ஞானி அவர்கள் கூறியது சரியா?

66
Ngani writer ஞானி

ஏழு வயதில் தன் வீட்டு வேலைக்காரி தலையில் பாட்டிலை வைத்து ஏர் கன்னால் சுட்டு வீழ்த்திய பணக்காரச் சிறுவன்தான் அபிநவ். 

தன் அம்மா தலையிலோ, அப்பா தலையிலோ, தங்கை தலையிலோ பாட்டிலை வைத்துச் சுட்டுப் பழகவில்லை

இவ்வாறு ஞானி அவர்கள் கூறி உள்ளார்.

அபினவ் சிறு வயதில் செய்த தவறை, அவர் தற்போது பெற்று இருக்கும் வெற்றியோடு ஒப்பிட்டுக் கேவலப்படுத்தினால், இதை என்னவென்று கூறுவது?

சிறுவயதில் யார் தான் தவறு செய்வதில்லை பெரியவர்களாகிய நீங்களே ஒருவர் பெற்ற வெற்றியை பாராட்டாமல் அவர் எப்போதோ செய்த தவறைக்  காரணம் காட்டி சிறுபிள்ளை தனமாகப்  பேசும் போது அவரைக் குறை கூறுவதில் என்ன நியாயம்?

விமர்சனங்கள்

இந்தியா தங்கமே வாங்குவதில்லை என்று கூப்பாடு போடுவது..!

யாராவது அபினவ் போல வாங்கினால் அவர்களைப் பாராட்டாமல் இதை போலக் குறைகளைப் பெரிதாக்கி அவரைப் பணக்காரன், பணக்கார விளையாட்டு, குருவிய சுட்டு பழகினான் வேலைக்காரியை சுட்டு பழகினான் என்று கூறி பெற்றுத் தந்தவரின் ஆர்வத்தையும் குறைத்து விடுகிறார்கள்.

ஞானி அவர்களைப் போல நான்கு பேர் கூறுவதை ஊடகங்களும் தங்கள் வியாபரத்திற்காக பெரிதுபடுத்தி அடுத்த முறை ஒலிம்பிக்கில் இவரைப் போன்றவர்கள் கலந்து கொள்ளும் எண்ணத்தைக் குழி தோண்டி புதைக்க வைத்து விடுகிறார்கள்.

அப்துல்கலாம் “கனவு காணுங்கள்” என்று கூறியதை அவர் எதோ தூக்கத்தில் காணும் கனவு என்று கூறியதை போல விமர்சித்தவர் ஞானி அவர்கள்.

அதனால் அபினவ் பெற்ற வெற்றியை இப்படி குறை கூறியதில் ஆச்சர்யம் இல்லை.

வித்யாசமாக கூறினால் தான் மற்றவர்களிடையே தனித்து தெரிய முடியும் என்பதற்காக இவ்வாறு கூறி நம்முடைய பெருமையை மற்ற நாட்டவர் இடையே தங்களால் முடிந்த அளவாவது உயர்த்தி இருக்கும் இவர்களைப் போன்றவர்களின் வெற்றிகளை குறை கூறாதீர்கள் / தேடிக்  கண்டு பிடிக்காதீர்கள்.

ஞானி அவர்கள் இவர்களை போன்றவர்களை உயர்த்தி கூறவில்லை என்றாலும் பரவாயில்லை, இதை போல கூறி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காமல் இருந்தாலே போதுமானது.

ஒருத்தன் வளரவில்லை திறமையில்லை என்று கூறுகிறார்கள், இவ்வாறு வெற்றி பெற்றால் அவர் பெற்ற வெற்றியை மட்டம் தட்டி இதை போல குறை கூறி விமர்சிக்கிறார்கள்.

அனைவரையும் உட்கார்ந்த இடத்திலிருந்து விமர்சிப்பது எளிது. ஆனால் இதைப் போலச் சாதனைகபோலச் சாதனைகளைச்ளைச் செய்வது தான் மிகக் கடினம்.

அடபோங்கப்பா! நீங்களும் உங்க விமர்சனமும்.. 🙁

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

66 COMMENTS

  1. //நெல்லை எக்ஸ்பிரஸ் said…
    நல்ல சொன்னீங்க கிரி…

    இவிங்கெல்லாம் “அறிவு ஜீவிகள்”-லாம்

    தானும் படுக்க மாட்டாய்ங்க…//

    இவர் இந்திய அரசை பற்றி கூறி இருந்தார் அதில் எனக்கு எந்தவித மாற்றும் கருத்தும் இல்லை. என் வருத்தம் இதை இவ்வாறு பெரிது படுத்தி கூறியது தான்.

    உங்கள் வருகைக்கு நன்றி

  2. //மருதநாயகம் said…
    சரியா தூங்கலைனா இப்படி தான் சகட்டுமேனிக்கு கருத்து மழையா கொட்ட வேண்டி வரும்//

    என்னங்க செய்யறது மருதநாயகம் உங்க அளவுக்கு இல்லைனாலும் எதோ என் மனசுக்கு பட்டதை கூறுகிறேன்.

    //இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல வேண்டுமானால் ஒருவர் அபிநவ் மாதிரி பணக்காரராக பிறன்கு இருக்க வேண்டும் ஒரு சாமான்யன் இதே சாதனை செய்வது மிக கடினமாக இருக்கிறது என்ற ஆதங்கமே ஞாநியின் கருத்தில் தெரிகிறது. அவர் கோபம் நியாய்ம தானே//

    நீங்க தான் என் பதிவை தவறா புரிந்து கொண்டீர்கள். நான் எங்கேயும் அவர் கூறிய மற்ற கருத்துகளை எதுவும் கூறவில்லை. இந்திய அரசு வெட்கப்பட வேண்டும் என்று கூறி இருந்தார் உண்மை தான். அவர் நம் நாட்டை பற்றி கூறிய கருத்துக்கள் பற்றி நான் எதுவும் கூறவில்லை.

    நான் கூறி இருந்தது அவர் அபினவை சிறு வயதில் வேலைக்காரி பெண்ண தலையில் பாட்டிலை வைத்து சுட்டதாக கூறியது மட்டுமே. திரும்ப ஒருமுறை என் பதிவை படியுங்கள்.

    யார் சரியா தூங்கலைன்னு தெரியல. உங்கள் வருகைக்கு நன்றி.

  3. //SurveySan said…
    absolutely!
    ஞாநி இப்படி எங்க எழுதியிருக்காரு?//

    குமுதத்தில் எழுதி இருந்தார்.

    உங்கள் வருகைக்கு நன்றி சர்வேசன்.

  4. //மருதநாயகம் said…
    இந்த வரிகள் வெறும் அலங்காரத்துக்கு தான்.//

    இந்த வரிகள் படிப்பவர்களுக்கும் எழுதுகிறவர்களுக்கு கூறுகிறவர்களுக்கும் வேண்டும் என்றால் அலங்காரமாக இருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதை போல விமர்சங்களை வாங்கி கொள்பவர்களுக்கு கண்டிப்பாக இருக்காது.

    //நமக்கெல்லாம் விஷயத்தை விட்டு விட்டு வார்த்தைகளை பிடித்து தொங்குவது வாடிக்கை தானே//

    சரியா சொன்னீங்க 😉

    //அப்படியே ஃப்ரீயா விடுங்க//

    அப்படியே நீங்களும்………:-)

  5. //Vaanathin Keezhe… said…
    எல்லாரும் ஒப்புக் கொள்கிற விஷயத்தை, வேண்டுமென்றே வேறு கண்ணோட்டத்தில் தன் கருத்தைத் திணித்துப் பார்த்து திருப்திப்பட்டுக் கொள்ளும் பெர்வர்ட்டட் சிந்தனையாளர்…//

    பலரும் இதை போலவே கூறுவதாக நினைத்து பலரை காயப்படுத்தி கொண்டுள்ளார்கள்.

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி வானத்தின் கீழே.

  6. //Thekkikattan|தெகா said…
    இப்ப ஞாநி என்ன சொல்லிட்டார்னு கிரி இப்படி நடு ராத்திரியில கேள்வி கேக்கிறீங்க.//

    ஹா ஹா ஹா. அதை தான் பதிவில் கூறி இருக்கேனே.

    //எங்க கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க//

    இதுக்கெல்லாம் எதுக்குங்க யோசிக்கணும், நான் தான் அவருடைய மற்ற கருத்தில் எந்த விதமான கருத்தும் கூறவில்லையே. நான் கூறியது பாட்டில் விஷயம் மட்டுமே.

    //நாமும் எழுதும் பொழுது கொஞ்சம் கேட்ச்சியா விசயங்களை வைச்சி சொல்றதில்லையா…//

    இதுக்கும் ஏற்கனவே கூறி விட்டேன், கேட்சியான விசயங்களாக நமக்கு தெரிவது அந்த நிலையில் உள்ளவர்களுக்கு தெரியாது.

    //ஆனா, சொல்ல வந்த மையக் கருத்தை விட்டுராதீங்க ரொம்ப அவசியம் கவனிக்கப் பட வேண்டிய விசயம். இன்னும் அதிகார வர்க்கத்தில் சிக்குண்ட நம்மூர் எவ்வளவு தொலைவு போகணுங்கிறதுக்கு.//

    அதில் எந்த சந்தேகமும் எனக்கும் இல்லை. என்னுடைய மற்ற பதிவுகளை நீங்கள் படித்து இருப்பதால் உங்களுக்கு இந்த சந்தேகமே வர தேவையில்லை. எனக்கும் உடன்பாடு தான்.

    உங்கள் வருகைக்கு நன்றி.

  7. Ram Ravishankar said…
    wait ..ஞானி சொன்னதுனால அபினவ்-கு மன உளைச்சலா? சும்மா காமெடி பண்ணாதீங்க ..//

    ஞானி கூறுவதால் இல்லைங்க, ஞானி போன்றவர்கள் இப்படி கூறி கொண்டு இருப்பதை கேட்டால்.

    //do you think the world cares about ஞானி’s opinion? just pure BS!//

    :No Comments 🙂

    //Like you articulated in your post, he was just trying to show he thinks differently.. In my opinion, in this event, his thought is pathetic.//

    அதையே என் பதிவில் கூறி இருந்தேன்.

    உங்கள் வருகைக்கு நன்றி.

  8. எனக்கு தெரிந்து ஞாநியின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று சொல்வேன். இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல வேண்டுமானால் ஒருவர் அபிநவ் மாதிரி பணக்காரராக பிறன்கு இருக்க வேண்டும் ஒரு சாமான்யன் இதே சாதனை செய்வது மிக கடினமாக இருக்கிறது என்ற ஆதங்கமே ஞாநியின் கருத்தில் தெரிகிறது. அவர் கோபம் நியாய்ம தானே

  9. //அடபோங்கப்பா! நீங்களும் உங்க விமர்சனமும்.. 🙁 ///

    absolutely!

    ஞாநி இப்படி எங்க எழுதியிருக்காரு? சுட்டி கொடுங்க சாரே. அவர் தலைலயே குட்டணும். 🙂

  10. //நான் கூறி இருந்தது அவர் அபினவை சிறு வயதில் வேலைக்காரி பெண்ண தலையில் பாட்டிலை வைத்து சுட்டதாக கூறியது மட்டுமே//

    இந்த வரிகள் அபிநவ் எந்த அளவுக்கு அதிகாரம் மிக்கவர் என்பதை தான் காட்டுகின்றன. இந்த அதிகாரம் அவர் தந்தையின் செல்வத்தினால் வந்தது. இதை தான் ஞாநி குறிப்பிடுகிறார். இந்த வரிகள் வெறும் அலங்காரத்துக்கு தான். இதனால் ஞாநியின் சொல்ல வந்ததன் மைய கருத்தை மறந்துவிடக் கூடாது

    நமக்கெல்லாம் விஷயத்தை விட்டு விட்டு வார்த்தைகளை பிடித்து தொங்குவது வாடிக்கை தானே. அப்படியே ஃப்ரீயா விடுங்க

  11. விஸ்வா இதையே நான் திருப்பியும் கூறலாம் அல்லவா? ரஜினியை திட்டியதால் உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்று.

    தயவு செய்து அதையும் இதையும் குழப்ப வேண்டாம். என் மனதில் தோன்றியதை எழுதி இருக்கிறேன், நான் இங்கு பதிவில் கூறும் முன்னரே ஏதோ பதிவில் இது பற்றி வந்து இருந்தது அவர் பெயர் இல்லாமல், அதிலேயே பின்னூட்டம் போட்டேன். நான் அவர் கூறியதில் எல்லாவற்றையும் கூறவில்லை. இதை மட்டுமே கூறி இருக்கிறேன்.

    உங்கள் வருகைக்கு நன்றி.

  12. ஞானி தெளிவாகக் குழம்பி, ம்றவர்களையும் குழப்புபவர். எல்லாரும் ஒப்புக் கொள்கிற விஷயத்தை, வேண்டுமென்றே வேறு கண்ணோட்டத்தில் தன் கருத்தைத் திணித்துப் பார்த்து திருப்திப்பட்டுக் கொள்ளும் பெர்வர்ட்டட் சிந்தனையாளர்… விட்டுத் தள்ளுங்கள்!

  13. // மருதநாயகம் said…
    திரைப்படங்களில் ஹீரோக்களை காட்டும் போது அவர் நல்லது செய்வது போல் காட்டுவார்கள் அப்போது அங்கே பின்னணியில் நாயகி மறைந்து இருந்து கவனித்து கொண்டு இருப்பார் அது போல் வில்லனை காட்டும் போது நமக்கு வெறுப்பு வரும்படியாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். அது மாதிரி தான் இதுவும், இதெல்லாம் ஒரு எஃபெக்டுக்கு தான் இதுக்கெல்லாம் போய்…//

    சரிங்க மருதநாயகம் ..சரி ஃப்ரீயா விடுங்க என்று சொல்லி விட்டு நீங்க தான் இப்படி சொல்லிட்டு இருக்கீங்க 🙂

  14. இப்ப ஞாநி என்ன சொல்லிட்டார்னு கிரி இப்படி நடு ராத்திரியில கேள்வி கேக்கிறீங்க.

    ‘மருதநாயகம்’ சொன்ன மாதிரிதான் என்னாலும் ஞாநி சொல்ல வந்த கருத்தை புரிஞ்சுக்க முடிஞ்சுச்சு. இப்ப கொட்டாம் பட்டியில ஓட்டப் பந்தயத்தில ஆர்வமா இருக்கிற ஒரு பையன் நம்ம ஒரே தங்கமகனோட சரித்திரம் படிச்சா நம்பிக்கை வருமா, அடேங்கப்பா இம்பூட்டு பெரிய வர்க்கமா இருந்தாத்தான் அங்கினயே போக முடியுமான்னு மலைப்பு தட்டுமா? எங்க கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க.

    நாமும் எழுதும் பொழுது கொஞ்சம் கேட்ச்சியா விசயங்களை வைச்சி சொல்றதில்லையா…

    ஆனா, சொல்ல வந்த மையக் கருத்தை விட்டுராதீங்க ரொம்ப அவசியம் கவனிக்கப் பட வேண்டிய விசயம். இன்னும் அதிகார வர்க்கத்தில் சிக்குண்ட நம்மூர் எவ்வளவு தொலைவு போகணுங்கிறதுக்கு.

    இன்னும் சொல்லிட்டே போகலாம், என்ன சொல்லி எங்கு ஏறப் போகுகிறது… விடுங்க.

  15. துப்பாக்கி கிடைச்சா ஞானியை சுட்டுடுவிங்க போல இருக்கே…பயங்கர கோவமாக இருக்கிங்க.

    🙂

  16. wait ..ஞானி சொன்னதுனால அபினவ்-கு மன உளைச்சலா? சும்மா காமெடி பண்ணாதீங்க ..

    do you think the world cares about ஞானி’s opinion? just pure BS!

    Like you articulated in your post, he was just trying to show he thinks differently.. In my opinion, in this event, his thought is pathetic.

  17. ஒன்று கேட்கலாம். எந்தக் குழந்தையிடமாவது அதீதமாகக் காணப் படும் (விளையாட்டின் எந்தத் துறையானாலும்)திறமையைக் கண்டெடுத்து தனிப்பட்டக் கவனத்துடன் பயிற்சியளித்து முன்னுக்கு கொண்டு வந்து முன்னிருத்தியிருக்கிறதா இந்த அரசாங்கம்? இந்த பணக்கார விளையாட்டை விட்டு விடட்டும். வேறு யாரை அப்படி தானே முழு செலவும் செய்து முன்னுக்கு கொண்டு வந்திருக்கிறது எனச் சொல்லட்டுமே ஞானி.

    ஏழைநாட்டு பட்ஜெட் இதையெல்லாம் தாங்காது என்று கூட சொல்லக் கூடும். ஆனால் தங்கள் தலைமுறைகளுக்காகத் தங்கத்தை சொந்த கஜானாவில் நிரப்பத் தெரியும். அவர்களுக்கு நாடு ஒரு வட்ட வடிவ தங்கப் பதக்கத்தை வாங்கினால் என்ன வாங்கா விட்டால் என்ன? நிலைமை இப்படியிருக்க அபிநவ்வுக்கு அந்த வாய்ப்பை வசதியுள்ள அவர் தந்தை ஏற்படுத்துக் கொடுத்து சாதிக்க வைத்ததில் தவறென்ன இருக்கிறது?

    //சிறுவயதில் யார் தான் தவறு செய்வதில்லை//

    இங்கே பழுத்த தலைவர்கள், தலைவிகள் ஒவ்வொரு முறையும் செய்யும் எல்லாத் தவறுகளையும் மன்னித்து மறந்து மறுபடி ஓட்டளித்து அரியணையிலும் அமர்த்தி அழகு பார்ப்பார்களாம். ஆனால் சிறுவனாய் இருக்கையில் செய்த குற்றம் மன்னிக்க முடியாததாம்.அபிநவ் செய்தது சரி என்று சொல்ல வரவில்லை. ஆனால் அவரது விடா முயற்சி சாதனை இவற்றை மனதில் கொண்டு அதை மன்னிப்பதில் தவறிருப்பதாய் தெரியவில்லை.

  18. SurveySan said…
    //ஞாநி இப்படி எங்க எழுதியிருக்காரு?//

    சர்வேசன், ஞானி போன வாரம் ரஜினிக்கு எழுதிய “பகிங்கர”க் கடிதத்தைக் குமுதத்தில் கண்டு பதிவும் இட்ட தாங்கள் இந்த வார இதழைப் படிக்கவில்லையா:))?

  19. //கோவி.கண்ணன் said…
    துப்பாக்கி கிடைச்சா ஞானியை சுட்டுடுவிங்க போல இருக்கே…பயங்கர கோவமாக இருக்கிங்க.//

    கோவம் என்னங்க கோவி கண்ணன். இந்தியா இது வரை இந்த தங்க பதக்கம் தவிர்த்து இன்னும் ஒரு வெண்கல பதக்கம் கூட பெறவில்லை. எந்த நாடு என்று தெரியாத நாடெல்லாம் பதக்கங்கள் வாங்கும் போது வாங்கிய ஒரு தங்கத்தையும் இவ்வாறு கூறினால் வெறுப்பாக தான் இருக்கும்.

  20. அட ஏனுங்க நீங்க…?? போனி ஆகாத ஞாநிங்க அது….தத்துப்பித்துன்னு வாய்க்கு வந்தத உளரும் “அது” க்கு பேரு வேற ஞாநி!!! என்ன கொடும சார் இது?

  21. //கோவை சிபி said…
    .இதையெல்லாம் தெரிந்த ஒருவர் நேர்மையாக எப்படி அபினவ் என்ற ஒரு கொழுத்தபணக்கார அடையாளத்திற்கு வாழ்த்துப்பா பாடமுடியும்?//

    அவரை யாரும் வாழ்த்துப்பா பாட சொல்லவில்லை. குறை கூறாமல் இருந்தாலே போதுமானது.

    உங்கள் வருகைக்கு நன்றி.

  22. //கூடுதுறை said…
    பூமி மேற்கில் இருந்து சுற்றுவதே தவறு அது தெற்கு வடக்காகத்தான் சுற்றவேண்டும் என்று கூட சொல்வார்…. படிக்க ஆளிருந்தால்…//

    இவ்வாறு வித்யாசமாக கூறுவதையே ஒரு சிலர் பெருமையாக கருதுகிறார்கள். உங்கள் வருகைக்கு நன்றி கூடுதுறை.

  23. //அபிநவ்வுக்கு அந்த வாய்ப்பை வசதியுள்ள அவர் தந்தை ஏற்படுத்துக் கொடுத்து சாதிக்க வைத்ததில் தவறென்ன இருக்கிறது?//

    ஞானி அவர்கள் இந்திய அரசு அனைவருக்கும் வசதி செய்து தரவில்லை அதற்காக வெட்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளார். அவர் கூறியதில் எந்த தவறும் இருப்பதாக கருதவில்லை. ஆனால் அபினவ்க்கு 200 கோடி மதிப்பில் ஹோட்டல் கொடுப்பதை எல்லாம் கூற வேண்டிய அவசியம் என்ன? அவர் மகனுக்கு அவர் தருகிறார் இதில் என்ன தவறு? எத்தனை ஏழை, நடுத்தர வகுப்பு இந்திய இளைஞர்களுக்கு இது சாத்தியம் ? என்று கேட்டுள்ளார் சரியாக தான் கேட்டுள்ளார். அதற்க்கு அபினவ் அப்பா என்ன செய்வார் அதற்கும் அவர் மகனுக்கு ஹோட்டல் கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்?

    //அபிநவ் செய்தது சரி என்று சொல்ல வரவில்லை. ஆனால் அவரது விடா முயற்சி சாதனை இவற்றை மனதில் கொண்டு அதை மன்னிப்பதில் தவறிருப்பதாய் தெரியவில்லை.//

    உண்மை தான் ராமலக்ஷ்மி நீங்கள் கூறுவது போல அபினவ் செய்தது சரி என்று நியாயப்படுத்தி பேசவில்லை. . ஆனால் அதை சுட்டி காட்டப்பட வேண்டிய தருணம் இது அல்ல என்று தான் கூறுகிறேன்.

    புத்தகம் படிக்கும் மக்களுக்கு இவர்கள் எழுதிய வேலைக்காரியை சுட்ட செய்தி தான் தெளிவாக தெரியும், இதை எல்லாம் எத்தனை பேர் சரியாக புரிந்து கொள்வார்கள், படிப்பவர்கள் பலர் அவன் பணக்காரனாமே! ஏதோ வேலைக்காரியை சுட்டு பழகினானாமே! என்று தான் பேசி கொள்வார்கள்.

    குறைகளை கூறுவது தவறில்லை ஆனால் ஆனால் அதை எந்த இடத்தில் கூறுவது என்பது முக்கியம்.

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராமலக்ஷ்மி.

  24. //சினிமா நிருபர் said…
    பெயரை ஞானின்னு வெச்சிருக்குறதால அவருக்கு பெரிய ஞானின்னு நினைப்பு போல…! வேறென்ன சொல்ல கிரி…!//

    அவர் பழுத்த அனுபவம் மிக்கவராக இருக்கலாம் அதற்காக இதை போல கூறும் போது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.

    உங்கள் வருகைக்கு நன்றி சினிமா நிருபர்.

  25. //வெண்தாடிதாசன் said…
    அடுத்த target யார்?
    சரத்குமாரா அல்லது ராஜேந்தரா?//

    வெண்தாடி தாசன் எப்போதும் ஒன்றையே பேசி கொண்டு இருக்காதீர்கள், நான் எப்போதோ அந்த விவாதத்தில் இருந்து வெளியே வந்து விட்டேன். எல்லா பதிவிற்கும் அதையே தொடர்பு படுத்தி பார்த்துக்கொண்டு இருந்தால் எந்த ஒரு பதிவும் அவ்வாறே தெரியும்.

    உங்கள் வருகைக்கு நன்றி.

  26. //கார்க்கி said…
    குறைகளை மட்டுமே கூறுவது எளிது..மாற்று வழிகளை காட்டுவதுதான் கடினம்//

    உண்மை தான் கார்க்கி. நாம் சமூகத்திற்கு என்ன செய்து இருக்கிறோம் என்பதும் முக்கியமான விஷயம். விமர்சனம் செய்வது எவருக்கும் எளிது.

    உங்கள் வருகைக்கு நன்றி.

  27. //மதிபாலா said…
    அட ஏனுங்க நீங்க…?? போனி ஆகாத ஞாநிங்க //

    வாங்க மதிபாலா. ஞானி பல நல்ல கருத்துகளை கூறி உள்ளார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இதை போல கூறவேண்டிய அவசியமே இல்லாமல் கூறி மனதை கஷ்டப்படுத்த தேவை இல்லை.

    உங்கள் வருகைக்கு நன்றி.

  28. சிறு வயதில் பேப்பர் விற்ற சிறுவன் பின்னாளில் ஜனாதிபதி ஆன ஒரு அப்துல் கலாம் மாதிரி செல்வந்தராக பிறந்த அபிநவ் எத்தனை பேருக்கு உந்துதல் ஆக இருப்பார் என்பது சந்தேகமே. திரைப்படங்களில் ஹீரோக்களை காட்டும் போது அவர் நல்லது செய்வது போல் காட்டுவார்கள் அப்போது அங்கே பின்னணியில் நாயகி மறைந்து இருந்து கவனித்து கொண்டு இருப்பார் அது போல் வில்லனை காட்டும் போது நமக்கு வெறுப்பு வரும்படியாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். அது மாதிரி தான் இதுவும், இதெல்லாம் ஒரு எஃபெக்டுக்கு தான் இதுக்கெல்லாம் போய்…

  29. //அருண் நிஷோர் பாஸ்கரன் said…
    நல்ல விமர்சனம்…இது தொடர்பான என்னுடைய பதிவு இங்கே…//

    நன்றி அருண் நிஷோர் பாஸ்கரன். உங்கள் பதிவிற்கு வருகிறேன்.

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

  30. //ஜோசப் பால்ராஜ் said…
    கிரி,
    ஒரு வேளை அந்த பயிற்சியின் போது வேலைக்கார பெண்ணுக்கு காயம் ஏற்பட்டிருந்தால் என்னவாகி இருக்கும்? அந்த பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட வேலைக்கார பெண்ணின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அதை கொஞ்சம் யோசிக்க வேண்டும்.//

    ஜோசப் பால்ராஜ் எனக்கு இரக்கமே இல்லை என்று முடிவு கட்டி விடாதீர்கள். நான் அபினவ் செய்ததை கண்டிப்பாக நியாயப்படுத்தி பேசவில்லை. அவ்வாறு பேசினால் ஒரு மிருகமாகவே என்னை கருத முடியும். ஆனால் அந்த சம்பவம் நடந்தது மிக சிறு வயதில். சிறு வயதில் நமக்கே தவறு என்று தெரியாமல் சில தவறுகளை செய்து விடுகிறோம். அதை போல தவறே இது. ஏழு வயதில் அவருக்கு என்ன மெச்சுரிட்டி இருக்க முடியும்.

    //ஆனால் இப்படி ஒரு செய்தி அந்த வெற்றியில் ஒரு களங்கத்தை ஏற்படுத்துவதை மறுக்க இயலாது.//

    இதையே நானும் கூறுகிறேன். எத்தனை பேர் இதை ஆராய்ந்து புரிந்து கொள்வார்கள். படிக்கிறவர்கள் பலர் மேற்க்கொண்டு சிந்திக்காதவர்கள் அவன் ஏதோ வேலைக்காரியை சுட்டு பழகினானமே என்று தான் பேசி கொள்வார்கள்.

    //இது சாதாரணமாக நம் நாட்டில் சில பணக்கார குடும்பங்களில் உள்ள நடைமுறை. அவர்கள் வீட்டு சின்னஞ்சிறு சிறுவன் கூட தன்னை விட பல வயது மூத்த வேலையாளை வாடா போட என கூப்பிடுவதும், பெயர் சொல்லி அழைப்பதும் மிகவும் சாதரனமாக நடக்கும் ஒரு நிகழ்வு//

    மிக சரியாக கூறினீர்கள். தற்போது அது தற்போதைய தலைமுறையில் குறைந்து வருகிறது.

    //பிந்த்ரா சிறுவயதில் இப்படி செய்திருந்தால் அது அவரது பொற்றோரின் குற்றம். கண்டிக்கப்பட வேண்டியவர்கள் அவரது பெற்றோரே.//

    கண்டிப்பாக கண்டித்து இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். கண்டித்து இருந்தால் தான் பெற்றோர்.

    நான் கூற வந்ததை புரிந்து கொண்டமைக்கு நன்றி ஜோசப் பால்ராஜ்.

  31. தமிழக நீச்சல் அதிசயம் குற்றாலீஸ்வரனுக்கு நேர்ந்த கதி தெரியுமா?
    தன்ராஜ்பிள்ளை க்கு நேர்ந்த கதி தெரியுமா?
    ஏன் தற்போதைய ஒலிம்பிக் வீராங்கனை மோனிகா தேவி க்கு நேர்ந்தது தெரியுமா?இதைப்போல ஆயிரம் கதைகளை ஒரு பத்திரிக்கையாளர் தனது அனுபவத்தில் பார்த்திருப்பார்.இதையெல்லாம் தெரிந்த ஒருவர் நேர்மையாக எப்படி அபினவ் என்ற ஒரு கொழுத்தபணக்கார
    அடையாளத்திற்கு வாழ்த்துப்பா பாடமுடியும்?

  32. ஞானி எப்போதும் எதிர்மறை எண்ணம் கொண்டவர்… அவரிடம் இருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும்…

    பூமி மேற்கில் இருந்து சுற்றுவதே தவறு அது தெற்கு வடக்காகத்தான் சுற்றவேண்டும் என்று கூட சொல்வார்…. படிக்க ஆளிருந்தால்…

  33. //அபினவ் சிறு வயதில் செய்த தவறை, அவர் தற்போது பெற்று இருக்கும் வெற்றியோடு ஒப்பிட்டு கேவலப்படுத்தினால் இதை என்னவென்று கூறுவது?//

    நம்ம ஊர்ல யாரையாவது கிண்டல் செய்யணும்னா… அவனுக்கு பெரிய ஞானின்னு நினைப்புன்னு சொல்‌லுவோம்ல… அதான் இவர் பெயரையே ஞானின்னு வெச்சிருக்காரே.

    பெயரை ஞானின்னு வெச்சிருக்குறதால அவருக்கு பெரிய ஞானின்னு நினைப்பு போல…! வேறென்ன சொல்ல கிரி…!

  34. யோசிச்சா தலைமுடி போயிடுமாங்க:)?
    அப்படின்னா ரூம் போட்டு யோசிக்கிறவங்களுக்கு!!!!!!

  35. //அவனும் அவளும் said…
    கிரி,
    ஒரு ஏழு வயசு பையன் பண்ணின செயலுக்கு எல்லாம் அர்த்தம் கண்டுபிடிக்க ஆரம்பிச்சுடிங்களா?//

    அதுவும் சரியா தங்கம் வெற்றி பெற்ற போது.

    //ஒரு நாலைஞ்சு பத்திரிகைல பிரசுரம் ஆகும் போது உண்மை ஆயிடும். //

    இதுவே என் கவலை. நான்கு பேர் இது பற்றி பேசினால் கடைசியில் அபினவ் ஒலிம்பிக் போகும் வாரத்துக்கு முந்தின வாரம் தான் வேலைக்காரி பெண் தலையில் வைத்து சுட்டு பழகினாருன்னு சொல்லிடுவாங்க.

    //மிடில் கிளாஸ் மக்கள், ஏழை மக்கள் எல்லார்கிட்டயும் எந்த அளவுக்கு நல்ல குணம் இருக்கோ அதே அளவுக்கு தான் பணக்காரங்க கிட்டயும் இருக்கும். //

    அதே அளவுக்கு இருக்கோ இல்லையோ பணக்காரர்கள் எல்லோரும் கெட்டவர்கள் கிடையாது நடுத்தர மக்கள் அனைவரும் நல்லவர்கள் கிடையாது.

    //சுதந்திர தினம் வந்தா, சுதந்திரம் எங்க இருக்குன்னு கேக்கற கும்பல்,
    ஒருத்தன் ஜெயிச்சா, அவனோட வெற்றிய கேவலபடுத்தர கும்பல்//

    சரியா சொன்னீங்க. ஒரு சிலர் விதண்டாவாதத்திற்க்கே சொல்வாங்க.

    //அரசாங்கம் செலவு பண்ணி ஜெயிச்சா பெருமையா ? அப்படி நடந்தா விளையாட்டு தன்னோட தன்மைய இழந்து, பணம் சம்பந்தப்பட்டதா ஆய்டிச்சுன்னு சொல்லுவாங்க. //

    அதாவது குறை கூறுகிறவர்கள் எது செய்தாலும் அதில் குறை கண்டுபிடிப்பார்கள், அவர்களை எக்காலத்திலும் திருப்தி படுத்த முடியாது.

    உங்கள் வருகைக்கு நன்றி அவனும் அவளும்.

  36. //ராஜ நடராஜன் said…
    யோசிச்சா தலைமுடி போயிடுமாங்க:)?
    அப்படின்னா ரூம் போட்டு யோசிக்கிறவங்களுக்கு!!!!!!//

    ஞானி அவர்கள் படத்தை பார்த்து கேட்கறீங்களா 🙂 [எனக்கு முடி இருக்கு :-)))]

    உங்கள் வருகைக்கு நன்றி

  37. அடுத்த target யார்?

    சரத்குமாரா அல்லது ராஜேந்தரா?

  38. நினைத்திருந்தால் அந்த பணக்கார இளைஞன் வேற நாட்டுக்கு போய் அவர்களுக்காக விளையாடியிருக்கலாம் (சிங்கப்பூருக்கு பதக்கம் வாங்கித்தந்த மூவரும் சைனாக்காரர்..). இல்லையே தன் சொந்தக் காசில் பயிற்சி செய்து இந்தியாவுக்காகத்தான் களம் இறங்கினார்..
    இந்தியா பதக்க பட்டியலை அதிகரிக்க வால்டர் தேவாரம் சொன்னாற்போல் மல்யுத்தம் ,பழுதூக்கல் போன்றவற்றில் கவனம் செலுத்துதல் நல்லது.. அத்துடம் IPL ல கொட்டுற தனியாரிண்ட காசை கொஞ்சம் இஞ்சையும் கொட்டலாம்..

  39. Gnani might have based his column on this article in “The Week” magazine known for sleazy/sensationalizing news stories.
    From shooting balloons placed on his maid’s head to winning the Olympic Gold…, the making of Bindra The Champ
    By Vijaya Pushkarna/Chandigarh
    Photo:Arun Sreedhar
    A common sight in the Dehradun farmhouse of the Bindras was of a boy in shorts walking, running or cycling around, with a gun in hand, taking aim at birds, and lining up empty bottles for target practice. Abhinav Bindra’s fancy for the gun began when he was barely three.
    One day his father, Dr Apjit Singh Bindra, was shocked to find his children’s maid-Abhinav has a sister, Divya-drenched in red liquid from head to toe. He later learnt that Abhinav had been doing target practice with balloons filled with red-coloured water placed on the maid’s head. The maid said he had been doing it for months.
    “Has he ever hurt you?” Bindra asked her. Just once, she said. That was when five-year-old Abhinav missed the target balloon and the pellet from his air gun hit the maid on her right cheekbone. Bindra, a food technologist-cum-businessman, decided to make a non-human target for his son. He assembled bamboos in a square formation, suspended a target in its centre and placed it in the backyard. It was Abhinav’s first shooting range.

    When the Bindras moved into a rented house in Chandigarh, Bindra converted the lawn in the backyard into a full-fledged shooting range. “He started out in the backyard. See where he has come today,” gushed Abhinav’s mother, Bubli.
    Bindra is a proud man. “My Singh is king. The gods have been extremely kind to us,” he said, as he popped open a champagne bottle at his palatial house, 20 km from Chandigarh, to celebrate his son’s Olympic gold win in the 10m air rifle event in Beijing on August 11….

    ================================

    Does gnani think that a five year old kid did that intentionally or with arrogance (and no respect for human life)?

    I feel the kid may not have realized the danger of doing this act.

    And the servant is dumb enough to risk his life to comply to the order of his young malik?

    And who narrated this story to the writer? The servant or Abhinav’s parents? No reference!

    More likely, I suspect this as a fictitious account build by the writer of this article to create an aura/awe on the popularity of Abhinav.

  40. அவர் உண்மையான பெயர் ஞானி அல்ல…இந்த மாதிரி பெயர்கள் எல்லாம் வேறு யாரவது ஒருவர் சூட்டினால்தான் பெருமை.தனக்குத் தானே வைத்துக் கொண்டதை என்னவென்று சொல்ல? குறைகளை மட்டுமே கூறுவது எளிது..மாற்று வழிகளை காட்டுவதுதான் கடினம்.ஞானி அப்படி பட்டவர். புகழ் பெற இரண்டு வழிகள். ஒன்று தன் திறமையால் பெறுவது. மற்றொன்று அப்படி பட்டவர்களை விமர்சித்து,அவர்களைப் பிடிக்காதவர்களை தன் வசம் செய்வது.ஞானி இரண்டாம் வகை.அவர்(ன்) ஞானி அல்ல,சாணி… வேண்டாம் கிரி,அதன் மீது காலை வைப்பது கூட இனி வேண்டாம்.உங்கள் ஆதங்கம் புரிகிறது. இப்படி பட்டவர்களை அடக்குவது என்பது அவர்களை புறக்கணிப்பது மூலம் மட்டுமே சாத்தியம். நான் அவரை(னை) மட்டுமல்ல,குமுதம் வாசிப்பதை நிறுத்தியே சில ஆண்டுகள் ஆகின்றன.அது ஒரு குடும்பபாங்கான சரோஜா தேவி புத்தகம் என்பது என் கருத்து.

  41. //டொன் லீ said…
    நினைத்திருந்தால் அந்த பணக்கார இளைஞன் வேற நாட்டுக்கு போய் அவர்களுக்காக விளையாடியிருக்கலாம்//

    உண்மை தான். அல்லது விளையாடாமலே இருந்து இருக்கலாம். இதை நம்பி அவர்கள் இல்லை. இவை எல்லாவற்றையும் விட தங்கம் வாங்கும் போது அவர் அலட்டல் இல்லாத குணம் மறக்கவே முடியாதது. அவர் தங்கம் வாங்கினாரா என்று சந்தேகமே வரும் அளவுக்கு அமைதியாக இருந்தார்.

    //சிங்கப்பூருக்கு பதக்கம் வாங்கித்தந்த மூவரும் சைனாக்காரர்.//

    அப்படியா! இது எனக்கு புதிய தகவல் நன்றி டொன்லி

    //அத்துடம் IPL ல கொட்டுற தனியாரிண்ட காசை கொஞ்சம் இஞ்சையும் கொட்டலாம்..//

    உண்மை தான் நமக்கு ஒலிம்பிக் போன்ற போட்டிகள் வரும் போது தான் அதலெடிக்ஸ் போட்டிகள் பற்றி நம் நினைவிற்கே வருகிறது.

    உங்கள் வருகைக்கு நன்றி.

  42. // Indian said…
    Does gnani think that a five year old kid did that intentionally or with arrogance (and no respect for human life)?

    I feel the kid may not have realized the danger of doing this act.//

    இதையே நான் கூறுகிறேன் இந்தியன். 7 வயது சிறுவனுக்கு தான் செய்வது சரியா தவறா என்று கூட தெரியாது. என்ன மெச்சுரிட்டி இருக்க போகிறது.

    //And who narrated this story to the writer? The servant or Abhinav’s parents? No reference!//

    இது கூட பரவாயில்லை, இதை ஒலிம்பிக் தங்கம் வெற்றியோடு ஒப்பிட்டு பேசினால் என்னவென்று கூறுவது.

    //More likely, I suspect this as a fictitious account build by the writer of this article to create an aura/awe on the popularity of Abhinav.//

    🙂

    உங்கள் வருகைக்கு நன்றி இந்தியன்

  43. //r.selvakkumar said…
    துப்பாக்கி சுடுவதெல்லாம் ஒரு போட்டியா? என்றெல்லாம் கேட்டிருக்கிறார். இனிமேல் ஒலிம்பிக் கமிட்டிகள் ‘இதெல்லாம் விளையாட்டா?’ என்று ஞானியிடம் ஞானம் பெற்றுவிட்டு அதற்கப்புறம் அவற்றை ஒலிம்பிக்கில் அங்கீகரிக்கலாம்.//

    அவருடைய கருத்தை கூறி இருக்கிறார். ஆனால் இதை முடிவு செய்வது விளையாட்டு துறை தான். எதில் தான் ஆபத்து இல்லை. அவ்வாறு பார்த்தால் டிஸ்கஸ் த்ரோவ், போல்ட் வால்ட், ஜிம்னாஸ்டிக், ஈட்டி எறிதல் என்று பல விளையாட்டுகளை தடை செய்ய வேண்டியது தான்.

    //இது பணக்கார விளையாட்டு என்று குறைபட்டுக்கொள்கிறார். என்ன சொல்லவருகிறார் இவர்?//

    இவர் கூறியபடி பார்த்தால் GOLF, பில்லியார்ட்ஸ் போன்ற விளையாட்டுகளை என்ன சொல்வது.

    //ஏன் இவருக்கு சாதனைகளையும், சாதனை செய்பவர்களையும் பிடிக்க மாட்டேன் என்கிறது.//

    சாதனை செய்தவர்களை குறை கூறுவது பெரிய விஷயம் இல்லை. அவர்களை போல் நாம் என்ன சாதித்து இருக்கிறோம் என்பது தான் முக்கியம்.

    உங்கள் வருகைக்கு நன்றி செல்வகுமார்

  44. //தாமிரா said…
    வானத்தின் கீழே ://எல்லாரும் ஒப்புக் கொள்கிற விஷயத்தை, வேண்டுமென்றே வேறு கண்ணோட்டத்தில் தன் கருத்தைத் திணித்துப் பார்த்து திருப்திப்பட்டுக் கொள்ளும் பெர்வர்ட்டட் சிந்தனையாளர்…//

    ஸ்பெஷல் ரிப்பீட்டு.. (இது ஒரு பெரிய லிஸ்ட். அதில் முதன்மையானவர் ஞானி. பேசாமல் அவர் வக்கீலாயிருக்கலாம்)//

    🙂 பலர் வித்யாசமாக கூறுவதாக நினைத்து இவ்வாறு கூறி பலரின் மனதை காயப்படுத்தி விடுகிறார்கள்.

    உங்கள் வருகைக்கு நன்றி தாமிரா.

  45. கிரி,
    ஒரு வேளை அந்த பயிற்சியின் போது வேலைக்கார பெண்ணுக்கு காயம் ஏற்பட்டிருந்தால் என்னவாகி இருக்கும்? அந்த பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட வேலைக்கார பெண்ணின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அதை கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

    அபிநவ் பிந்த்ரா தங்கம் வாங்கியதை பாராட்டத்தான் வேண்டும், ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு தனிநபர் தங்கப்பதக்கத்தை வென்றது மிகவும் பாராட்டத்தக்கது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
    ஆனால் இப்படி ஒரு செய்தி அந்த வெற்றியில் ஒரு களங்கத்தை ஏற்படுத்துவதை மறுக்க இயலாது.

    இது சாதாரணமாக நம் நாட்டில் சில பணக்கார குடும்பங்களில் உள்ள நடைமுறை. அவர்கள் வீட்டு சின்னஞ்சிறு சிறுவன் கூட தன்னை விட பல வயது மூத்த வேலையாளை வாடா போட என கூப்பிடுவதும், பெயர் சொல்லி அழைப்பதும் மிகவும் சாதரனமாக நடக்கும் ஒரு நிகழ்வு. வேலைக்காரர்கள் இழிவுபடுத்தப்படுவது பெற்றோர்களால் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. பிந்த்ரா சிறுவயதில் இப்படி செய்திருந்தால் அது அவரது பொற்றோரின் குற்றம். கண்டிக்கப்பட வேண்டியவர்கள் அவரது பெற்றோரே.

  46. //Indian said…
    As long as Abhinav doesn’t cheat, dope or buy the medal and win it through sheer hard work in the honest way, why do I care whether he paid his own expenses or the state sponsored him?//

    சரியா சொன்னீங்க இந்தியன். நேர்மையான வழியிலே ஜெயித்து பெற்று இருக்கிறார். ஞானி அவர்கள் அரசை குறை கூற நினைப்பது தவறு இல்லை, எனென்றால் இவர் கூறிய படி அனைவரும் இந்த வசதியை பெற முடியாது. அதற்க்கு இவர்கள் ஹோட்டல் வைத்து இருப்பது அதை அபினவ் க்கு பரிசாக கொடுப்பது பற்றி எல்லாம் எதற்கு கூற வேண்டும். இதற்கும் அரசுக்கும் மக்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா!

    இவர் பிரச்சனை இந்த வசதிகளை அரசு செய்து தரமுடியவில்லை என்றால் அதற்காக வெட்கப்பட வேண்டும் என்கிறார். நியாயமான பேச்சு தான், அதற்கும் அபினவ் க்கு ஹோட்டல் பரிசாக கொடுப்பதற்கும் துளி கூட சம்பந்தம் இல்லை. அதை எல்லாம் ஏன் விமர்சிக்க வேண்டும்?

    உங்கள் கருத்திற்கு நன்றி இந்தியன்.

  47. //அருண் நிஷோர் பாஸ்கரன் said…
    கிரி இங்கே எனக்கு ஒரு சிறு சந்தேகம்.
    அந்த ஏழு வயது விஷயம் எந்த பத்திரிகையில் வந்தது? அதற்கான ஆதாரங்கள் எதாவது உண்டா?
    இது உங்களுக்கான கேள்வி அல்ல, அவருக்கான கேள்வி :)//

    எனக்கு எதுவும் தெரியாது அருண். முதலில் இந்த விஷயம் விகடனில் வந்ததாக யாரோ கூறினார்கள், அது உண்மையா என்று தெரியாது. ஆனால் நம் பதிவில் யாரோ இது பற்றி பதிவிட்டார்கள், குமுதம் ல் ஞானி அவர்கள் கூறி இருப்பதாக அதன் பிறகே சென்று பார்த்தேன்.

    அபப்டியே வேறு ஏதாவது ஊடகத்தில் வந்து இருந்தாலும்… ஏங்க! 7 வயதில் அந்த பய்யனுக்கு என்ன தெரிய போகிறது. இதை எல்லாம் ஒரு குறையாக வெற்றி செய்தியில் கூறினால் எப்படிங்க 🙁

  48. கிரி,

    ஒரு ஏழு வயசு பையன் பண்ணின செயலுக்கு எல்லாம் அர்த்தம் கண்டுபிடிக்க ஆரம்பிச்சுடிங்களா? அடுத்தது இது மாதிரி ஒரு நிகழ்வு நடந்ததா ? யார் சொன்னாங்க ? இவனுங்களா எழுதுவாங்க. ஒரு நாலைஞ்சு பத்திரிகைல பிரசுரம் ஆகும் போது உண்மை ஆயிடும்.

    அடுத்தது, என்னவோ பணக்காரங்கனா யாரையும் மதிக்காதவங்க அப்படின்னு ஒரு கருத்து. மிடில் கிளாஸ் மக்கள், ஏழை மக்கள் எல்லார்கிட்டயும் எந்த அளவுக்கு நல்ல குணம் இருக்கோ அதே அளவுக்கு தான் பணக்காரங்க கிட்டயும் இருக்கும்.

    சுதந்திர தினம் வந்தா, சுதந்திரம் எங்க இருக்குன்னு கேக்கற கும்பல்,
    ஒருத்தன் ஜெயிச்சா, அவனோட வெற்றிய கேவலபடுத்தர கும்பல்

    இந்த கும்பல் எல்லாம் எங்கயும் போகாது. இருந்துக்கிட்டு தான் இருக்கும். அத எல்லாம் லூஸ்ல விட்டுட்டு போக வேண்டியது தான்.

    அரசாங்கம் செலவு பண்ணி ஜெயிச்சா பெருமையா ? அப்படி நடந்தா விளையாட்டு தன்னோட தன்மைய இழந்து, பணம் சம்பந்தப்பட்டதா ஆய்டிச்சுன்னு சொல்லுவாங்க.

    இந்த மாதிரி விமர்சகர்கள் கருத்து உண்மையானதா கூட இருக்கலாம். ஆனா சொல்லப்படுகிற நேரம், சொல்லப்படுகிற விதம் எல்லாமே கிரிமினல் intention.

  49. //தமிழன்… said…
    தவறான புரிதலோ என்கிற மாதிரிதான் எனக்கு தெரிகிறது கரி அண்ணன்…//

    என் மனதில் பட்டதை கூறினேன் தமிழன். அதெல்லாம் சரி என் மேல உங்களுகு என்ன கோபம் என் பேரை இப்படி கொலை பண்ணிட்டீங்களே :-))))))

    உங்கள் தொடர் வருகைக்கு நன்றி தமிழன்

  50. ஞானி இன்னமும் சொல்லியருக்கிறார்.

    துப்பாக்கி சுடுவதெல்லாம் ஒரு போட்டியா? என்றெல்லாம் கேட்டிருக்கிறார். இனிமேல் ஒலிம்பிக் கமிட்டிகள் ‘இதெல்லாம் விளையாட்டா?’ என்று ஞானியிடம் ஞானம் பெற்றுவிட்டு அதற்கப்புறம் அவற்றை ஒலிம்பிக்கில் அங்கீகரிக்கலாம்.

    இது பணக்கார விளையாட்டு என்று குறைபட்டுக்கொள்கிறார். என்ன சொல்லவருகிறார் இவர்? ஏழைகளின் விளையாட்டான கில்லி தாண்டு தவிர வேறு எதையும் யாரும் விளையாடக் கூடாதா? ஏன் இவருக்கு பணக்காரர்களையும், பணம் சம்பாதிப்பவர்களையும் பிடிக்கமாட்டேன் என்கிறது.

    ஏன் இவருக்கு சாதனைகளையும், சாதனை செய்பவர்களையும் பிடிக்க மாட்டேன் என்கிறது.

  51. வானத்தின் கீழே ://எல்லாரும் ஒப்புக் கொள்கிற விஷயத்தை, வேண்டுமென்றே வேறு கண்ணோட்டத்தில் தன் கருத்தைத் திணித்துப் பார்த்து திருப்திப்பட்டுக் கொள்ளும் பெர்வர்ட்டட் சிந்தனையாளர்…//

    ஸ்பெஷல் ரிப்பீட்டு.. (இது ஒரு பெரிய லிஸ்ட். அதில் முதன்மையானவர் ஞானி. பேசாமல் அவர் வக்கீலாயிருக்கலாம்)

  52. வாங்க சிவா. ரொம்ப நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க? ஏன் வலைப்பதிவு பக்கமே ஆளை காணோம். வேலையாக இருக்கிறீர்களா?

    அது என்னோட அம்மா இல்லைங்க ..அது யாருன்னே தெரியாது. பார்த்தா ரொம்ப வெகுளியா அமைதியான முகமா இருந்தாங்க..சரின்னு என் பதிவுல போட்டேன். படங்கள் அப்பப்ப மாறிட்டே இருக்கும் 🙂

    உங்கள் வருகைக்கும் அன்பிற்கும் நன்றி.

  53. As long as Abhinav doesn’t cheat, dope or buy the medal and win it through sheer hard work in the honest way, why do I care whether he paid his own expenses or the state sponsored him?
    It is a pity to mock a person who spent Rs. 10 crore from his own pocket to win a medal for the country.

  54. கிரி இங்கே எனக்கு ஒரு சிறு சந்தேகம்.
    அந்த ஏழு வயது விஷயம் எந்த பத்திரிகையில் வந்தது? அதற்கான ஆதாரங்கள் எதாவது உண்டா?
    இது உங்களுக்கான கேள்வி அல்ல, அவருக்கான கேள்வி 🙂

  55. நானும் அதையே தன் என் பதிவில் கேட்டு இருந்தேன். இருப்பினும் அந்த ஏழு வயது நிகழ்ச்சி உண்மை இல்லாத பட்சத்தில் அவர் எழுதியது இன்னும் கூட தவறு, அதனால் தன் கேட்டேன்.

  56. //கீ – வென் said
    குற்றம் சொல்லியே பேர் வாங்கும் புலவர்களில் இந்த ஆளும் ஒண்ணு.. தமிழனுக்கு மட்டும் எவன் வாழ்ந்தாலும் பொறுக்காது.//

    வெங்கி ரொம்ப சூடா இருக்கீங்க போல, மன்னிக்கவும் உங்க திட்டுகளை கொஞ்சம் எடிட் செய்து விட்டேன்.

    மற்றவர்கள் செய்யும் ஒரு திறமையான செயலை பாராட்டாமல் சிறு வயதில் செய்த தவறை குறை கண்டு கண்டுபிடிப்பது அவரின் வயதுக்கு அழகல்ல.

    உங்கள் வருகைக்கு நன்றி வெங்கி.

  57. //ஞானி அவர்கள் படத்தை பார்த்து கேட்கறீங்களா 🙂 [எனக்கு முடி இருக்கு :-)))]//

    நான் ஞானியைத்தான் சொன்னேன்.ஆனா கூடவே எனக்குன்னு இழுக்கிறதப் பார்த்தா ரூம்போட்டு யோசிக்கிறீங்கன்னு நல்லாவே தெரியுது:)

  58. //ராஜ நடராஜன் said…
    நான் ஞானியைத்தான் சொன்னேன்.ஆனா கூடவே எனக்குன்னு இழுக்கிறதப் பார்த்தா ரூம்போட்டு யோசிக்கிறீங்கன்னு நல்லாவே தெரியுது:)//

    அட ஏங்க நீங்க! நான் அப்படி இல்லைன்னு சொல்வதற்கு தான் அப்படி கூறினேன், நீங்க உடனே ரூம் போட்டு யோசிக்கறீங்கன்னு சொல்றீங்க. மற்றவங்களை குறை சொல்கிறவர்கள் தான் ரூம் போட்டு யோசிக்கணும், மனசுல பட்டத சொல்றவங்களுக்கு அதெல்லாம் எதுக்குங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here