என்னைப் பற்றி
நான் பதிவு எழுத ஆரம்பித்தது 2006 ம் ஆண்டு. திரட்டிகள் பற்றி தெரிய வந்தது 2008 ம் ஆண்டாகும். தமிழ்மணம் திரட்டியில் இணைத்த பிறகே பல வாசகர்களைப் பெற்றேன். பதிவு எழுதுவதிற்கு அடிமை ஆகி விடக்கூடாது என்று அளவாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். எழுதுவது எனக்கு ரொம்ப பிடித்தமான விஷயம். தமிழை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எனக்கில்லை பிழையில்லாமல் எழுதுவதே நான் தமிழுக்கு செய்யும் பெரிய தொண்டு. என்னுடைய எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய விருப்பம். அதை நாகரீகமான முறையில் செய்து கொண்டு இருக்கிறேன். எனக்கு அனைத்து பிரிவுகளிலும் ஆர்வம் என்பதால் அனைத்து பிரிவுகளிலும் ஜனரஞ்சகமாக எழுதி வருகிறேன். பதிவுலகின் எந்த அரசியலிலும் கலக்காமல் என் வழி தனிவழியாக இருப்பது பதிவுலகிற்கு நான் செய்யும் பெரிய சேவை


Comments on this entry are closed.