடைக்கிறது என்பதற்காக மியூச்சுவல் ஃபண்ட்டில் மட்டுமே முதலீடு செய்துகொண்டு இருக்க வேண்டாம். இது தவறான அணுகுமுறை.

மியூச்சுவல் ஃபண்ட் ஒரு வகை முதலீடு தான், இது போல FD, PPF, NPS என்று ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

எனவே, பிரித்துச் சேமிக்கும் போது ஒன்றில் நட்டமானாலும் இன்னொன்று காப்பாற்றும்.

குறிப்பு 1

மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வது பெரிய விஷயமில்லை ஆனால், சரியான நிதியில் முதலீடு செய்கிறோமா என்பதே முக்கியம்.

எனவே, அனுபவமுள்ள நபரிடம் ஆலோசனையைப் பெற வேண்டும்.

தவறான நிதியில் முதலீடு செய்தால், இலாபத்துக்குப் பதில் நட்டமோ அல்லது இலாபம் பெரியளவில் கிடைக்காமலோ போகலாம்.

குறிப்பு 2

மேற்கூறியவை சந்தை அபாயங்களுக்குட்பட்டது. எனவே, சரியான நபரிடம் விவாதித்து ஆலோசனையைப் பெற்றுப் பின் முதலீடு செய்யவும்.

கணக்குத்துவங்க ஆதார் + PAN + வங்கிக்கணக்கு அவசியம்.

தொடர்புடைய கட்டுரைகள்

Sovereign Gold Bonds வாங்கலாமா?

தேசிய ஓய்வூதிய திட்டம் | National Pension System

PPF கணக்கு துவங்குவதால் என்ன நன்மைகள்?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி, மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாமா? என்பதை குறித்து விளக்கமாக எழுதி இருக்கீங்க.. சிலவற்றில் முதலீடுகள் குறித்து எனக்கு எப்போதும் கேள்விகள் இருந்து கொண்டே இருக்கும்.. என்னை பொறுத்தவரை எங்கள் பகுதியில் (கிராமம் தான்) கடந்த 10 வருடங்களில் ரியல் எஸ்டேட் கொடி கட்டி பறக்கிறது .. ஒன்றுமே இல்லை ஆனால் விலை மட்டும் தாறுமாறாக ஏறி கொண்டு போகிறது.. டவுன் பகுதியை விட விலை ஏகபோகம்.. கடந்த 15 வருடங்களில் குறிப்பிட்ட சில தொழில் புரிபவர்கள் சிலரிடம் பணம் அதிகமாக புழங்குகிறது.. அவர்கள் எல்லா சொத்துக்களையும் வாங்குவதால் விலை தாறுமாறாக ஏறி கொண்டு போகிறது.. கொரோனாவிற்கு பின்னும் எந்த நிலை மாறவில்லை.. சாமானிய மக்கள் நிலை மிகவும் பரிதாபம்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. நிலம் வாங்குவதில் எனக்கு ஆர்வம் இல்லை யாசின்.

    அப்படியே வாங்கினாலும் தெரிந்தவர் அருகில் இருந்தால் மட்டுமே. தற்போதெல்லாம் இடத்தை வாங்குவதை விட அதைப் பாதுகாப்பது தான் பெரிய வேலையாக உள்ளது.

    யாராவது குடிசை போட்டுக்கொண்டு காலி செய்ய மாட்டேங்குறார்கள்.

    எனவே, வேறு வழியில்லை என்றால் மட்டுமே அந்தப்பக்கம் போவேன். தற்போது நிலம் வாங்கும் அளவுக்குப் பணமில்லை என்பதால், அதைப் பற்றிய யோசனையே இல்லை.

    30 லட்சமாவது இருந்தால் மட்டுமே எங்கள் பகுதியில் நிலம் வாங்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here