பையா வெற்றிக்கு பிறகு கார்த்தி நடித்து இருக்கும் படம் நான் மகன் அல்ல. வெண்ணிலா கபடிக்குழு என்ற வெற்றிப்படத்திற்கு பிறகு இயக்கி இருக்கும் படம் இயக்குனர் சுசீந்திரனுக்கு. இருவருக்குமே இந்தப்படம் நல்ல பெயரை பெற்றுத்தந்து இருக்கிறது வசூல் ரீதியாகவும் வெற்றி பெரும் என்று பலரால் கூறப்படுகிறது.
சுசீந்திரன் படம் பற்றி கூறவேண்டும் என்றால் ஒரு அமைதியான அழகான படத்தை தந்து விட்டு அடுத்த படத்தை அதற்கு சம்பந்தமே இல்லாமல் ரணகளமாக எடுத்து இருக்கிறார். இதைப்பற்றி கூறும் போது இயக்குனர் லிங்குசாமி நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. லிங்குசாமி ஆனந்தம் என்ற பக்கா குடும்பப்படத்தை தந்து அனைவரையும் உருக்கமாக பிழிந்து வெற்றி பெற்றார். அடுத்த படம் பற்றி வழக்கம்போல கேட்ட போது “இந்தப்படத்திற்கு கொஞ்சம் கூட தொடர்பில்லாத பக்கா ரொமாண்டிக் மற்றும் சண்டை படமாக எடுப்பேன்” என்றார் சொன்னது போலவே அதற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத “ரன்” படம் எடுத்து வெற்றி பெற்றார். சுசீந்திரனும் தனது முதல் படத்தின் எந்த வித சாயலும் இல்லாமல் இந்தப்படத்தை தந்துள்ளார்.
கதை ரொம்ப சிக்கலானதெல்லாம் இல்லை.. தன் தந்தையை கொன்றவர்களை (உடன் சில காரணங்களும்) மகன் பழிவாங்குகிறான். இது தான் படத்தின் கதையே. இதில் போதை பொருள்கள், தற்கால ஒரு சில இளைஞர்கள் நடவடிக்கை, சமூக சீர்கேடு போன்றவற்றை சேர்த்து தனது சிறப்பான திரைக்கதையின் மூலம் தொய்வில்லாமல் படத்தை கொண்டு செல்கிறார்.
படத்தின் ஹீரோ என்னை பொறுத்தவரை திரைக்கதை தான் கார்த்தி எல்லாம் அதற்கு அடுத்தது தான். இதைப்போல பல படங்கள் வந்து இருந்தாலும் மறுபடியும் மற்றவர்களுக்கு சலிப்பு தட்டாமல் கொடுத்து வெற்றி பெறுவது என்பது கொஞ்சம் சவாலான விஷயம் தான். படத்திற்கு பெரிய குறை அதிகப்படியான வன்முறை. வன்முறை என்று சொல்வதை விட ஒரு சில காட்சிகள். சுசீந்திரன் எதற்காக வெட்டுவதை (வெட்டுவதை அப்பட்டமாக காட்டவில்லை என்றாலும்) இந்த அளவிற்கு காண்பித்தார் என்று புரியவில்லை. சில காட்சிகள் ஹாரர் படத்தை நினைவூட்டுகிறது.
படம் துவங்கும் போதே ஒரு வன்புணர்வு காட்சி போல வரும் ஆனால் அதை முழுதும் காட்டாமல் காட்சியமைப்பின் மூலம் நமக்கு கூறி இருப்பார்கள் அதைப்போல இதையும் செய்து இருக்கலாம். அதிக வன்முறை பெண்களை கவராது குறிப்பாக திருமணமானவர்கள். கல்லூரி படிக்கும் பெண்கள் ஒருவேளை வன்முறை காட்சிகளை விரும்பலாம்..காரணம் இப்பெல்லாம் ஒரு சில பெண்கள்.. பையன் ரவுடி மாதிரி இருக்கணும் தம்மு தண்ணி அடிக்கணும் என்று விரும்புகிறார்கள் இப்படி இருந்தால் ரொம்ப மேன்லியாக இருக்கிறார்கள் என்று கற்பனை செய்து கொள்கிறார்கள். அவர்களை போன்றவர்களுக்கு வேண்டும் என்றால் இது ஏற்புடையதாக இருக்கலாம் பெரும்பாலான பெண்களுக்கு இது ஏற்புடையதாக இருக்காது மற்றபடி என்னைப்போல வன்முறை படங்கள் அதிகம் பார்ப்பவருக்கு இது எதுவுமில்லை.
கார்த்திக்கு இந்த கதாப்பாத்திரம் கச்சிதமாக பொருந்துகிறது. மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு எதுவும் செய்யாமல் தன் கதாப்பாத்திரத்தின் தன்மை அறிந்து அல்லது இயக்குனரால் ஒழுங்காக வேலை வாங்கப்பட்டு நடித்திருக்கிறார். காமெடி காட்சிகள் இவருக்கு நன்றாக பொருந்துகிறது. போறபோக்குல அப்படியே ஒரு சிரிப்பு வெடியை போட்டுட்டு போயிட்டே இருக்காரு. அதுவும் இவர் பணம் வசூல் பண்ண ஒரு வீட்டிற்கு சென்று அங்கே கிரிக்கெட் பார்த்து இவர் செய்யும் அலப்பறை செம காமெடி. இது மாதிரி பல இருக்கு. சண்டைக் காட்சிகளில் நிறைய மதிப்பெண் பெறுகிறார் அதற்கு இவரின் நம்பும்படியான உடல்வாகும் ஒரு காரணம்.
கார்த்தியின் அப்பாவிற்கு அடிபட்டு படுத்து இருப்பார் அதனால் குடும்ப வேலைகளையெல்லாம் கார்த்தி கவனிக்க வேண்டியதாக இருக்கும். ரேசன் மின்சார மற்றும் மளிகை கட்டணம் என்று நீளும் அது வரை ஜாலியாக சுற்றிக்கொண்டு இருந்தவர் இதை எல்லாம் பார்த்து குடும்பஸ்தன் என்றால் இத்தனை வேலை, பொறுப்பு இருக்கா! என்று அவர் மிரளுவதற்க்கு திரையரங்கில் பலத்த சிரிப்பலை.
காஜல் அகர்வால் பற்றி சொல்ல ஒன்றுமே இல்லை வழக்கமான தமிழ்ப்பட கதாநாயகி. அது ஏன் அனைத்து இயக்குனர்களும் எவ்வளவு நல்ல படம் எடுத்தாலும் கதாநாயகி கதாப்பாத்திரத்தை மட்டும் டம்மி பீசாகவே வைத்து இருக்கிறார்கள் உடன் கொஞ்சம்!!!!! லூஸ் மாதிரி. காஜல் அகர்வாலும் இதற்கு விதிவிலக்கல்ல. சும்மா வந்து கெக்கே பிக்கேன்னு சிரிக்கிறார் கார்த்தியுடன் செல்லமாக சண்டை போடுகிறார் அவ்வளவே. எனக்கு ஒரு சந்தேகம் காஜல் அகர்வால் பூஸ்ட் காம்ப்ளான் எல்லாம் நல்லா குடிப்பாங்க போல இருக்கு…. நல்லா செழிப்பா இருக்காங்க
என்னது காஜல் அகர்வால் முக்கியத்துவம் இப்ப புரியுதாவா! அப்படி எல்லாம் கேட்கப்படாது
படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் யுவன் சிறப்பாக செய்துள்ளார் குறிப்பாக பின்னணி இசை அருமை. கொஞ்சம் பரபரப்பான காட்சிகளில் டெம்ப்போ ஏற்ற பின்னணி இசை பெரிதும் உதவியுள்ளது.
முக்கால்வாசி படம் இயல்பாகவும் கடைசி கால் வாசி படம் சினிமாத்தனமாகவும் இருக்கிறது. கால்வாசி படம் சினிமாத்தனம் என்று நமக்கு தோன்றக்காரணமே அதற்கு முந்தைய காட்சிகள் இயல்பாக வந்து இருந்தது தான். அதுவும் அப்படியே இருந்து இருந்தால் நமக்கு பெரிய வித்யாசம் தோன்றாது. ஆனாலும் ரொம்ப வழக்கமான காட்சிகளாக காட்டாமல் பரபரப்புடன் நம்மை வைத்து இருப்பது இயக்குனரின் வெற்றி தான்.
இந்தப்படத்தில் குறிப்பிட வேண்டிய முக்கியமான நபர்கள் வில்லத்தனமாக நடித்து இருக்கும் கல்லூரி மாணவர்கள். அடேங்கப்பா! என்ன நடிப்பு! பின்னி பெடலெடுக்கிறாங்க. அதிலும் நீக்ரோ (இப்படி சொல்லக்கூடாது ஆனால் அவரை எப்படி அடையாளப்படுத்துவது என்று தெரியவில்லை) போல முடி வைத்து இருக்கும் பையன் வெளுத்து வாங்குறான். அட்டகாசம். அதில் லீடராக வருபவர் நடிப்பு கொஞ்சம் செயற்கையாக எனக்கு பட்டது. முகத்தை கோபமாகவும் ரவுடி மாதிரியும் வைக்க சிரமப்பட்டதை போல இருந்தது இயல்பான மிரட்டலாக இல்லை. மற்றபடி அனைவரும் அருமையாக நடித்து இருந்தார்கள். அதுவும் கடைசி சண்டை…. அசத்தல் போங்க! இந்தப்படத்தில் நடிக்கும் நீக்ரோ போல இருக்கும் பையனை கதாநாயகன் கார்த்தி மறந்தாலும் படம் பார்த்து வருபவர்கள் அவர் முகத்தை மறக்கமாட்டார்கள் அந்த அளவிற்கு பீதியை கிளப்பியுள்ளார்.
இந்தப்படம் வெற்றிப்படம் என்று கூறுகிறார்கள் ஆனால் எந்த ஒரு படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ் வருகிறார்களோ அந்தப்படமே வெற்றிப்படமாக அறிவிக்கப்படும். இந்தப்படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ் இருக்கலாம் ஆனால் குறைவாகத்தான் இருக்கும் அதுவும் பெண்கள் வாய்ப்பே இல்லை. எனவே வெற்றி பெறலாம் ஆனால் பெரிய வெற்றியை அடைய முடியுமா என்று தெரியவில்லை.
கார்த்திக்கிற்கும் ஒரு பெரிய ரவுடிக்கும் திடீர் நட்பை ஏற்படுத்தி அதை கடைசி வரை கொண்டு சென்று இருப்பது எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் சுவாராசியமாக இருந்தது. ரவுடிகள் உலகம் எப்படி இருக்கும் என்று அதன் இயல்பு கெடாமல் எடுத்து இருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக வழக்கமாக இவர்கள் சந்திக்கும் இடம், இருக்கும் இடத்தின் அமைப்பு என்று அனைத்திலும் கவனம் செலுத்தி செட்டிங்க்ஸ் எதுவும் போடாமல் அப்படியே எடுத்து இருப்பது காட்சிகளின் மீதான நம்பகத்தன்மையை நமக்கு தருகிறது. அதிலும் ஒரு மாணவனின் மாமாவாக வருபவரின் குரலும் உடல் மொழியும் அவர்கள் போடும் திட்டமும் அசத்தலாக உள்ளது. எந்த வித ஒப்பனையும் இல்லாமல் இருப்பது காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.
இந்தப்படத்தை வன்முறை என்ற குறுகிய வட்டத்திற்குள் சிந்திக்காமல் அதில் கூறி உள்ள விசயங்களை கவனித்தீர்கள் என்றால் அவர்கள் கூறி இருக்கும் சமூக அவலங்கள் புரியும். இதைப்போல கதைக்கு இதைப்போல வன்முறை அவசியம் தான் ஆனால் கொஞ்சம் அதிகமாகி விட்டது அவ்வளவே. அதிலும் குறிப்பாக ECR போன்ற கடற்கரை சாலைகளில் உள்ள சவுக்கு தோப்புகள் மற்றும் ஒதுக்குப்புறமான இடங்களில் காதலர்கள் என்ற பெயரில் கடலை போடவும், தடவவும் மற்றும் இன்னும் சில வேலைகளில் ஈடுபடவும் செல்பவர்களையும் மற்றும் நிஜமாகவே எந்த வித தவறான எண்ணத்துடனும் இல்லாமல் சாதாரணமாக சுற்றிப்பார்க்க செல்லும் ஜோடிகளையும் சுற்றி வளைத்து அந்தப்பையனை அடித்து போட்டு விட்டு அல்லது கட்டிப்போட்டு விட்டு அவன் முன்னாலே அந்தப்பெண்ணை வன்புணர்வு செய்து விட்டு ஓடிவிடுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் இதை வெளியே சொல்வதும் சிரமம் இதுவே இவர்களுக்கு தைரியத்தை கொடுக்கிறது. இதைப்போல பல சம்பவங்கள் தினமும் நடக்கிறது. என் நண்பர்களே இது பற்றி கூறி இருக்கிறார்கள். எனவே இந்தப்படத்தில் காட்டி இருப்பது 200% உண்மை.
அதே போல கல்லூரிகளில் எத்தனை மாணவர்கள் பொறுக்கித்தனமான வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்று பலருக்குத்தெரியும். இதைப்போல செயல்களில் ஈடுபடாத மாணவர்கள் இதைப்பார்த்து மனம் வெதும்பி எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக இருக்கிறார்கள். ஒழுங்கான கல்லூரி மாணவர்களை கேட்டால் கல்லூரி மாணவர்கள் மாணவிகள் சிலர் (அனைவரும் அல்ல) செய்யும் வேலைகளை!! கதை கதையாக கூறுவார்கள். பலரும் நினைப்பது போல மாணவர்கள் படிக்க மட்டுமே செய்வார்கள் என்று நினைத்தால் அது உங்கள் தவறு. சமீபத்தில் கூட ஒரு பையனை பணத்திற்காக மாணவர்கள் அடித்து கொன்றார்கள். எனவே வன்முறை என்ற குறுகிய வட்டத்திற்குள் படத்தில் வரும் காட்சிகளை அடக்கி விமர்சிப்பதை விட அதில் அவர்கள் கூற வரும் விஷயம் என்ன என்பதை புரிந்து கொள்வதே நமக்கு நல்லது. நாம் நினைக்கும் படி உலகம் அழகானது அல்ல.. அழகானது தான் நமக்கு இதைப்போல ஏதாவது நடக்காத வரை.
நான் மகான் அல்ல பெயர்க்காராணம் என்ன?
குற்றம் புரிந்தவர்களை சட்டப்படி தண்டிக்காமல் (பலர் அதில் இருந்து தப்பி வெளியே வந்து விடுவதால்) பாதிக்கப்பட்ட ஒருவன் தானே தண்டிக்க நினைப்பதால் அவன் மகான் அல்ல. இது தாங்க எனக்கு புரிந்த பெயர்க்காரணம்.
கொசுறு
சிங்கப்பூரில் பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் படம் தான் முதலில் வரும் அறிமுக நடிகர்கள் புது இயக்குனர்கள் குறைந்த பட்ஜெட் படங்கள் இங்கே வெளியாகாது. தமிழகத்தில் இதைப்போல படங்கள் வெற்றி பெற்ற பிறகே இங்கே வெளியிடுவார்கள். ஒரு சில படங்கள் வராமலே போய்விடும். ரேணிகுண்டா படமெல்லாம் நீண்ட நாட்களுக்கு பிறகே இங்கே வெளிவந்தது. அதே போல களவாணி படமும் தாமதமாகத்தான் வந்தது.
களவாணி படம் சிறப்பாக உள்ளது. ரொம்ப நாளைக்கு பிறகு படம் முழுவதும் சிரித்துக்கொண்டு இருந்தேன். எந்த ஒரு பில்டப்பும் இல்லாமல் பன்ச் வசனமும் இல்லாமல் நீட்டி முழக்கும் வசனம் இல்லாமல் இது மாதிரி பல இல்லாமல் வந்து அனைவரின் மனதையும் வெற்றி பெற்று இருக்கிறது. அதுவும் நான் பார்க்கும் போது படம் வெளிவந்து ரொம்ப நாள் ஆகி விட்டதால் படம் பார்க்க குறைவான நபர்களே வந்து இருந்தார்கள் ஆனாலும் மோசமில்லை. அதற்கே பலர் கீழே விழுந்து புரண்டு சிரிக்காதது தான் பாக்கி சும்மா எகிறி எகிறி சிரிக்கிறார்கள் அதுவும் என் நண்பன் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்துக்கொண்டே இருந்தான்
இன்னும் கூட்டமாக பார்த்து இருந்தால் அருமையாக இருந்து இருக்கும்.
படத்தில் விமல் தூள் கிளப்பியுள்ளார்.. அதுவும் ஒரு காட்சியில் ஓவியாவை வண்டியில் உட்கார வைத்து ஓட்டலாம் என்று அருகில் வந்ததும் அவர் இன்னொரு சிறுவனை உட்காரக்கூறி சொல்லவும்.. அதற்க்கு விமல் கடுப்பாகி இதற்குத்தான் வந்தோமா! என்பதை முனகிக்கொண்டே சொல்வதை இன்னும் என் நண்பர்களுடன் பேசும்போது சொல்லிச்சொல்லி சிரித்துக்கொண்டு இருக்கிறேன். இது மாதிரி படம் முழுக்க சிரிப்பு அணு குண்டுகள்.
கஞ்சா கருப்பை இவர்கள் ஒரு வழி பண்ணுவதும் அதை அவர் கடைசி வர சமாளிக்க படாதபாடு படுவதையும் பார்த்தால் உம்மனாமூஞ்சி கூட சிரித்து விடுவான். திருவிழாவில் இவர் மனைவியுடன் சந்தோசமாக சிரித்து பேசிக்கொண்டு இருக்க இதை பார்த்த விமல் நண்பர்கள்.. இருடி சந்தோசமா இருக்கியா! என்று அதற்கு(ம்) வேட்டு வைக்கும் காட்சி நமக்கு வெடிச்சிரிப்பை வரவழைக்கிறது. ஆனா அது செம ஐடியா! நான் கூட வேற எதோ பண்ணப்போகிறார்கள் என்றது பார்த்தால் சுளுவா அவருக்கு பேதி கிளப்பி விடுவார்கள் ஹா ஹா ஹா
நீங்கள் இது வரை படம் பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாகப் பாருங்கள் தனியாக அல்ல நண்பர்களுடன் அல்லது குடும்பத்துடன் அப்போது தான் ரொம்ப என்ஜாய் செய்து பார்க்க முடியும். நான் நேரமிருந்தால் இன்னொருமுறை செல்லலாம் என்று இருக்கிறேன்… நண்பர்களும் மறுபடியும் போகலாம் என்று அழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
Related posts:


{ 16 comments… read them below or add one }
//படத்தின் ஹீரோ என்னை பொறுத்தவரை திரைக்கதை தான்//
இது போதுமே, அப்ப படத்தை பார்க்கலாம் விடுங்க பார்த்துடுவோம்
பகிர்வுக்கு நன்றி!.
அப்புறம் நீங்க சொன்ன அந்த கல்லூரி மேட்டர் உண்மை, ஹி ஹி ஏன்னா நானும் அப்படிதான்
உங்களுடைய விமர்சனம் மிகவும் நன்றாக இருந்தது. பல விசயங்களை ஆராய்ந்திருக்கிறீர்கள்! வாழ்த்துகள்!
விமர்சனத்திற்கு நன்றி தல. களவாணி இன்னும் பாக்கல நேற்றுத்தான் கார்த்தியின் திரைப்படத்தைப் பார்த்தேன்.
விமர்சனத்திற்கு நன்றி
கிரி இப்போது தான் ஆனந்த விகடனில் நான் மகான் அல்ல விமர்சனம் படித்து விட்டு சிஸ்டத்தில் அமர்ந்தேன் உங்கள் விமர்சனம் படித்தேன் .விமர்சனம் நன்றாக எழுதுகிறீர்கள் .வாழ்த்துக்கள்
களவாணி படம் ரொம்ப நாட்களாக பார்க்கணும் என்று நினைத்து போக முடியவில்லை பார்த்து விட்டு சொல்கிறேன் நன்றி
கிரி படம் பார்த்து விட்டேன், அருமையாக இருந்தது.
அப்புறம் ஒரு விஷயம்
//ஒழுங்கான கல்லூரி மாணவர்களை கேட்டால்//
நானும் அப்படிதான் என்று போன பின்னூட்டத்தில் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு, என் கல்லூரியில் போய் கேட்க கூடாது என்பதை சொல்ல மறந்து விட்டேன்
.
கதை ரொம்ப சிக்கலானதெல்லாம் இல்லை.. தன் தந்தையை கொன்றவர்களை (உடன் சில காரணங்களும்) மகன் பழிவாங்குகிறான்.
Template தீம் ஆக இருந்தாலும் குடுத்து இருக்கும் விதம் அருமை
எனக்கு என்னவோ காதல் காட்சிகள், ஹீரோவின் தோழி அனைத்தும் ரொம்ப செயற்கையாக தோன்றியது. வழக்கம் போல ஹீரோவின் தங்கை யும்….
அதற்கு மாறாக ஜெயப்ரகாஷ் மற்றும் நண்பர்கள் வெகு இயல்பு…
அதில் லீடராக வருபவர் நடிப்பு கொஞ்சம் செயற்கையாக எனக்கு பட்டது. முகத்தை கோபமாகவும் ரவுடி மாதிரியும் வைக்க சிரமப்பட்டதை போல இருந்தது இயல்பான மிரட்டலாக இல்லை.
அவர் கொஞ்சம் கலராக இருப்பதால் அப்படி தோன்றி இருக்கும் என நினைக்கிறேன்
கார்த்திக்கிற்கும் ஒரு பெரிய ரவுடிக்கும் திடீர் நட்பை ஏற்படுத்தி அதை கடைசி வரை கொண்டு சென்று இருப்பது எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் சுவாராசியமாக இருந்தது.
எனக்கு ஒரு சந்தேகம் காஜல் அகர்வால் பூஸ்ட் காம்ப்ளான் எல்லாம் நல்லா குடிப்பாங்க போல இருக்கு…. நல்லா செழிப்பா இருக்காங்க
நல்லா கேட்டிங்க ஒரு கேள்வி, காஜல் பண்ற வொர்க் அவுட் ல நம்ம கார்த்தி கொஞ்சமாவது பண்ண சீக்கிரம் உடம்ப ட்ரிம் பண்ணிடலாம்
நாம் நினைக்கும் படி உலகம் அழகானது அல்ல.. அழகானது தான் நமக்கு இதைப்போல ஏதாவது நடக்காத வரை.
இதுதான் படத்தில் சொல்ல வந்த விஷயம் என நினைக்கிறேன்
இரண்டு படங்களையும் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை, நான் மகானல்ல இப்போது அருகில் ஓடிக்கொண்டிருந்தாலும் எந்திரன் பார்த்த பின்புதான் எந்த புதுப்படமும் பார்ப்பது
இரண்டு படங்களும் பார்த்து விட்டேன்…. ஆனால் “களவாணி” சான்ஸே இல்லை.. இந்த அளவிற்கு நான் எந்த படத்தையும் ரசித்ததில்லை.. அதுவும் கடைசி காட்சி சூப்பரோ சூப்பர்….
சிங்கக்குட்டி, மோகன், மயூ, சரவணன், சதா, ஜீவதர்ஷன் மற்றும் ஜாவா வருகைக்கு நன்றி
@சிங்கக்குட்டி நடத்துங்க.. நீங்க ரொம்ப நல்லவருன்னு எனக்கு தெரியும்
@ சதா ஹீரோவின் தோழி மற்றும் தங்கை நடுத்தர குடும்பத்தைப்போல (தோற்றத்தில்) இல்லாமல் இருந்தது காரணமாக இருக்கலாம். அந்தப்பையன் கலராக இருப்பதால் எனக்கு அவ்வாறு தோன்றவில்லை.
@ஜீவதர்சன் தலைவர் படம் இப்ப வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை.. பேசாம பாருங்க
@ஜாவா வாங்க.. ரொம்ப நாளா ஆளைக்காணோம்
களவாணி எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.
கதாசிரியர் கூட இவ்வளவு சிரமப்பட்டிருக்க மாட்டார் போலருக்கு!
அப்படி ஒரு (தெளிவான) விமரிசனம்!
கிரி
நல்ல விமர்சனம்…..
களவாணி பார்த்தேன்…. ரசிக்கும்படியாக இருந்தது…..
எந்திரனுக்காக வெயிட்டிங்….
உங்ககிட்ட இருந்து எந்திரன் பாடல் விமர்சனம் எதிர்பார்த்துட்டு இருக்கோம் பாஸ்.
மாயவரத்தான் மற்றும் கோபி வருகைக்கு நன்றி
@ குமார் உங்களுக்கான பதில் இங்கே இருக்கு
கிரி களவாணி படம் பார்த்தேன் குடும்பத்துடன் எல்லோரும் சிரித்து ரசித்தோம் எங்கள் தஞ்சை வட்டார படம் என்பதால் தஞ்சாவூர் சென்று வந்தது போல் தோன்றியது
வணக்கம்
உங்களின் திரைப்பட விமர்சனம் மிகவும் அருமையாக உள்ளது. ஒவ்வொருக் காட்சியையும் வருணித்து விமர்சனம் செய்கிறீர்கள். உங்கள் விமர்சனம் பெரும்பாலும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது.
Movie Was Very Super..