கடும் போட்டியில் அரசு கேபிள் மற்றும் DTH


பதிவு செய்தது: கிரி @ Thursday, August 28, 2008
பிரிவு: செய்தி, பொது COMMENTS (15)

பதிவு செய்தது: கிரி @ Tuesday, August 26, 2008
பிரிவு: செய்தி, விளையாட்டு COMMENTS (10)

பதிவு செய்தது: கிரி @ Friday, August 22, 2008
பிரிவு: அனுபவம், பயணம் COMMENTS (22)
அடப்பாவிகளா! சாப்பாடு வைக்கிற வேலைனு சொன்னானுக நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி வந்தா இப்படி முதலைக்கு கொடுக்க சொல்றானுகளே
பூ அழகா! நான் அழகா! :-)
கண்ணாடி இல்லாம இருக்கிறதை கண் சிமிட்டும் நேரத்துல எடுத்துட்டானுகளே!
மச்சான்! இன்னைக்கு யாருக்கு இந்த கொக்கு மாட்டுதோ அவங்களுக்கு இன்னைக்கு "கொக்கு" பரோட்டா தான்
நமீதா என் இப்படி சோகமா இருக்காங்க..அது வேற ஒண்ணும் இல்ல அவங்கள இப்படி போர்த்திட்டு இருக்குற புடவையில பார்த்ததுல வயசான ரசிகர் ஒருவருக்கு நெஞ்சு வலி வந்து அங்கேயே கீழே விழுந்துட்டாராம்
ஹய்யோ அஜித் குழந்தை பார்த்து நம்ம கண்ணே பட்டுடும் போல இருக்கே ..
ஹி ஹி நான் வீட்டுல உட்காந்து சீரியல் பார்த்துட்டு இருக்கேன்னு நம்பி ஏமாந்துட்டானுக கிறுக்கு பசங்க
அடங்கொக்கமக்கா! இம்மாம் பெரிய தொகையா! பார்த்தாலே கண்ண கட்டுதே
இந்த சங்கி மங்கிக ஆர்வத்துக்கு அளவே இல்லாம போச்சே!
யோவ்! என்னாங்கய்யா விளையாடுறீங்களா இதுல எப்படி மணி பார்க்கறது!... உங்க வித்யாச நினைப்புக்கு ஒரு வரை முறையே இல்லையா !!!

பதிவு செய்தது: கிரி @ Thursday, August 21, 2008
பிரிவு: படங்கள், பொழுதுபோக்கு COMMENTS (34)
"ஏழு வயதில் தன் வீட்டு வேலைக்காரி தலையில் பாட்டிலை வைத்து ஏர் கன்னால் சுட்டு வீழ்த்திய பணக்காரச் சிறுவன்தான் அபிநவ். தன் அம்மா தலையிலோ, அப்பா தலையிலோ, தங்கை தலையிலோ பாட்டிலை வைத்து சுட்டுப் பழகவில்லை"
இவ்வாறு ஞானி அவர்கள் கூறி உள்ளார்.
அபினவ் சிறு வயதில் செய்த தவறை, அவர் தற்போது பெற்று இருக்கும் வெற்றியோடு ஒப்பிட்டு கேவலப்படுத்தினால் இதை என்னவென்று கூறுவது? சிறுவயதில் யார் தான் தவறு செய்வதில்லை பெரியவர்களாகிய நீங்களே ஒருவர் பெற்ற வெற்றியை பாராட்டாமல் அவர் எப்போதோ செய்த தவறை காரணம் காட்டி சிறுபிள்ளை தனமாக பேசும் போது அவரை குறை கூறுவதில் என்ன நியாயம்?
இந்தியா தங்கமே வாங்குவதில்லை என்று கூப்பாடு போடுவது, அப்படி யாராவது அபினவ் போல வாங்கினால் அவர்களை பாராட்டாமல் இதை போல குறைகளை பெரிதாக்கி அவரை பணக்காரன், பணக்கார விளையாட்டு, குருவிய சுட்டு பழகினான் வேலைக்காரியை சுட்டு பழகினான் என்று கூறி பெற்று தந்தவரின் ஆர்வத்தையும் குறைத்து விடுகிறார்கள். ஞானி அவர்களை போல நான்கு பேர் கூறுவதை ஊடகங்களும் தங்கள் வியாபரத்திற்காக பெரிதுபடுத்தி அடுத்த முறை ஒலிம்பிக்கில் இவரை போன்றவர்கள் கலந்து கொள்ளும் எண்ணத்தை குழி தோண்டி புதைக்க வைத்து விடுகிறார்கள்.
அப்துல்கலாம் "கனவு காணுங்கள்" என்று கூறியதை அவர் எதோ தூக்கத்தில் காணும் கனவு என்று கூறியதை போல விமர்சித்தவர் ஞானி அவர்கள், அதனால் அபினவ் பெற்ற வெற்றியை இப்படி குறை கூறியதில் ஆச்சர்யம் இல்லை.
வித்யாசமாக கூறினால் தான் மற்றவர்களிடையே தனித்து தெரிய முடியும் என்பதற்காக இவ்வாறு கூறி நம்முடைய பெருமையை மற்ற நாட்டவர் இடையே தங்களால் முடிந்த அளவாவது உயர்த்தி இருக்கும் இவர்களை போன்றவர்களின் வெற்றிகளை குறை கூறாதீர்கள் அல்லது தேடி கண்டு பிடிக்காதீர்கள்.
ஞானி அவர்கள் இவர்களை போன்றவர்களை உயர்த்தி கூறவில்லை என்றாலும் பரவாயில்லை, இதை போல கூறி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காமல் இருந்தாலே போதுமானது.
ஒருத்தன் வளரவில்லை திறமையில்லை என்று கூறுகிறார்கள், இவ்வாறு வெற்றி பெற்றால் அவர் பெற்ற வெற்றியை மட்டம் தட்டி இதை போல குறை கூறி விமர்சிக்கிறார்கள்....அனைவரையும் உட்கார்ந்த இடத்தில் இருந்து விமர்சிப்பது எளிது. ஆனால் இதை போல சாதனைகளை செய்வது தான் மிக கடினம்.
அடபோங்கப்பா! நீங்களும் உங்க விமர்சனமும்.. :-(

பதிவு செய்தது: கிரி @ Tuesday, August 19, 2008
பிரிவு: செய்தி, விவாதம் COMMENTS (66)
இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்து ஒரு வருடம் ஆக போகிறது, ஆஹா! எல்லோரும் சிங்கப்பூர்! சிங்கப்பூர்!! னு சொல்றாங்களே நாமும் அங்கே வேலைக்கு செல்ல வேண்டும் என்று முயற்சித்து வேலையும் கிடைத்து வந்து விட்டேன். வந்த பொழுது சுகாதாரமான இடம், சுத்தமான சாலை, போக்குவரத்தை மதிக்கும் மக்கள், அகலமான சாலைகள், பிரம்மாண்ட கட்டிடங்கள் நவநாகரீக மக்கள் என்று எங்கு பார்த்தாலும் ஆச்சர்யம். ஒவ்வொன்றையும் பார்க்கும் போதும் அட! சிங்கப்பூர் சிங்கப்பூர் தாண்டா னு நானே சொல்லிப்பேன்...
ஒரு வாரம் போய் இருக்கும் கொஞ்சம் சுரத்து குறைந்து விட்டது..ஏதோ குறையுதே என்னன்னு புரியலையே ன்னு மண்டை குடைய ஆரம்பித்து விட்டது. அது வேறு ஒன்றும் இல்லை நம் மீது அன்பாக இருக்கும் குடும்பத்தையும், எந்த பிரச்சனை என்றாலும் கை கொடுக்கும் நண்பர்களையும் எங்கே சென்றாலும் அவர்கள் உடன் வரும் சந்தோசத்தையும் விட்டு வந்தது தான் என்று உரைத்தது. என்ன செய்வது நம் விருப்பம் அல்லாமல் குடும்ப தேவை என்ற ஒன்றிக்காகவும் வந்து இருக்கிறோமே வேறு வழி இல்லையே இருந்து தானே ஆக வேண்டும் என்று தற்போது அமைதியாக வாழ்க்கை போய் கொண்டு இருக்கிறது. எந்த ஒரு பிரச்சனையும் இல்லை நேரத்துக்கு ரயில், பேருந்து, காஸ் சிலிண்டர், மின்சாரம், தண்ணீர் எல்லாமே கிடைக்கிறது இருந்தும் ஏதோ ஒன்று இல்லை.. எஸ்.ஜே.சூர்யா காமெடி போல "இருக்கு ஆனா இல்ல"
சென்னையில் இருந்த போது சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட காலம் உண்டு, விரைவு, சொகுசு பேருந்தில் செல்ல யோசித்ததுண்டு, ஒரே அறையில் இடம் இல்லாமல் நண்பர்களோடு நெருக்கி கொண்டு படுத்துண்டு அன்று கிடைத்த சந்தோசம் எனக்கு தற்போது கிடைக்கவில்லை. தற்போது எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் ஏதோ ஒன்றை இழந்ததை போன்ற உணர்வே.
மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, எனக்கு இந்தியா தான் சொர்க்கமாக தெரிகிறது, அதுவும் நம்ம ஊரு. நட்பின் அருமை பிரிவில் தான் தெரிகிறது, அதை உணர்ந்தவங்களுக்கு மட்டுமே அது புரியும்.
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
இளையாராஜாவின் இந்த பாடல் என் மனநிலையை பிரதிபலிப்பதால் இதை இணைத்துள்ளேன்
|

பதிவு செய்தது: கிரி @ Friday, August 15, 2008
பிரிவு: வாழ்க்கை அனுபவம் COMMENTS (49)
















பதிவு செய்தது: கிரி @ Wednesday, August 13, 2008
பிரிவு: படங்கள் COMMENTS (24)


இது ஒரு பக்கம் மகிழ்ச்சியை அளித்தாலும் மோனிகா என்ற பெண்ணுக்கு நடந்த நிகழ்வு மிக கொடுமையானது. அவருக்கு பரிசோதனை செய்த போது அவர் போதை பொருள் பயன்படுத்தியதாக கூறி அவரை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப மறுத்து விட்டார்கள், இதனால் அவர் அழுது பேட்டி கொடுத்ததை பலரும் தொலைகாட்சியில் பார்த்து இருப்பீர்கள். நான் போதை பொருள் பயன்படுத்தி இருந்தால் என்னை சாலையில் வைத்து சுட்டு விடுங்கள் என்று விரக்தியில் அழுது கொண்டே கூறி இருந்தார். திரும்ப பரிசோதனை செய்ததில் அவர் போதை பொருள் பயன்படுத்தவில்லை என்று கண்டறியப்பட்டது. ஆனால் தற்போது அது காலம் கடந்த செயலாகி விட்டது.
மோனிகா ஒலிம்பிக்கிற்காக சீனா செல்ல 3.30 மணி விமானத்திற்கு தயாராக இருந்தார் ஆனால் இந்த பரிசோதனை செய்தி 12.30 மணிக்கு வந்ததால் அவரை போக விடாமல் தடை செய்து விட்டார்கள். திரும்ப பரிசோதனை செய்து அவர் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்கும் முன்பே ஒலிம்பிக் ல் பதிவு செய்வதற்கான நேரம் முடிந்து விட்டது.72 மணி நேரத்துக்கு முன்பே இந்த பரிசோதனையை செய்து இருக்க வேண்டும், ஆனால் அது செய்யப்படவில்லை. மேலும் இவர் அங்கே சென்ற பிறகு சோதனை முடிவை வெளியிட்டால் அவர் இரண்டாவது முறை சோதனை நடைபெற்று போட்டிக்கு தயார் ஆகிவிடுவார் என்று திட்டமிட்டு இதை போல செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஒரு சர்வேதச விளையாட்டு வீரரின் வாழ்க்கையை Sports Authority of India கெடுத்துள்ளது. இதில் பலர் மோனிகா ஒலிம்பிக் செல்ல கூடாது என்ற எண்ணத்தில் திட்டமிட்டு இவ்வாறு செய்துள்ளனர் இதற்க்கு CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மணிப்பூர் முதலமைச்சர் கோரியுள்ளார்.
என்ன விசாரணை செய்து என்ன ஆக போகிறது? ஒரு பெண்ணின் வாழ்க்கையையே வீணடித்து விட்டார்கள். இதற்காக அவர் எத்தனை காலம் கஷ்டப்பட்டு பயிற்சி செய்து கொண்டு எத்தனை கனவில் இருந்து இருப்பார். அதை எல்லாம் இவர்களால் திருப்பி தர முடியுமா? இரண்டாவது பரிசோதனை முடிவு வெளிவரும் வரை மற்றவர்களின் கேலி பேச்சுக்கும் கிண்டலுக்கும் ஆளாகி மன உளைச்சலில் இருந்ததை இவர்கள் திரும்ப பெற முடியுமா? அவர் பதக்கம் வாங்குகிறாரோ இல்லையோ அது வேறு விஷயம் ஆனால் ஒருவரின் நீண்ட நாள் ஆசையை போவதற்குண்டான திறமையை நிரூபித்தும் இதை போன்ற தவறு செய்பவர்களால் நிராகரிக்கப்பட்டு விட்டது சரியா?
இனி அவர் திரும்ப என்ன தான் முயன்றாலும் அவரால் முன்பு போல ஆர்வத்துடன் கலந்து கொள்ள முடியுமா! அவரை வேண்டும் என்றே ஒரு சில புரிந்து கொள்ளாத அடி முட்டாள்கள் கிண்டல் செய்வதை தான் தவிர்க்க முடியுமா?
இவ்வாறு ஆர்வத்துடன் இருப்பவரை பகமை உணர்வாலும் காழ்ப்புணர்ச்சியாலும் கேவலமான முறையில் தடுப்பவர்கள் இருக்கும் வரை நம் நாடு வெண்கல பதக்கத்துக்கு கூட முக்கி கொண்டே தான் இருக்கும்.
நம்முடைய மக்கள் தொகை 110 கோடியை தொடப்போகிறது, ஆனால் ஒரு தங்கம் பெற்றதற்கு அதை பெரிய அளவில் கொண்டாடும் நிலைமையிலேயே நாம் இருக்கிறோம். தென் இந்தியர் ஒரு பதவியில் இருந்தால் அவர் தென் இந்தியர்களை மட்டும் சேர்க்கிறார், வட இந்தியர் இருந்தால் அவர்களை சேர்ந்தவர்களை மட்டுமே சேர்க்கிறார், அரசியல்வாதிகள் சிபாரிசு அரசு அதிகாரிகள் சிபாரிசு என்று வருபவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. உண்மையான ஆர்வமும் திறமையும் இருக்கும் பலர் புறக்கணிக்கப்படுகின்றனர். இவ்வாறு நிலை மாற வாய்ப்பு தற்போது இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
அதுவரை நாம் இதை போல ஒரு தங்க பதக்கத்துக்கு மின்னஞ்சல் பார்வர்டு செய்தும், குறுந்தகவல் அனுப்பியும் இதை போல பதிவுகள் இட்டும் அல்ப சந்தோசம் அடைந்து கொள்வோம். அதை தவிர நமக்கு வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.
எதுவாகினும் தங்கம் பெற்ற அபினவ் பிந்த்ரா க்கு என் மனமார்ந்த பாரட்டுகள். கிடைத்த பரிசு பணத்திலேயே திருப்தி அடைந்து மேலும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து சாதிக்க வேண்டுகிறேன்.

பதிவு செய்தது: கிரி @ Tuesday, August 12, 2008
பிரிவு: செய்தி, விவாதம் COMMENTS (32)
உலகம் முழுவதும் சுற்றுப்புற சீர்கேட்டால் வெப்பத்தின் அளவு அதிகரித்து கொண்டு வருகிறது. இதனால் பருவ நிலை மாற்றங்கள் ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு பஞ்சம் பனி உருகுதல் கடல் நீரின் அளவு மிக வேகமாக அதிகரித்தல், பல புதிய நோய்கள், என்று அனைவரையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.
வெப்பமே பார்த்திராத நாடுகள் கூட தற்போது வெப்பத்தை பார்த்து பயந்து போய் உள்ளன. மின்சிறி என்ற ஒன்றை பயன்படுத்தி இருக்காத நாடுகள் எல்லாம் அதை பயன்படுத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டன.
இந்நிலைக்கு காரணம் காடுகள் அழிப்பு, எந்த காலத்திலும் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு, தொழிற்சாலைகள் வெளியிடும் சுத்திகரிக்காத கழிவுகள், குண்டு பல்புகள், இவை தவிர பல காரணங்கள், இவை நம் அன்றாட வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவை.
நம்மால் முடிந்த அளவு இதற்க்கு துணை போகாமல் இருக்கலாம், முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கலாம், குண்டு பல்பு அதிக வெப்பத்தை உண்டு பண்ணுகிறது அதை பயன்படுத்துவதை தவிர்க்கலாம், தங்களது வீடுகளில் முடிந்தவர்கள் மரம் வளர்க்கலாம், மின்சார பயன்பாடு இல்லாத போது அதை எரிய விட்டு கொண்டு இருப்பதை நிறுத்தலாம். இவை எல்லாம் நம்மால் முடிய கூடிய எளிதான உதவிகளே.
இன்று இரவு (8-8-08) 8 மணிக்கு இதை மக்களிடைய இதன் தாக்கத்தை உணர செய்ய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த எக்ஸ்னோரா அமைப்பு அனைவரையும் 8 நிமிடம் அனைத்து மின்சார விளக்குகளையும் அனைத்து இதற்க்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. (இதை பயன்படுத்தி எவனும் திருடிட்டு போகாம இருந்தா சரி)
நம் தமிழக அரசு பாதி நேரம் மின்சாரமே தருவதில்லை, இவர்கள் உலக மக்கள் மீது ரொம்ப அன்பு வைத்து ரொம்ப தீவிரமா கடை பிடிக்கறாங்க போல, சரி அதை விடுங்க. அது தான் அவர்களே பாதி நேரம் மின்சாரத்தை நிறுத்தி விடுகிறார்களே நாம் 8 நிமிடம் நிறுத்தி புதுசா என்ன செய்ய போகிறோம் என்று கேட்க வேண்டாம், இதனால் நாம் பெரிய உதவி செய்துவிட போவதில்லை, இது முக்கியமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு செய்ய சொல்கிறார்கள், மற்றபடி வேறு எந்த விசயமும் இல்லை. எனென்றால் பாதி பேருக்கு வருஷா வருஷம் வெய்யில் அதிகமாகிட்டே வருகிறதே அப்படிங்கற அளவுல தான் தெரியும் ஆனால் அது எதனால் அதிகம் ஆகிறது என்று தெரியாது. அதனால் விதண்டா வாதம் பேசாமல் உலக சுற்றுப்புற சூழலில் பங்கெடுத்து கொள்ளுங்கள்.
நேற்று பல பதிவர்களின் பதிவுகளில் சென்று இது பற்றி பின்னூட்டம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்த கோவை விஜய்க்கு என் வாழ்த்துக்கள்.










பதிவு செய்தது: கிரி @ Friday, August 08, 2008
பிரிவு: இயற்கை, செய்தி, பொது COMMENTS (51)