Showing newest 13 of 14 posts from June 2008. Show older posts
Showing newest 13 of 14 posts from June 2008. Show older posts

Saturday, June 28, 2008

வெள்ளைக்காரர்களை கண்டு நமக்கேன் தாழ்வு மனப்பான்மை?




நான் கணிப்பொறி துறையில் முதலில் இருந்தது பீல்ட் வேலையில் தான், ஒவ்வொரு நிறுவனமாக அல்லது வீடாக சென்று அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் மென்பொருள் மற்றும் கணிப்பொறி பிரச்னையை சரி செய்வது தான் என் வேலை, அப்போது எனக்கு வெளிநாட்டு நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.





அதன் பிறகு என் நண்பன் செய்த உதவி மூலம் நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு பல நாட்டு நபர்களுடன் பழக வாய்ப்பு கிடைத்தது. எனக்கு முதலில் வெளிநாட்டு நபர்கள் என்றால் அது வெள்ளை தோல்காரர்கள் என்று எண்ணம், கறுப்பர்கள் (நீக்ரோ) பற்றி அவ்வளவாக நினைப்பதில்லை. எனக்கு அவர்களிடம் பேசுவது என்றால் ஏனோ உள்ளுக்குள் பயமாகவே இருக்கும் (நமக்கு ஆங்கிலம் வேறு அப்போது சரியாக வராது, அப்ப இப்ப சரியான்னு கேட்காதீங்க ஹி ஹி ஹி இப்போதும் சுமார் தான்)





அவர்கள் நடை உடை பாவனை பேச்சு எல்லாமே ஒரு இது இது ... ஆங்! ஒரு கெத்து இருக்கும். அதனாலேயே எனக்கு அவர்கள் மீது ஒரு ஆச்சர்யம் மற்றும் கவர்ச்சி ..ஆகா என்னமா இருக்காங்க! எப்படி சூப்பரா பேசுறாங்க தைரியமா ன்னுட்டு. அப்போ எனக்கு கொஞ்சம் விவரம் இல்லா வயசு மற்றும் கொஞ்சம் வெகுளி (சத்யமாங்க நம்புங்க) ரொம்ப எல்லாம் யோசித்து பார்க்க மாட்டேன், அப்புறம் எதாவது விசயத்துல அடி வாங்குனதும் உஷாராகி அந்த தவறை செய்ய மாட்டேன்.





வெளிநாட்டினர் வந்து பேசினாலே வாய் முழுவதும் பல்லாகி விடும், அவங்க சொல்லுற சப்பை ஜோக்குக்கெல்லாம் எதோ கவுண்டமணி ஜோக் கேட்டா மாதிரி விழுந்து விழுந்து சிரிப்பேன், நான் மட்டுமில்ல பெரும்பான்மையானவங்க அப்படி தான் இதுல நிறுவன பெரிய தலைகளும் அடக்கம். அவங்க வரும் போது மட்டும் மரியாதையின் அளவு கூடி விடும், உடனே அவர்கள் கேட்கும் கேள்விக்கு எச்சி முழுங்கி இயல்பாக இல்லாமல் ஒரு வித பயத்துடனும் எதோ காவல் துறை அதிகாரியிடம் பதில் சொல்வது போலவே எல்லோரும் நடந்து கொள்வார்கள். இதில் ஒரு சிலர் விதிவிலக்கு. எங்கும் எதற்கும் விதிவிலக்கு உண்டு அல்லவா!





கிடைத்த அனுபவங்கள் நண்பர்களிடம் அறிந்து கொண்டது என்று இந்த நிலை என்னிடம் நாளாக நாளாக மாறியது. 50 ருபாய் கொடுத்தால் 500 ரூபாய்க்கு முகபாவனை காட்டக் கூடாதுன்னு ரொம்ப தாமதமா தான் புரிந்தது.





என் அப்பா சிங்கப்பூர் வந்த பொழுது, என் அப்பா இங்குள்ளவர்களிடம் பேசியது மற்றும் அவர்களுக்கு கொடுத்த அதீத மரியாதை, சிரிப்பு மற்றும் பணிவு எனக்கு ரொம்ப அதிகமாகவே தோன்றியது, இது குறித்து என் அப்பாவுடன் எனக்கு வாக்குவாதம் ஏற்பட்டது (என் அப்பாவுக்கும் வெளிநாடு புதிதல்ல, ஆனால் இடைவெளி அதிகம், 40 வருடங்களுக்கு பிறகு இந்த பயணம்), ஏன் அவர்களிடம் இப்படி பணிந்து போகிறீர்கள், அவர்களும் நம்மை போலவே தானே டோண்டு ஐயா பாணியில் சொல்வதென்றால் நாம் என்ன அவர்களுக்கு அடிமையா? நமக்கு இன்னும் அந்த அடிமை புத்தி மறையவில்லையா? எதற்கு அவர்களுக்கு தேவை இல்லாமல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அல்லது ரொம்ப பணிவாக இருக்க வேண்டும் என்று விவாதம் சென்றது சண்டை எல்லாம் இல்லைங்க ஒரு கலந்துரையாடல்.





இதுவே என்னை பதிவு எழுத தூண்டியது. மற்றவர்களிடம் பணிவாக இருப்பது தவறு என்கிற அர்த்தத்தில் கூறவில்லை, பணிவு வேறு அதீத பணிவு வேறு. அலுவலகத்தில் நாமும் பணி புரிகிறோம் நம்மை போலவே அவர்களும் வேறு ஒரு ஊரில் பணி புரிகிறார்கள், இதில் என்ன அவர்கள் உயர்ந்து விட்டார்கள்? நாம் ஏன் அவர்களுக்கு பயந்து இருக்க வேண்டும். நாம் நம் வேலையை செய்ய இவர்களிடம் ஏன் பயப்பட வேண்டும் வழிந்து கொண்டு இருக்க வேண்டும். அதற்காக அவர்களை மதிக்க வேண்டாம் என்கிற ரீதியில் கூறவில்லை. இயல்பாக இருக்க வேண்டியது தானே என்று கேட்கிறேன். நம் தன்மானத்தை ஏன் விட்டு தர வேண்டும்.





வெளிநாட்டில் இருந்து ஒரு கடை நிலை ஊழியர் வருகிறார், மற்றும் கோவையில் இருந்து ஒரு மிக உயர் அதிகாரி வருகிறார் என்றால் நம்மவர்கள் வெள்ளை தோல் காரர் என்பதால் அவரை தான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்களே தவிர இவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். ஏன் இந்த பாகுபாடு? அவரிடம் கடலை போடுவதை பெருமையாக கருதுவார்கள், அவர் எனக்கு நண்பர் என்று கூறுவதில் பெருமிதம் அடைவார்கள், அந்த நபர் அங்கு சென்று ஒரு மின்னஞ்சலும் அனுப்பி விட்டால் போதும் இவங்க மற்றவர்களிடம் பண்ணுற அலப்பறை தாங்காது. அவருடன் நட்பு பாராட்டுவது தவறில்லை,ஒரு பெருமைக்காக செய்தால் அதை என்னவென்று சொல்வது.





இதே நம்மவர்கள் கறுப்பர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தால் கண்டுக்க மாட்டார்கள், ஒரு இளக்காரமான நிலை தான் காணப்படும். நம்மவர்களே இப்படி ஒரு இனவெறி காட்டும் போது, வெள்ளை தோல் காரர்கள் கருப்பர்களை மதிக்காமல் இருந்ததில் எனக்கு ஆச்சர்யம் இல்லை. நீங்கள் அலுவலகம் என்றெல்லாம் கவனிக்க தேவையில்லை, வெள்ளை தோல் காரர்களை பேருந்திலோ அல்லது அவர்கள் நம் மக்கள் அருகில் உட்கார்ந்தாலோ போதும் அவர்களுக்கு பெருமை பிடிபடாது, அப்படியே குளிர்ந்து விடுவார்கள். இதே கறுப்பர் அருகில் அமர்ந்தால் வெறுப்பின் உச்சிக்கே சென்று விடுவார்கள், அல்லது ஒரு நக்கலான பார்வை முகத்தில் இருக்கும்.





கருப்பான தோல் என்றால் அப்படி என்ன இளக்காரம்? அவர்கள் எதில் குறைந்து விட்டார்கள்? எந்த விதத்தில் அவர்கள் தாழ்ந்து விட்டார்கள்? நாம் கருப்பு மற்றும் அடிமை பட்டு இருந்தோம் என்ற எண்ணம் மேலோங்கியே தாழ்வு மனப்பான்மையில் வெள்ளை தோல்காரர்களிடம் மிக பணிவாக இருக்கிறோம்(வேறு காரணம் உங்களுக்கு தெரிந்தால் கூறலாம்), இந்நிலையில் கருப்பர்களை (நீக்ரோ) பார்த்து நாம் கேவலமாக கருதுவதை நினைத்து சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.






மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் அவர்களின் தோல் நிறம் கொண்டு மதிப்பு தரும் நிலை என்று மாறுமோ!

Buzz It

கமலுக்கு என் பாராட்டுகள்


நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் இருந்து, சரியான நேரம் அமையாமல் இன்று தான் தசாவதாரம் படம் பார்த்தேன்.


இந்த படத்தை பற்றி விரிவாக விமர்சனம் எழுதலாம் என்று படம் வெளி வரும் முன்பே நினைத்து இருந்தேன், காரணம் அதன் மேல் இருந்த எதிர்பார்ப்பு மற்றும் ஆர்வம். இரண்டு வருடமாக படம் எடுத்தார்கள், ஜாக்கி சான் பாடல் வெளியீடு என்று ஏகத்திற்கும் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்து இருந்தது.


ஆனால் படம் வெளிவந்த பிறகு அதற்க்கு வந்த விமர்சனங்களின் அளவு நான் எதிர்பாராதது, வெளி வந்த விமர்சனங்கள் எதையும் படிக்க வில்லை, ஆனால் கடைசி வரிகளை மற்றும் கதை அல்லாத பகுதிகளை மட்டும் படிப்பேன், படித்தால் படம் பார்க்கும் போது படத்தின் மீது இருக்கும் சுவாராசியம் அல்லது சஸ்பென்ஸ் குறைந்து விடும் என்று.


அனைவரும் படத்தை பிரித்து மேய்ந்து விட்டார்கள், இனி நாம் புதிதாக என்னத்தை விமர்சனம் செய்வது என்று விமர்சனம் எழுதவில்லை. விமர்சனம் தான் எழுதவில்லையே தவிர ஒருவர் இரண்டு வருடம் கஷ்டப்பட்டு, உடலை (முகத்தை) வருத்தி, படம் வெளிவர பல பிரச்சனைகளை சந்தித்து நடித்து வெளி வந்து இருக்கும் படத்தில் கமல் மற்றும் அதில் பணிபுரிந்த அனைவரையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதில் கஷ்டப்பட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.


படத்தை பற்றி பல்வேறு கருத்துக்கள் பார்ப்பனியம், ஒப்பனை, நுண் அரசியல், உலகத்தரம், யாரும் செய்யாத முயற்சி, நாத்தீகம், தலித் இழிவு என்று.


இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கருத்து, இதில் எது சரி எது தவறு என்று யாரும் கூற முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணங்கள், சிந்தனைகள் , கோட்பாடுகள், பார்வைகள். எனவே நான் சொல்வது தான் சரி நீ சொல்வது தவறு என்று யாரும் கூறமுடியாது. அவரவர் எண்ணங்களை தெரிவிக்கிறார்கள். பிரச்சனை அவர்கள் தெரிவிக்கும் முறையில் தான் உள்ளது.


எனவே நான் படத்தை பற்றி கூறுவதென்றால் படம் போர் அடிக்காம போகிறது. வேறு எதுவும் புதிதாக நான் கூற என்னிடம் எதுவும் இல்லை, ஏற்கனவே போதுமான அளவிற்கு விவாதித்தாகி விட்டது.


குறைகள் இல்லாத படங்கள் இல்லை, நிறைகள் மட்டுமே உள்ள மனிதர்கள் கிடையாது. குறை கூறும் வேளையிலே அதில் உள்ள நிறைகளையும் பாராட்டுவதே ஒரு சிறந்த விமர்சனமாக நான் கருதுகிறேன்.


கமல் தொடர்ந்து நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்பதே என் போன்ற கடைநிலை ரசிகனின் விருப்பம்.

Buzz It

Wednesday, June 25, 2008

மின்னஞ்சலில் வந்த அட்டகாச படங்கள்

சீரியஸ் பதிவு போட்டு மண்டை காய்ந்து விட்டதால் சும்மா ஒரு ஜாலி மற்றும் த்ரில்லிங் படங்கள் போடுவோமேன்னு நினைத்து எனக்கு மின்னஞ்சலில் வந்த படங்களை தருகிறேன் :-)

























Buzz It

Tuesday, June 24, 2008

மாறி வரும் சென்னை ஒரு பார்வை - பாகம் 3


நான் என் அக்காவிடம் பழைய கதைகளை பேசிக்கொண்டு இருந்த போது, அவர்கள் வீடு மாறுவதை பற்றி குறிப்பிட்டார்கள், தற்போது பெசன்ட் நகர் பகுதியில் இருக்கிறார்கள், என் மாறுகிறீர்கள் என்று கேட்ட போது. வீட்டிற்கு போட்டிருந்த ஒப்பந்தம் முடிந்து விட்டதாகவும், தற்போது 6500 Rs கொடுத்துக்கொண்டு இருப்பதாகவும் ஒப்பந்தம் புதுப்பித்தால் 15000Rs கேட்கிறார்கள் அதனால் அவ்வளவு கொடுக்க முடியாததால் வேறு வீடு பார்க்க போவதாகவும் கூறி என்னை அதிர்ச்சி அடைய வைத்தார்.


6500 Rs எங்கே இருக்கிறது 15000 Rs எங்கே இருக்கிறது, இவர்கள் சொல்லும் உயர்வு 100% க்கும் அதிகமாக இருக்கிறது. இதற்க்கு என் அக்கா இருக்கும் வீடு அப்படி ஒன்றும் சூப்பர் வீடெல்லாம் கிடையாது, மிக பழைய வீடு, பராமரிப்பு பணிகள் கூட ஒழுங்காக செய்து தருவது கிடையாது. பல வருடங்களுக்கு பிறகு இப்போது தான் அவர்கள் குடி இருக்கும் காலனிக்கு கொஞ்சம் பெய்ன்ட்டை கண்ணில் காட்டி இருகிறார்கள். அவ்வளவு பழைய வீடு. இதற்கே இத்தனை ஆர்ப்பாட்டம், இவர்கள் வீடு இருக்கும் கீழ் தளத்தில் உள்ள வீட்டு முதலாளி அந்த வீட்டை 18000 Rs விட்டு இருக்கிறாராம் அதற்க்கு எங்க வீட்டு முதலாளி கொஞ்சம் பரவாயில்லை என்று கூற எனக்கு தலை சுற்றியது.


என் அக்காவின் குழந்தைகள் அடையாரில் உள்ள பள்ளியில் படிக்கிறார்கள், இதனால் வேறு பகுதிக்கும் மாற முடியவில்லை. இதுவும் பெரிய தடையாக உள்ளது. இதை விட கொடுமை என் அக்கா வீடு தேடிய போது கிடைத்த தகவலாக கூறிய செய்தி. ஒரு வீடு 25000 Rs க்கும், முழு வசதி (fully furnished) செய்யப்பட்ட வீடு 30000 Rs ம் ஒரு சில வீடுகள் அதற்கு மேலும் கூறிய போது எனக்கு மயக்கம் வராத குறை தான். இங்கு சிங்கையிலேயே அதை விட கொஞ்சம் தான் அதிகம். தற்போது அடையாறு பகுதியில் 10000 Rs குறைந்து வீடே கிடையாது என்று கூறிய போது எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.


வாடகை பிரச்சனை குறித்து ஏற்கனவே நான் ஒரு பதிவு எழுதி இருந்தாலும், ஒரு சில கருத்துகளை திரும்ப கூறுகிறேன்.


தற்போது விலைவாசி உயர்ந்து வருகிறது, அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது, அதை போல வீட்டின் வாடகையும் உயருகிறது. ஆனால் உயரும் அளவின் அளவு சீராக இல்லாமல் தாறுமாறாக உயர்கிறது, இதுவே அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது.


நடுத்தர மக்களின் சம்பளமும் உயர்ந்தால் பரவாயில்லை, அவர்களுடைய சம்பளம் அதே நிலையில் இருக்கிறது ஆனால் மற்ற அத்யாவசிய தேவைகளின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே தங்களின் சம்பளத்தில் மற்றதை குறைத்து கொண்டு மிகவும் தேவையானதுக்கு மட்டுமே செலவு செய்கிறார்கள்.


எவ்வளவு தான் இழுத்து பிடித்து வாழ்க்கையை ஓட்டினாலும், இப்படி கண்டபடி உயர்ந்து வரும் வாடகை பூதத்தை சமாளிக்க முடியாமல் அனைவரும் திணறி கொண்டு இருக்கிறார்கள்.


வீடு என்பது அனைவரின் அடிப்படை பிரச்சனை, இதில் தற்போது மக்கள் எவ்வளவு விட்டு தரமுடியுமோ அவ்வளவு விட்டு தந்து தங்கள் எதிர்பார்ப்புகளை ஆசைகளை குறைத்துக்கொண்டார்கள். இன்னும் எவ்வளவு தான் அனுசரித்து போக முடியும்! (வேறு வழியில்லை அது வேறு விஷயம்)


இத்தனை வாடகை வாங்குகிறார்களே அதற்குண்டான வசதிகள் செய்து தரப்படுகின்றனவா! என்றால் கண்ணை மூடிக்கொண்டு இல்லை என்று கூறலாம். ஒன்றுமே இல்லாத வீட்டிற்கு 6000 ..8000 கொடுத்தாக வேண்டும் என்றால் எப்படி நியாயம் ஆகும்.


வீட்டுக்கு டிமாண்ட் இருப்பதால் இப்படி ஒரு வரைமுறையே இல்லாமல் ஏற்றி கொண்டு இருப்பது எங்கே சென்று முடியும்.


முன்பு வாடகை அதிகமாக இருக்கிறது என்று அனைவரும் கிண்டியில் வீடு பார்த்தார்கள், இப்போது அங்கேயும் அதிகம் ஆனதால், தாம்பரத்தில் பார்த்தார்கள் இப்போது அங்கேயும் அதிகம் ஆகி விட்டது..இப்படியே இரும்புலியூர் னு தாண்டிட்டு போய் செங்கல்பட்டுல தான் இனி நடுத்தர மக்கள் வசிக்க முடியும் போல இருக்கு.


அரசு இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த வசதிகள் இருந்தால் மட்டுமே, இந்த வாடகை வசூலிக்கலாம், மற்றும் இப்படி தாறுமாறாக உயர்ந்து வரும் வாடகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுவே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு.

Buzz It

Thursday, June 19, 2008

மாறி வரும் சென்னை ஒரு பார்வை - பாகம் 2




என் நண்பன் தன்னுடைய திருமணத்திற்காக கொடுத்த (கொடுக்க வைக்கப்பட்ட) பார்ட்டிக்காக எக்மோர் ல் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு உற்சாக பானம் சாப்பிட போனோம். நான் சூடான சமாச்சாரங்கள் குடிக்க மாட்டேன் என்பதால் ட்ராட் பீர் இங்கே கிடைக்கும் என்று அவன் கூறியதால் அங்கே சென்றோம்.



அன்று தான் IPL 20-20 இறுதி போட்டி அதனால் அங்கே இருந்த தொலைக்காட்சிகளில் ஓடி கொண்டு இருந்தது. நாங்கள் மூவர் அமர்ந்து பேசிக்கொண்டு குடித்துக்கொண்டு இருந்த போது ஒரு 5 இளைஞர்கள் உற்சாகமாக வந்தார்கள், வந்தவுடன் ஆங்கிலத்திலேயே பேசி பீட்டர் விட்டு கொண்டு இருந்தார்கள் அவர்களை பார்த்தால் தமிழுக்கும் அவர்களுக்கும் வெகு தூரம் என்று தெரிந்தது, அதில் இருந்த பலரும் நான் சென்னையில் இது வரை பார்க்காத முறையில் தங்கள் சிகை அலங்காரம் செய்து இருந்தார்கள், அதில் ஒருவர் DLJ பேன்ட் அணிந்து இருந்தார் DLJ என்றால் Dangerously Low Jeans என்று அர்த்தம், அது இப்போது கழண்டு விழுந்து விடுவேன் என்று பயமுறுத்தி கொண்டு இருந்தது.



நான் எப்போதும் கிண்டலுடனே பேசுவேன் என்பதால் எப்போதும் போல் என் நண்பனை கிண்டலடித்துக்கொண்டு பேசி கொண்டு இருந்தேன், அவ்வாறு நான் கிண்டல் அடிப்பது மனதை வருத்தும் படி இருக்காது என்பதால் அவனும் தான் கிண்டல் செய்யப்படுவதையே விரும்புவான். என் இன்னொரு நண்பன் டேய்! நீ ஊர்ல இல்லாததால இவனை ஓட்டுறதுக்கு ஆள் இல்லை என்று கூற கலகலப்பாக பேசி கொண்டு இருந்தோம் திடீரென்று என் நண்பன் முகத்தில் மாற்றம், என்னடா! இது நல்லா இருந்தவன் இப்படி கலவரம் ஆகிறான் என்று பார்த்தால் இரண்டு பெண்கள் அந்த முன்பே வந்து இருந்த வித்யாச பார்ட்டிகளுடன் (ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மாதிரி ஸ்டைல் ல் இருக்கிறானுக) சேர்ந்து கொண்டார்கள். அதில் ஒரு பெண் 18 வயது தான் இருக்கும் மிகவும் குட்டியாக இருந்தார் மிகவும் அழகாக குடும்ப கலையுடன் இருந்தார், இன்னொரு பெண் 20 வயதுக்கு மேல் இருக்கும் மாடர்னாக உடை அணிந்து இருந்தார்.



ஏற்கனவே இதை போல் பார்த்து இருக்கிறேன் என்பதாலும் பெண்கள் இப்போது பார்களில் அடிக்கடி தென்படுவது சகஜம் என்பதால் சிறிய ஆச்சர்யத்துடன் நாங்கள் பேச்சை தொடர்ந்தோம். சிங்கப்பூர் வந்த பிறகு இவர்களிடம் எல்லாம் இப்படி கலகலப்பாக பேசுவதை இழந்து மிக வருத்தமாக இருப்பதை கூறி கொண்டு இருந்தேன். சிங்கப்பூர் ல் நண்பர்கள் இருந்தாலும் சென்னை நண்பர்களுடன் இல்லாதது மன வருத்தத்தையே அளித்தது. நாங்கள் பேசி கொண்டு இருந்தாலும் எங்கள் அருகிலேயே அவர்களும் அமர்ந்து இருந்ததால் இயற்கையாகவே இருக்கும் உந்துதலில் அல்லது ஆர்வத்தில் அவர்கள் என்ன தான் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று கவனித்து கொண்டு இருந்தோம். அவர்கள் ஆளாளுக்கு சரக்கை உள்ளே தள்ளி கொண்டு இருந்தார்கள், உடன் இருந்த அந்த பெண்களும். எனக்கு இந்த குட்டி பெண் குடித்ததை ஏனோ என் மனம் ஒப்புக்கொள்ள வில்லை. இந்த பொறம்போக்குகளோடு சேர்ந்து இப்படி கெட்டு விட்டதே என்று இவ்வளோ சிறு வயதில் என்று ஆதங்கமாக இருந்தது. இதில் மாடர்னாக இருந்த பெண் ஒரு படி மேலே போய் புகைபிடிக்க ஆரம்பித்தது. அது விட்ட புகையில் அருகில் இருந்த எனக்கே மூச்சு திணறல் ஆகி விட்டது, நான் பீர் சாப்பிடுவேனே தவிர புகை பிடிக்க மாட்டேன், என் உடன் இருந்த நண்பர்களும் கூட.



நேரம் ஆக ஆக IPL போட்டி மிக விறுவிறுப்பாகி விட்டது, அந்த பசங்களும் Great, fantastic, No Chance னு பயங்கரமா கை தட்டி கத்த ஆரம்பித்து விட்டானுக, என்னடா இது இவனுக இம்சை தாங்க முடியலைனு என் நண்பனை முறைத்தேன், அவன் தான் இங்கே சத்தம் எதுவும் இருக்காது பாட்டெல்லாம் போட மாட்டாங்க நிம்மதியா பேசலாம் என்று கூறி இருந்தான். இவனுக போட்ட சத்தத்துல எங்களால் சுத்தமாக பேச முடியல. அந்த குட்டி பொண்ணும் வெட்கப்பட்டு முதலில் குடித்து கொண்டு இருந்தது போல இருந்து இப்ப எங்களை விட அதிகமாக குடித்துக்கொண்டு இருந்தது, என்னடா! இது யாரையும் நம்ப முடியாது போல இருக்கேன்னு நினைத்து கொண்டு டேய்! என்னடா இது ஆள பார்த்தா குட்டியாக குடும்ப குத்து விளக்கா இருக்கு அதகளம் பண்ணிட்டு இருக்கேன்னு என் நண்பனிடம் கூறி விட்டு, சரி புகை பிடிக்காமலாவது இருக்கேன்னு நினைத்துக்கொண்டு எங்கள் பேச்சை அந்த இரைச்சலில் தொடர்ந்து கொண்டு இருந்தோம்.



கொஞ்ச நேரத்தில் என் நண்பனின் முகம் பீதி ஆனது, என்னடா! இப்படி பேய் அறைந்த மாதிரி பார்க்கிறான் என்று பார்த்தால் அந்த குட்டி பெண், உற்சாகத்தில் அங்கே ஸ்பைக் சிகை அலங்காரம் செய்து இருந்த ஒருவனின் மடியில் உட்கார்ந்து கொண்டு இருந்தது, இதை பார்த்ததும் எனக்கு தலை சுத்தியது(பீர் குடித்ததால் அல்ல) பீர் அடிக்கும் பெண்களை தான் பார்த்து இருக்கிறேன், இல்லை என்றால் உடன் அமர்ந்து கோக், பெப்சி, 7 அப் குடிக்கும் பெண்களை தான் பார்த்து இருக்கிறேன், இது எனக்கும் மிக புதிது சென்னையில். இன்னொரு பெண்ணை அங்கே இருந்த இன்னொருவன் அதன் இருக்கையின் பக்க்கவாட்டில் அமர்ந்து தோள் மீது கை போட்டுக்கொண்டு மிக நெருக்கமாக இருந்தான்.



ஏன்டா! நீங்க தண்ணி அடிக்க தானே வந்தீங்க, அதை விட்டுட்டு இங்கே ஏன் பார்த்துட்டு இருக்கீங்கன்னு நீங்க கேட்பது தெரிகிறது, பக்கத்துலையே இந்த மாதிரி நடக்கும் போது, ஒரு ஆர்வத்தில் பார்ப்பது புதிதாக இருக்கும் பட்சத்தில் பார்ப்பது இயல்பு தானே. நாங்க அதை தவிர்க்க முயன்றாலும் இவர்கள் ஏதாவது செய்து ஈர்த்துக்கொண்டு இருந்தார்கள்.



அந்த சின்ன பெண் மற்றும் அந்த பய்யன் தாங்கள் குடித்துக்கொண்டு இருந்த க்ளாஸ் களை மாற்றி கொண்டு குடித்தார்கள், என்ன கொடுமைடா! இது னு பார்த்துட்டு இருக்கும் போதே கட்டி பிடித்து ஒரு முத்தம் கொடுத்தான், எனக்கு இதய துடிப்பு அதிகமாகி விட்டது. அந்த பொண்ணும் அவனை you naughty னு செல்லமாக சிணுங்கி விட்டு தொடர அனுமதித்தது. அனேகமாக நாங்க விட்ட பெருமூச்சில் அந்த பார் சூடாகி இருக்க வேண்டும். இதை அங்கே இருந்த அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள், இருந்தாலும் அவர்கள் அதை பற்றி கவலை பட்டதாகவே தெரியவில்லை. எனக்கு குடித்ததில் அவசரமாக வந்து விட்டதால் கழிவறை சென்றால் அங்கே ஏற்கனவே அவங்க குரூப் ல இருந்த இரு பசங்கள் அந்த பெண்களை என்ன செய்யலாம் என்று மிக அசிங்கமாக பேசி கொண்டு இருந்தார்கள், நான் இருப்பதை கூட கண்டுக்காமல். எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது, இது அவனவன் தனிப்பட்ட விஷயம் என்றாலும், இவங்க என்ன மேலை நாட்டிலையா இருக்காங்க, இப்படி பொது இடத்தில் இதை போல் பேசி கொண்டு இருக்க. எனக்கு அங்கே இருக்கவே மிக தர்ம சங்கடமாகி விட்டது, அவசரமாக என் வேலையை முடித்துக்கொண்டு வெளியேறி என் இடத்துக்கு வந்தேன்.



பிறகு அந்த குரூப் கொஞ்ச நேரத்தில் கிளம்பி விட்டது, அந்த இரு பெண்களும் செம மப்பில் இருந்தார்கள், நடக்கவே முடியவில்லை. அந்த பசங்கள் எதோ அவர்களுக்குள் (பசங்களுக்குள்) பேசி சிரித்துக்கொண்டு அவர்களையும் அழைத்துக்கொண்டு வெளியேறினார்கள்.



அவர்கள் போன பிறகு மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருந்தது. என் நண்பனிடம் இது பற்றி கேட்ட போது ஆமாண்டா! இப்பெல்லாம் இது மாதிரி சகஜம் ஆகி விட்டது, இதை விட மோசமாக பொது இடத்தில் நடந்து கொள்கிறார்கள். இங்கு வேலை செய்யும் சர்வர்களை கேட்டால் கதை கதையாக சொல்வார்கள் என்றான். நாங்கள் எப்போதும் சவேரா ஹோட்டலில் உள்ள பாருக்கே செல்வோம், எனென்றால் அங்கே தான் மிக அமைதியாக இருக்கும் பேசுவதற்கும் நல்ல இடம், ஆனால் தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்தில் அங்கே பிரச்சனை ஆகி விட்டதால் அதை மூடி விட்டார்கள். எங்களுக்கு பேரிழப்பு :-(((



அதன் பிறகு ஒரு 1 மணி நேரம் பழைய கதைகளை பேசிக்கொண்டு கிண்டல் அடித்துக்கொண்டு இருந்து விட்டு, வீட்டிற்கு கிளம்பினோம்.



நான் வீட்டிற்கு வரும் வழியில் இது பற்றிய எனக்கு தோன்றிய கேள்விகள் மற்றும் எண்ணங்கள்



இப்படி வரும் பெண்கள், குடித்து விட்டு செல்வதை வீட்டில் எப்படி பெற்றோர் அனுமதிக்கிறார்கள்? அல்லது இவர்கள் ஹாஸ்டலில் இருக்கிறார்களா?



இவர்களின் இந்த நிலைக்கு யார் காரணம்? இவர்கள் செய்வது தவறா? அல்லது கால மாற்றத்தில் இதெல்லாம் சகஜம் என்று கண்டுக்க கூடாதா?



ஆண்களுக்கு இணையாக பெண்களும் இப்போது நம் ஊரில் குடிக்க, புகை பிடிக்க ஆரம்பித்து விட்டார்களே, இது தான் சம உரிமையா?



ஒரு முறை நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண், தான் மேக்கப் சமாச்சாரங்களுக்காக மட்டும் மாதம் 5000 செலவு செய்வதாக கூறினார், இவ்வாறு இருப்பது சகஜமா?



அவர்கள் சம்பாதிக்கிறார்கள் அல்லது அவர்கள் பெற்றோர்கள் கொடுக்கிறார்கள், இதற்க்கு மற்றவர்கள் ஏன் கோபப்பட வேண்டும்? என்று நினைப்பதா.



இப்படி குடித்து விட்டு அவர்களுடன் சென்ற அந்த பெண்களை அவர்கள் "சும்மாவா" விட்டு இருப்பார்கள், இது தான் இனி வரும் கலாச்சாரமா?



இப்படி பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்களே, இது தான் நாகரிகமா?



இன்னும் 5 வருடங்கள் சென்றால் ஆண் பெண் இரு பாலருக்கும் கற்பு என்பதை உடல் அளவில் இல்லாமல் மனதளவில் தான் எதிர் பார்க்க வேண்டுமா?



இதை போல பல கேள்விகள் என் மனதில் ஓடி கொண்டு இருக்கின்றன. இப்படி எல்லாம் கேள்வி கேட்பதால் என்னை கலாச்சார பாதுகாவலன் என்கிற ரீதியில் கருத வேண்டாம். எனக்கு என் மனதில் தோன்றிய எண்ணங்களே இவை. என் மனதிற்கு இது தவறாக பட்டாலும், அடுத்தவர்களின் உரிமையில் அல்லது சுதந்திரத்தில் அல்லது எனக்கு சம்பந்தம் இல்லாத விசயத்தில் அல்லது அவர்கள் முற்போக்கு எண்ணத்தில் தலையிடுவதில்லை. மேலே குறிப்பிட்டவை அனைத்தும் எனக்கு தோன்றிய அல்லது இருந்து கொண்டு இருக்கும் சந்தேகங்களே, கலாச்சார பாதுகாவலனாக கேட்கும் கேள்விகள் இல்லை.

Buzz It

Tuesday, June 17, 2008

மாறி வரும் சென்னை ஒரு பார்வை - பாகம் 1


கடந்த முறை ஊருக்கு சென்று இருந்த போது நண்பர்களை சந்திப்பதற்காக சென்னையில் இரு நாட்கள் இருந்தேன். கடந்த முறை அவசரமாக சென்று வந்ததால் அனைவரையும் சந்திக்க முடியவில்லை. இந்த இரு நாட்களில் நான் சந்தித்த நிகழ்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.


என் அக்காவுடன் பேசிக்கொண்டு இருந்த பொழுது, தற்போது கல்வி கட்டணம் தாறுமாறாக உயர்ந்து விட்டது என்றும் மிக சிரமமாக இருப்பதாகவும் கூறினார்கள். கல்வி கட்டணம் என்றதும் நீங்க எதோ கல்லூரி கட்டணம் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இது என் அக்கா பொண்ணு Pre KG கட்டணம் பற்றியதாகும். ஒரு சில பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க (கொஞ்சம் உயர் தர பள்ளிகளில்) வருடம் 80000 முதல் 100000 வரை கேட்பதாக கூறி என்னை அதிர வைத்தார்கள். என்னால் நம்பவும் முடியவில்லை, அதே சமயம் என் அக்கா கூறுவதால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. என் சென்னை நண்பர் தன் குழந்தையை KK நகரில் உள்ள பள்ளியில் LKG சேர்க்க இதுவரை 60000 கட்டியிருப்பதாகவும் இன்னும் 15000 கட்ட வேண்டும் என்று கூறி என்னை பீதிக்குள்ளாக்கினார். இவ்வளவு பணம் வாங்குவதோடு மட்டுமல்லாமல் தங்களை நீண்ட நேரம் காக்க வைத்து அவமானபடுத்துவதாகவும், குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதை எல்லாம் சகித்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது என்றும் கூறி வருத்தப்பட்டார்.


இதை போன்ற பள்ளிகள் குழந்தைகள் வரும் போதே நேர்முக தேர்வு வைக்கிறார்கள், அதில் தேர்வு ஆகும் குழந்தைகளையே சேர்த்துக்கொள்கிறார்கள், பெற்றோருக்கும் நேர்முக தேர்வு உண்டு. அவர்களும் இதில் தேற வேண்டும். எனக்கு ஒன்று புரியவில்லை, குழந்தைகளை கல்வி சொல்லி கொடுக்க தான் பள்ளிகளுக்கு அனுப்புகிறோம், ஆனால் இவர்கள் முன்னரே இவை எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம். பிறகு இவர்கள் எதற்கு இருக்கிறார்கள்? புத்திசாலி குழந்தைகள் மட்டுமே சேர்த்துக்கொள்ள படுமானால், சுமாரான, படிப்பு திறமை குறைந்த அல்லது உடனே புரிந்து கொள்ள சிரமப்படுகிற குழந்தைகளின் கதி என்ன? இவர்கள் கூற்று படி படிக்காத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளிகளில் சேர்க்க முடியாது..இது எப்படி நியாயம் ஆகும். குழந்தைகள் தானே படித்து கொள்வதற்கும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாங்களே சொல்லி கொடுப்பதற்கும் இருந்தால் பள்ளிகள் எதற்கு?


தற்போது ஒரு சில அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் சொல்லி தருவதை விட சிறப்பாக சொல்லி தந்தாலும், பெரும்பாலான நடுத்தர மக்கள் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க யோசிக்கிறார்கள். தங்களின் குழந்தைகள் நலனே முக்கியம் என்று கருதுவதால், இதில் இவர்களை நாம் குறை கூற முடியாது.


நான் கேட்க விரும்புவது தங்கள் பள்ளியின் பெயரை உயர்த்த புத்திசாலி குழந்தைகளை மட்டுமே சேர்த்தால் மற்ற குழந்தைகளின் நிலை என்ன? ஒரு LKG குழந்தையின் படிப்பு செலவு வருடம் 50000 முதல் 80000 - 100000 என்றால் இனி வருங்காலத்தில் குழந்தைகளின் படிப்பு செலவு எவ்வாறு இருக்கும்? கல்வி வியாபாரம் என்பது LKG யில் இருந்தே ஆரம்பிக்கப்படுகிறதா? படிப்பை (முழுவதும் அல்ல என்றாலும்)பெற்றோர்களே சொல்லி தருவது என்றால் அதை சொல்லி தர கடமை பட்டு இருக்கும் பள்ளியின் நிலை என்ன? நேர்முக தேர்வு நடத்தி Pre KG அல்லது LKG வகுப்புக்கு ஒரு குழந்தையை தேர்வு செய்வது என்பது ஒரு நியாயமான செயலா?


இந்த செய்தியே அதிகமாகி விட்டதால் மீதி அனுபவங்களை அடுத்த பதிவில் கூறுகிறேன்.

Buzz It

Sunday, June 15, 2008

எப்படி எல்லாம் தினம் கொண்டாடுறானுக :-((((

மேற்கத்திய நாடுகளில் "உலக!!! நிர்வாண பைக் ரைடு" தினம் (கொய்யாலே) கொண்டாடுறாங்கலாம். அதற்காக ஊர்வலம் மேற்கொண்டார்களாம் அதோட இல்லாம பெட்ரோலிய எரிபொருட்கள் உபயோகத்தை குறைக்க வலியுறுத்தி பிரச்சாரம் செய்தார்களாம்.. அடடா! என்ன சேவை!!


பிரேசில் நாட்டில் பொது!!! இடத்தில் நிர்வாணமாக செல்ல தடை உள்ளதால் இவருக்கு உதை விழுகிறது. யப்பா பார்த்து உதைங்க, பாவம்.


இந்த படத்துல ஒன்றை கவனித்தீர்களா? என்ன தான் இப்படி இருந்தாலும் அவர் எவ்வளோ பொறுப்பா தலைக்கு கவசம் போட்டு இருக்காரு பாருங்க :-))) அங்கே தாங்க நீங்க அவங்களோட பொறுப்பு உணர்ச்சியை பாராட்ட வேண்டும் :D


ம்ம்ஹீம் உலகத்துல எது எதுக்கு தான் தினம் கொண்டாடுறதுன்னு விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. இவனு(ளு)க அட்டகாசம் தாங்க முடியலப்பா :-(((


இவனுக சிந்தனை அல்லது சுதந்திரம் முற்றி போய் இன்னும் என்னவெல்லாம் செய்ய போறாங்களோ? இப்படி எல்லாம் செய்யணும் என்று ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

Buzz It

கலகலப்பாக சென்ற சிங்கை வலைப்பதிவர் சந்திப்பு

நேற்று வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் இடம் எனக்கு தெரியாததால் ஜெகதீசன் அவர்களுடன் செல்லலாம் என்று முடிவு செய்தேன், அவர் என்னை 4.30 மணிக்கு பெடோக் பேருந்து நிலையம் வந்து விடுங்கள் அங்கே இருந்து சென்று விடலாம் என்று கூறினார், நம்ம எப்போதும் சரியான நேரம் கடைபிடிப்பதால் சரியான நேரத்துக்கு வந்து விட்டேன், ஜெகதீசனை தொடர்பு கொண்டால் இப்ப தாங்க வந்துட்டு இருக்கேன் ஒரு 15 க்கு மேல் ஆகும் என்றார்.


சரி அதுவரை என்னடா பண்ணுறதுன்னு சரி சங்கி மங்கி (உபயம் வடிவேல்) பிகர்களை யாவது பார்ப்போம் என்று நல்ல !!! இடமாக பார்த்து உட்கார்ந்தேன், எப்போதும் போல நம்ம நேரம் ஒரு பக்கம் ஒரு தாத்தாவும் இந்த பக்கம் ஒரு சுமாரான அத்தையும் உட்கார்ந்தார்கள்..என்னடா இது நாம கிளம்புன நேரம் சரியில்லையோன்னு நொந்துட்டு ..வாஸ்து சரி இல்லைன்னு வேற இடம் மாறி உட்கார்ந்தேன் ..இங்க பரவாயில்ல கண்ணுக்கு குளிர்ச்சியா எல்லோரும் குறுக்கும் நெடுக்கும் போய்ட்டு நம்மை குளிர்ச்சி படுத்திட்டு இருந்தாங்க. சிறிது நேரத்தில் நயன்தாரா மாதிரி ஒரு சூப்பர் பிகர் வெறும் டிராயர் மற்றும் (கை வைக்காத) பனியன் மட்டுமே போட்டு என் முன் நின்று அதன் நண்பியுடன் பேசிக்கொண்டு நின்றது..எனக்கு இதய துடிப்பு தாறுமாறாக அதிகமாகி அபாய கட்டத்தை நெருங்கும் போது, நம்ம ஜெகதீசன் கூப்பிட்டு விட்டார். வாங்க வந்துட்டேன்னு கூறினார். சரி வந்த வேலையை பார்ப்போம் னு கிளம்பி போனேன் பதிவில் ஏற்கனவே அவர் புகைப்படத்தை பார்த்து இருந்ததால் அவரை கண்டு பிடிப்பதில் சிரமம் இருக்கவில்லை. அவருடன் பேருந்தில் ஏறி சந்திப்பு இடம் சென்றோம், அதற்குள்ளே செந்தில் வந்து விட்டதாக கூறினார். நாங்கள் இருவரும் சென்ற பிறகு ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். ஏற்கனவே பதிவர் சந்திப்பில் என்ன பேசினோம் என்று கோவி கண்ணன் விவரமாக கூறி விட்டதால், குறைவான செய்திகளையே கூறுகிறேன்.


பதிவர் சந்திப்பில் பாரி அரசு, பதிவில் மட்டும் இல்லைன்னு சாதாரணமாக பேசும் போதும் ஆங்கில கலப்பு இல்லாத தமிழில் பேசி என்னை அதிர வைத்தார். அடடா! நாம் இது போல இன்னும் பெரிதாக இன்னும் முயற்சி செய்யவில்லையே என்று நினைத்து வெட்கப்பட்டேன்.


முகைவை மைந்தன் அவர்களும் ஆங்கில கலப்பு இல்லாத தமிழை பேச முயற்சித்து வருவதாக கூறினார், அவர் பேச்சிலும் அது தெரிந்தது. இவரிடம் நான் ஏங்க! நீங்க வேலை செய்யுறீங்க என்றவுடன்.. அவர் நான் Credit Suisse என்ற நிறுவனத்தில் வேலை செய்கிறேன் என்றார்..அப்படியா!!! நானும் அங்கே தான் வேலை செய்யுறேன்...நீங்க எந்த கட்டிடம் CBP யா ORL யா ? இவர் நான் CBP ..அட! என்னங்க ..நானும் அங்கே தன் வேலை செய்யுறேன் ..சரி நீங்க எந்த தளம் ..நான் தளம் 7 ..நல்லவேளை நான் தளம் 3 என்று கூறி கலகலப்பாக இருந்தது. எனக்கு இவரை ஏற்கனவே எங்கேயோ பார்த்தது போல இருந்தாலும் நான் கூறவில்லை, ஏனென்றால் இந்த மாதிரி எங்கேயோ உங்களை பார்த்து இருக்கிறேன் என்று கூறி பலர் மொக்கை போடுவார்கள்..சரி அதை போல நம்மை நினைத்து விட்டால் என்றே கூறவில்லை.


பாரி அரசு தமிழ் 99 பயன்படுத்துவது பற்றி அழகாக விளக்கினார், நிறைய விஷயம் தெரிந்து வைத்து இருக்கிறார். செந்திலும் முகவை மைந்தன் கோவி கண்ணன் அவர்களும் இது பற்றி தங்கள் சந்தேகங்களை கேட்டார்கள். லினக்ஸ் பற்றி தானே வடுவூர் குமார் அவர்கள் கற்று கொண்டதாக கோவி கண்ணன் கூறினார். பாரி அரசு எல்லோரையும் தமிழ் தட்டச்சு பயன்படுத்த கூறி அதன் அதன் அதன்... ஹி ஹி ஹி அதன் பேரு தெரியலையே ...விசை பலகையின் மீது ஒட்டி கொள்ள அந்த அந்த ...ஒன்றை கொடுத்தார். எனக்கு அவரின் ஆர்வத்தை நினைத்து உண்மையிலேயே ஆச்சர்யமாக இருந்தது. என் பின் தங்கிய நிலையை நினைத்து வெறுப்பாகவும் இருந்தது.


பிறகு அனைவரும் எது சுதந்திரம் என்ற தலைப்பில் முகுந்தன் ஆரம்பித்து வைத்த விவாதத்தில் பேசினார்கள். ஆரோக்யமான விவாதமாகவே இருந்தது.


சிவராம் முருகன் தனக்கு நேரம் இல்லை என்பதாலும், பதிவு எழுதி எதாவது பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்பதாலும் பல பதிவுகளை எழுதி வைத்து பிறகு அழித்து விட்டதாகவும் கூறினார். மேலும் ஒரு சில பதிவுகளை படித்தால் "வெறி" வருவதாக கூறினார்..தற்சமயம் ஒரு சில பதிவுகளின் தலைப்பு வேறு ஏடாகூடமாக இருப்பதால் நான் உடனே பயந்து போய் என்னங்க! இப்படி சொல்றீங்க னு கேட்டேன்..அவர் உடனே.. அட ஏங்க நீங்க நினைக்கிற "வெறி" இல்லைங்க இது கோபம் னு சொல்லி என்னை அமைதி படுத்தினார் ஹா ஹா ஹா


செந்தில் தான் எழுதும் பதிவின் பெயரை கூறாமல் மர்மயோகி மாதிரி மர்ம புன்னகை பூத்தார். கோவி கண்ணன் மற்றும் பலர் பல பிட்டுகளை போட்டு பார்த்தும் அவர் கூறவில்லை. முடிந்தால் கண்டு பிடியுங்கள் என்று சவால் வேறு விட்டார். சரி இதெல்லாம் நடக்கிற காரியமா என்று விட்டுவிட்டேன்.
நம்ம ஜெகதீசன் அமைதி புறாவாக அமர்ந்து இருந்தார், கோவி கண்ணன் அடிக்கடி அவரை பேச இழுத்தும் புன்னகை மன்னனாக இருந்து விட்டார்.


செந்தில் அவர் வீட்டில் இருந்து ஹல்வா மற்றும் பல சாப்பாட்டு ஐட்டங்களை எடுத்து வந்து இருந்தார், பலரும் கொண்டு வந்து இருந்தனர்.


வடுவூர் குமார் அவர்கள் துள்ளும் இளமையோடு இருந்தார், அவருக்கு என் உயரத்தில் ஒரு பய்யன் வேறு இருப்பதாக கூறி அதிர வைத்தார். எனக்கு சிங்கப்பூர் பற்றிய பல விவரங்களை அவர் முறையில் கூறி விளக்கினார். அவை அனைத்தும் புதியது மற்றும் உபயோகமாக இருந்தது. இவரிடம் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது எந்த பந்தாவும் இல்லாமல் அனைவருடனும் பழகினார். போண்டா கொடுப்பதாக கூறி, வடுவூர் குமார் அவர்கள் அனைவருக்கும் இரவு உணவையே தன் செலவில் வாங்கி கொடுத்து அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.


பதிவர்கள் குறைவாக இருந்ததாலோ அல்லது உணமையிலேயாவா என்று தெரியவில்லை, யாரும் பந்தா செய்யாமல் பேசினார்கள், அரசியல் எதுவும் நுழைக்கவில்லை. தான் தான் பெரியவன் என்ற முறையில் யாரும் பேசவில்லை, அதனாலோ என்னவோ யாருக்குமே கிளம்பும் எண்ணம் வரவில்லை. இரவு 10 மணிக்கு மேல் தான் அனைவரும் கிளம்பினோம். இதை போலவே பதிவுலகில் அனைவரும் போட்டி பொறாமை சாடல் தனிமனித தாக்குதல் என்று இல்லாமல் ஆரோகியமான விவாதமாக எடுத்து கொண்டால் நன்றாக இருக்குமே என்று எனக்கு தோன்றியது.

இந்த அருமையான பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்ததோடு மட்டுமல்லாமல் சந்திப்பை கலகலப்பாக வைத்து கொண்டு இருந்த கோவி கண்ணன் அவர்களுக்கு என் நன்றி.

Buzz It

Wednesday, June 11, 2008

20-20 நினைப்பில் பாக்கை பொளந்து கட்டிய இந்தியா :-)



எனக்கு என்னவோ இந்த 20-20 கிரிக்கெட் அவ்வளவா விரும்பி பார்க்க தோணல (IPL போட்டிகள்) ஊருக்கு சென்று இருந்த போது எல்லோரும் உலக கோப்பை ரேஞ்சுக்கு விரும்பி பார்த்துக்கொண்டு இருந்தார்கள். நான் கடைசி போட்டி மட்டுமே பார்த்தேன் அதுவும் ஒரு பகுதி தான். அது நம்மவர்கள் நம்மவர்களேயே எதிர்த்து ஆடியது தான். ஆனால் எனக்கு 20-20 போட்டிகள் மற்ற நாடுகளுடன் விளையாடும் போது விரும்பி பார்ப்பேன்.



ஊர்ல இந்த போட்டிகள்னால திரை அரங்குகளில் கூட கூட்டம் இல்லைனா பார்த்துக்குங்க. அந்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றி இந்த IPL போட்டிகள்.



சரி விசயத்துக்கு வரேன். முத்தரப்பு ஒரு நாள் போட்டிகள் பங்களாதேஷ் ல நடந்து கொண்டு இருக்கின்றன. நேற்று நடந்த போட்டியில் நம்மவர்கள் அடித்த அடியை பார்த்து (எப்பவாது இப்படி அடிக்கறாங்களா அதுனால ரொம்ப சந்தோசம் ஆகி விடுகிறது) இவர்கள் இன்னும் 20-20 மன நிலையில் இருந்து மீள வில்லையோ என்று நினைக்க தோன்றியது. 20 ஓவர் ல 150 ஓட்டங்கள் வந்து விட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பாக் பந்து வீச்சாளர்களை அடித்து நொங்கு எடுத்து விட்டார்கள் காம்பிர் சேவாக் யுவராஜ் மூவரும்.. இதுல சேவாக் 14 பவுண்டரி. இதில் நான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 20-20 யில் கலக்கிய யுஸுப் பதான் சரியாக விளையாடவில்லை அதே போல ஷர்மாவும். மற்றவர்கள் எடுத்த ஓட்டங்கள் இவர்கள் சரியாக விளையாடாமல் போனதை அமுக்கி விட்டது. கடைசியில் இந்தியா 330 ஓட்டங்கள் குவித்தது. கடைசி இரண்டு ஓவர்கள் சரியாக நம்மவர்கள் விளையாடவில்லை அல்லது உமர் குல் மற்றும் யூனிஸ் கான் சிறப்பாக பந்து வீசினார்கள். இல்லையென்றால் 350 ஓட்டங்கள் கிட்டே வந்து இருக்கும்.



அடுத்து விளையாடிய பாக், இந்திய அணியை பெரிதாக எதுவும் பயமுறுத்தாமல் சரணடைந்து விட்டது. முற்பகுதியில் பிரவீன் அட்டகாசமாக பந்து வீசி 4 பேரை பெவிலியனுக்கு அனுப்பினார். பிற்பகுதியில் பியுஷ்சாவ்லா கலக்கினார்.



மொத்தத்தில் நேற்று இந்தியா முன்னணி வீர்கள்!!! சச்சின், திராவிட் மற்றும் கங்குலி இல்லாமல் கலக்கி விட்டது.



போட்டி துளிகள்



இந்தியா பாக்கை முதல் முறையாக 140 ஓட்டங்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.



தன்வீர் பந்தில் தோனி சர்ச்சைக்குரிய முறையில் வெளியேறினார்.



தொடர்ந்து 12 ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்று வெற்றி நடை போட்டு கொண்டு இருந்த பாக்கை இந்தியா தன் இந்த வெற்றியின் மூலம் நிறுத்தி விட்டது. (பெரும்பாலானவர்கள் வெற்றி நடையை நாம தான் தடுக்கிறோம் போல :-D)



பாக் பந்து வீச்சாளர் வகாப், "பீமர்" முறையில் தொடர்ந்து இரு முறை பந்து வீசியதால் அவருக்கு பந்து வீச்சு நடுவரால் மறுக்கப்பட்டது, மீதியை தன்வீர் வீசினார்.



வகாப் அதிக ஓட்டங்கள் இந்தியாவுக்கு எதிராக விட்டு கொடுத்த வீரர் என்ற அவபெயரையும் பெற்றார். இவர் 9.2 ஓவரில் 89 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.



நேற்று பாக்கின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது, நிறைய கேட்சுகளை தவறவிட்டனர்.



கம்பீர் இரண்டு முறை தப்பினார் பாக் வீரர்கள் புண்ணியத்தால்.



நம்மவர்களில் பந்து வீச்சாளர்கள் பிரவீன் குமார் பியுஷ்சாவ்லா சிறப்பாக விளையாடினார்கள்.



முன்பெல்லாம் இந்தியா பாக்குடன் விளையாடுகிறது என்றால் பயங்கரமான வெறியுடன் பார்ப்பேன், இப்போது அவ்வாறு தோன்றுவதில்லை அவர்கள் மீது அவ்வளவாக வெறுப்பும் வருவதில்லை, ஏன் இந்த மாற்றம் என்று எனக்கு புரியவில்லை. ஆனால் அது இப்போது ஆஸ்திரேலியா உடன் விளையாடும் போது அவ்வாறு நினைக்க தோன்றுகிறது. அவங்களை தர்ம அடி அடிக்க வேண்டும், பேசினவன் வாயை எல்லாம் மூட வைக்க வேண்டும் என்று வருகிறது. பாக் ஆஸ்திரேலியா வுடன் விளையாடினாலும் எனக்கு பாக்கிற்க்கே ஆதரவு தர தோன்றுகிறது.



பின் குறிப்பு



இப்படி அருமையாக வெற்றி பெற்று விட்டார்கள் என்று உடனே சந்தோஷ பட வேண்டாம், அடுத்த போட்டியிலேயே கேவலமாக தோற்றாலும் தோற்பார்கள். நமக்கு இதெல்லாம் புதுசா என்ன? எத்தனை பார்த்து இருக்கோம் இதை பார்க்க மாட்டோமா :-))))))))

Buzz It

Tuesday, June 10, 2008

யாருயா! சாப்பாட்டு ராமனுக? ஜார்ஜ் புஷ் க்கு ஒரு கேள்வி படத்துடன் :-)

நம்ம!!! அமெரிக்கா ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், இந்தியா காரனுக சரியான சாப்பாட்டு ராமனுக ன்னு சொல்லி நம்மை காண்டாக்கினார் இல்லையா? இவனுக இப்படி திங்குறதுனால்தான் !! உணவு பஞ்சமே வந்து விட்டது னு அதி புத்திசாலி மாதிரி அறிக்கை விட்டார் இல்லையா? அதுனால நம்ப மின்னஞ்சல் ஜாம்பாவான்கள் இந்த படங்களை போட்டு இதுக்கு என்னய்யா பதில் சொல்லறேன்னு கேட்க்குறாங்க. எனக்கு வந்த மின்னஞ்சல் இது :-)))


பார்த்துட்டு சொல்லுங்க யாரு சாப்பாட்டு ராமனுகன்னு?


GERMANY: The Melander family of Bargteheide - 2 adults, 2 teenagers Food expenditure for one week: 375.39 Euros or $500.07

UNITED STATES: The Revis family of North Carolina - 2 adults, 2 teenagers Food expenditure for one week: $341.98


JAPAN: The Ukita family of Kodaira City - 2 adults, 2 teenagers Food expenditure for one week: 37,699 Yen or $317.25


ITALY: The Manzo family of Sicily - 2 adults, 3 kids Food expenditure for one week: 214.36 Euros or $260.11


MEXICO: The Casales family of Cuernavaca - 2 adults, 3 kids Food expenditure for one week: 1,862.78 Mexican Pesos or $189.09


POLAND: The Sobczynscy family of Konstancin-Jeziorna - 4 adults, 1 teenager Food expenditure for one week: 582.48 Zlotys or $151.27



EGYPT: The Ahmed family of Cairo - 7 adults, 5 kids Food expenditure for one week: 387.85 Egyptian Pounds or $68.53


ECUADOR: The Ayme family of Tingo - 4 adults, 5 teenagers Food expenditure for one week: $31.55


BHUTAN: The Namgay family of Shingkhey Village - 7 adults, 6 kids Food expenditure for one week: 224.93 ngultrum or $5.03


CHAD: The Aboubakar family of Breidjing Camp - 3 adults, 3 kids Food expenditure for one week: 685 CFA Francs or $1.23



யோவ்! இதுல நம்ம நாட்டு படம் எங்கேயான்னு கேட்டீங்கன்னா? ஹீ ஹீ ஹீ அதை தான் அவர் சொல்லிட்டாரே... அதனால மத்த நாட்டு படம் மட்டும். இதுல கடைசி படத்த விட்டுடுங்க, கணக்குல சேர்த்துக்காதீங்க, பாவமா இருக்காங்க அவங்க, சும்மா கோர்வைகாக இந்த படமும் வந்து விட்டது.


விவேக் சொல்லுவாரே ஒரு படத்துல, அது மாதிரி இந்த US காரனுக (அங்கே இருக்கும் நம்மவர்கள் இல்லை) சாப்பிடும் போது இருக்கும் சிந்துனது சிதறனது சாப்பிட்டாலே உகாண்டா மற்றும் ரொம்ப சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற ஆப்ரிக்கா நாடுகள்ல இருக்கிறவங்க குண்டாகிடுவாங்க. இதுல இவரு, இந்த புஷ் நம்மள சொல்ல வந்துட்டாரு?


யோவ் போய் மொதல்லா உன்னை சுத்தம் பண்ணுயா!... வந்துட்டாங்க அடுத்தவன் நாற்றம் அடிக்கிறானு சொல்ல...


பின் குறிப்பு: மேல உள்ள கணக்கு பற்றி எனக்கு தெரியாது, அதனால கணிதமேதை ராமானுஜம் மாதிரி கணக்கெல்லாம் போட்டு பார்த்து, அதெப்படி அவ்வளோ செலவு வரும் அப்படின்னு எல்லாம் சிறு பிள்ளை தனமா கேட்க கூடாது :-))) பதிவ படித்தா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது :-)))))

Buzz It

Saturday, June 07, 2008

ஜூன் மாத புகைப்பட போட்டிக்கு நம்ம சார்பா

எல்லோரும் அந்த போட்டி இந்த போட்டின்னு கலந்துக்காறாங்களே, நாமளும் கலந்துப்போம்னு பார்ப்பேன் அந்த சமயத்தில் போட்டியே முடிந்து போய் இருக்கும். இந்த முறை உஷாரா இருந்து நம்ம விண்ணப்பத்தை போட்டு விட்டேன்.


கடந்த முறை ஊருக்கு சென்ற போது எடுத்த படம். எதோ தம்பி நம்மள போட்டா புடிக்குதேன்னு கூர்ந்து கவனிக்கும் ஒரு வயதான விவசாயி :-) அருகில் இரை தேடும் கொக்குகள்.



Buzz It

Friday, June 06, 2008

காவலர் பதவியில் சேரும் முன்பு சேர்ந்த பின்பு :-)

நம்ம ஊர்ல கணிப்பொறி துறையில் அதிக பணம் வருகிறது என்று அதை படிக்க துடிக்கும் பெரும்பாலான மக்கள் இருந்தாலும், காவலர் பதவியில் சேர எப்போதும் கடும் போட்டி இருக்கும். எப்போது தேர்வு நடந்தாலும் 1000 கணக்கில் இளைஞர்கள் மற்றும் தற்போது இளைஞிகளும் கூடுகிறார்கள்.


பொதுவாக நடுத்தர மக்களே காவலர் பதவிக்கு வருகிறார்கள். சேரும் முன்பு தினமும் கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என்று தங்களை வருத்தி உடம்பை கட்டுமஸ்தாக வைத்து இருப்பார்கள். தேர்வில் தேர்வாகி சேர்ந்த பிறகு கொஞ்ச நாள் கடுமையான பயிற்சி இருக்கும், உங்க வீட்டு எங்க வீட்டு கண்டிப்பு இல்லைங்க படு பயங்கரமா பயிற்சி இருக்கும். நம்மவர்களும் தன்னை அன்புசெல்வன் IPS அளவுக்கு நினைத்துக்கொண்டு தங்கள் முழு ஈடுபாட்டை காட்டுவார்கள். பயிற்சி முடிந்து வேலையில் சேர்ந்த பிறகு கொஞ்ச நாள் "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜான்னு" சும்மா முறுக்கிட்டு இருப்பாங்க.


அப்புறம் அங்கே இருக்கும் மூத்த காவலர்கள், தம்பி இந்த மாதிரி எல்லாம் நாங்களும் தான் இருந்தோம், அப்புறம் எங்க கதையே மாறி விட்டது என்று ஆரம்பத்துலேயே அவங்க நிலைமைய புரிய வைத்து விடுவாங்க. நம்ம ஆளுங்க பலவித எதிர்பார்ப்புல வந்து இப்படி சப்புனு ஆகி போச்சேன்னு கொஞ்ச நாள் சோகமா இருந்துட்டு அப்புறம் மற்றவர்களை போல் நடைமுறைக்கு தாவி விடுவார்கள், படத்தில் இருப்பது வேறு நிஜப்பதில் இருப்பது வேறு என்று மனதை தேற்றி கொள்வார்கள். அப்புறம் அப்பாவியை மிரட்டுவது, லஞ்சம் வாங்குவது, ஊரெல்லாம் எமாத்துரவனை விட்டுட்டு சிக்னலில் மஞ்சள் கோட்டை தாண்டியவனை, நாட்டின் எல்லை கோட்டையே தாண்டியது போல் கருதி அவனை நொங்கு எடுப்பது, மாத கடைசியில் "மட்டும்" போக்குவரத்து விதிகளை சரியாக கடை பிடிப்பது என்று "மாமூல்" வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள். பிறகு தான் முழு காவலராக அவர் அறிய படுகிறார், அதாவது தற்போது தான் சரியான பயிற்சி முடிந்து வெளியே வருகிறார் :-))


ஒரு சில நேர்மையான காவலர்களும் இருக்க தான் செய்கிறார்கள், இல்லையென்று யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அவர்கள் அவ்வாறு இருப்பதால் அவர்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது. இதை போல் இருப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுவது மாற்றல் என்ற ஆயுதத்தால், பாவம் ஊர் ஊராக சுத்தி, பிள்ளைகளை வருடம் ஒரு மாவட்டத்தில் படிக்க வைத்து மனைவியிடம் திட்டு வாங்கி காலத்தை ஓட்ட வேண்டி உள்ளது. காவலர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது எப்போது கூப்பிட்டாலும் வர வேண்டும். சம்பளமும் மிக குறைவு, இதுவும் இவர்கள் லஞ்சம் வாங்குவதற்கு ஒரு காரணம். வேலை பளுவும் அதிகம், 8 மணி நேர வேலை எல்லாம் கிடையாது அதுவும் ஜனாதிபதி பிரதமர் வராங்கன்னா கொடுமை தான் அவர்களுக்கு.


இவ்வாறு சில நிறை பல குறைகள் இருந்தாலும் காவலர்களுக்கு கொடுக்கப்படும் பயமும் மரியாதையுமே இந்த பதவிக்கான மதிப்பை உயர்த்தி காட்டுகிறது.


சரி விசயத்துக்கு வருகிறேன். இங்கே கீழே உள்ள படத்தில் காவலர் தேர்வுக்கு வந்த ஒருவர் எப்படி வயிற்றை எக்கி நெஞ்சை நிமிர்த்தி (மார்பை விரித்து) வேலையில் சேர துடிக்கிறார் பாருங்க.


கீழே கொடி பிடித்தது இருக்கும் மூத்த காவலரை பாருங்க, அவர் ஒரு பக்கம் இருக்காரு அவர் தொப்பை ஒரு பக்கம் இருக்குது. சேரும் முன்பு கடுமையான உடற்பயிற்சி செய்து கட்டுமஸ்தாக இருந்தவர்கள், அதன் பிறகு அவ்வாறு இல்லாததால் தான் தொப்பை தள்ளி இப்படி ஆகிவிடுகிறார்கள். கொடியை என்னமோ குச்சி ஐஸ் பிடித்துட்டு இருக்கிற மாதிரி நிற்கிறார் :-)

அவர் தேர்வுக்கு வந்த நபரை பார்த்து இப்படி தான் நினைத்து இருப்பாரு "எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்" :-))))

Buzz It

சின்ன கோடம்பாக்கம் "கோபி" வயல்வெளி காட்சிகள்

என் இனிய தமிழ் மக்களே (பாரதிராஜா குரலில் படிக்கவும்) பெட்ரோல் புகையையும் தொழிற்சாலை புகையையும் சுவாசித்து, ஜன திரளில் நீந்தி இயந்திரமாக உழைத்து கொண்டு இயந்திரமாகவே மாறி இருக்கும் நகரத்து மக்களே உங்களை என் கிராமத்துக்கு அழைத்து செல்ல இட்ட பதிவே இது.


முதலில் போட்ட பதிவை படித்து நண்பர் சிவா என் வீட்டை பற்றி ஒரு கவிதையே இயற்றி விட்டார். அதில் இருந்த புகைப்படங்கள் தூரமாக எடுக்கப்பட்டு இருந்ததால் அதில் இருந்த கருங்கற்கள் தெரியவில்லை. சரி நான் சொன்னதை நம்பாதவர்களுக்காக இந்த இரு புகை படங்கள்.


இதில் கருங்கற்களில் வடிவமைக்கப்பட்ட என் வீடு இது. இவ்வகை கட்டிடங்கள் பழைய கோவில்களில் மட்டுமே காணப்படும். இப்போதெல்லாம் இவ்வாறு கட்டுவது என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாது, அதற்கு அவசியமும் இல்லை. செலவும் அதிகம், இப்போது யாரும் இதை விரும்புவதில்லை. இதில் என்ன விஷேசம் என்றால் இவை அனைத்தும் கொக்கி கற்கள், ஒரு கல்லை எடுத்தால் கூடவே இன்னொரு கல்லும் வரும், எனவே இதை மாற்றி அமைக்க முடியாது. இடிப்பதும் மிக சிரமம்.


வீடு நீளமாக இருப்பதால் குழந்தைகளுக்கு விளையாட கொண்டாட்டம், ஆனால் என் அம்மாவுக்கு இதில் நடந்து நடந்து முழங்கால் வலியே வந்து விட்டது.

சிறு ஓடையில் வயலுக்கு சலசலத்து செல்லும் தண்ணீர்


கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி நம்ம விவசாயி, நிலத்தை உழுது கொண்டு இருக்கிறார். எவனோ! நம்மள "போட்டா" புடிக்கறானேன்னு வெய்யிலை மறைத்து கண்ணை சுருக்கி கை வைத்து பார்க்கிறார். அருகில் கொக்குகள் மண் புழுவை எடுக்க உட்கார்ந்து கொண்டு இருக்கின்றன

உழுது முடித்த பிறகு

இந்த படம் என்னவென்றால், நீங்கள் நெல் நடுவதை படங்களில் பார்த்து இருப்பீர்கள் ஆனால் இதை பார்த்து இருக்க மாட்டீர்கள், இதன் பெயர் நாற்றங்கால் அதாவது விதை நெல்லை போட்டு இப்படி நெருக்கமாக பயிர் (நெல்) வளர்ப்பார்கள், பிறகு இதை பிடுங்கி நடுவதை தான் நீங்கள் திரை படங்களில் பார்த்து இருப்பீர்கள்

இவ்வாறு பிடுங்கப்படும் நெற்பயிர்கள் கட்டு கட்டாக கட்டப்பட்டு இவ்வாறு நட தயாராக இருக்கும் பாத்தியில் (நிலத்தில்) போடப்படும்

கையில் வைத்து இருக்கும் நெற்பயிர் கட்டுகளில் இருந்து நடும் எம் குல பெண்கள்.

நடவு முடிந்த பிறகு அழகாக காட்சி அளிக்கும் நிலம்

இந்த விவசாயி எங்கள் வயலில் எனக்கு தெரிந்து 20 வருடத்திற்கும் மேலாக வேலை செய்கிறார், உழைக்க வயது ஒரு தடையில்லை என்று உழைப்பின் அருமையை நமக்கு உணர்த்தும் இந்த கடின உழைப்பாளி ஒய்வு எடுப்பதை பற்றி சிந்திக்கவே இல்லை.

இது ஒரு ஓடை

வருடத்தில் 10 மாதங்கள் இந்த வாய்க்காலில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும். சிறு வயதில் பாலத்தின் மீது இருந்து குதித்த நினைவுகள். அது ஒரு கனாக்காலம்

இந்த மரம் மீது ஒரு அழகான பறவை உட்கார்ந்து இருந்தது நான் புகைப்படம் எடுக்கும் முன்பு பறந்து விட்டது, ஆனாலும் இந்த மரம் அழகாக இருப்பதாகவே தோன்றியதால் ஒரு கிளிக்

இங்கு மட்டும் ஏகப்பட்ட திரை படங்கள் எடுத்து இருக்கிறார்கள். சரத்குமார் க்கு மிக பிடித்த ஊர் கோபி. நீங்கள் நட்புக்காக படம் பார்த்து இருந்தீர்கள் என்றால் அதில் சிம்ரன் வெளி நாட்டில் தங்கி படித்து ஊர் திரும்புவார் அப்போது அவரை கூட்டி வர அனைத்து ஊர்களுக்கும் கார் அனுப்புவார்கள் விஜயகுமாரும் சரத்குமாரும், சரத் குமார் ஒவ்வொரு ஊர் பெயராக சொல்லி வருவார் அங்கே அனுப்பியாச்சா என்று கேட்டு...கடைசியாக ஏனுங்க நம்ம கோபி ன்னு சொல்லி முடிப்பார். அந்த அளவுக்கு ரொம்ப பிரியம், பலருக்கு உதவிகளும் செய்து இருக்கிறார்.


கோபியில் எமரால்ட் ஹௌஸ் என்ற விடுதி உள்ளது இங்கே தான் பெரும்பாலான திரை நட்சத்திரங்கள் தங்குவார்கள். இங்கே குஷ்பூக்கு என்று நிரந்தர அறை உள்ளது, எப்போது வந்தாலும் அங்கே தான் தங்குவதாக கூறுவார்கள். என் அண்ணன், அம்மா கிரியேசன்ஸ் சிவா அவர்களின் நண்பர் என்பதால் எனக்கு பல செய்திகள் கிடைக்கும். என் திருமணத்திற்கு வந்த என் நண்பர்கள் குஷ்பூ இருந்த அறையில் தான் தங்குவேன் அந்த படுக்கையில் தான் படுப்பேன் !!! என்று என்னை ஒரு வழியாக்கிய கதை உண்டு :-))) சும்மா தமாசுக்கு தாங்க ;-)


கீழே உள்ள அசோக மரங்கள் நிறைந்த இந்த பாதையில் ஏகப்பட்ட பாடல்கள் எடுக்கப்பட்டுள்ளன. நம்ம கேப்டன் கண்ணுபடபோகுதையா படத்தில் பாடுவாரே "மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு" னு அது இந்த இடம் தான், மற்றும் பல திரைப்படங்களில் வந்துள்ளது. சத்யராஜ் ,கேப்டன், கார்த்திக், சரத் குமார் படங்கள் இங்கே கணக்கு வழக்கு இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளது.

பாம்பு போல வளைந்து நெளிந்து செல்லும் பாதை உடன் வரும் அசோக மரங்களும். இதில் வண்டியில் செல்லும் போது அப்படி ஒரு அற்புத அனுபவமாக இருக்கும். இந்த பகுதியில் செல்லும் போது சாலை மட்டுமே கறுப்பாக இருக்கும் சுற்றியும் பசுமை சூழ்ந்து எங்கு காணினும் பச்சை நிறமே கண்ணில் தெரியும். சில நேரங்களில் எனக்கு மிக ஆச்சர்யமாக இருக்கும் மற்றும் பெருமையாக இருக்கும் என் ஊரை நினைத்து.


ஒரு தூர காட்சி புகைப்படம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை இதே போலவே இருக்கும். இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் ஏன் இங்கே திரைப்படங்கள் எடுக்க அனைவரும் வருகிறார்கள் என்று. தற்போது எல்லோரும் லண்டன் சுவிஸ் னு போயிடறாங்க. சமீபத்தில் நம்ம தலைவர் குசேலன் படம் பொள்ளாச்சியில் எடுத்தார்கள். அங்கேயும் இதை போல அருமையாக இருக்கும்

இது தாங்க கிராமத்து நீச்சல் குளம். அட! கிணற்றை தான் அப்படி சொன்னேங்க .. தண்ணீர் வாய்க்காலில் நிறைந்து இருப்பதால் அனைத்து கிணறுகளும் நிரம்பி வழிகிறது. நான் மாற்று துணி எடுத்து வர மறந்துட்டேன் இல்லைனா இந்நேரம் ஒரு பல்டி, டைவ் சொருகல் னு அங்கே ஒரு ரணகளமே நடந்து இருக்கும். கிணற்றின் மேலே இருக்கும் தொட்டியை போல 5 மடங்கு உயரம் கொண்ட இடத்தில் இருந்து கத்தி கொண்டே குதிப்பேன்.

மேலே உள்ள படங்கள் உங்களுக்கு பிடித்திருக்கும் என்றே நம்புகிறேன். என்ன தான் சிங்கப்பூர் 360* சுத்துனாலும், வானாளாவிய கட்டிடங்களை பார்த்தாலும் இங்கே கிராமத்தில் கிடைக்கும் ஒரு மன நிறைவுக்கு இணை எதுவுமில்லை. எங்கே சென்றாலும் இன்னும் கோபி யில் இருப்பதையே விரும்புகிறேன். கோபி சுத்தமான நகரம் , அகலமான சாலைகள், வரிசையாக அழகாக இருக்கும் கடைகள், நாகரிகமான மற்றும் அன்பான மக்கள் என்று என் மனதில் சிம்மாசனம் போட்டு இருக்கும் இடம் கோபி மட்டும் தான். கோபிக்கு இன்னொரு பெருமை உண்டு ICICI வங்கி சென்னைக்கு பிறகு தமிழகத்தில் தொடங்கிய இரண்டாவது கிளை கோபி என்பது பலருக்கு தெரியாத ஒன்று.

Buzz It