குசேலன், குசேலுடு படப்பிடிப்பு தொடங்கியது

by கிரி on March 17, 2008

kucheludu குசேலன், குசேலுடு படப்பிடிப்பு தொடங்கியது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் குசேலன் மற்றும் குசேலுடு (தமிழ் மற்றும் தெலுகு) படப்பிடிப்பு ஆந்தராவில்தொடங்கியுது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, வெங்கடேஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தனர்.

சிரஞ்சீவி குறிப்பிடும் போது எனக்கு சமீப காலத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் மனம் வருந்தி இருந்தேன், அந்த நேரத்தில் ரஜினி தான் எனக்கு ஆறுதல் கூறியதோடு ஒரு நாள் முழுவதும் சென்னையில் என்னை அவருடைய வீட்டிலேயே தங்க வைத்து என்னுடனே இருந்து என்னை அந்த நிலையில் இருந்து மாற்ற உதவினார். அவருடன் தீபாவளி முழுவதும் அவருடைய வீட்டிலேயே இருந்தேன். ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று, ஆனால் அவர் ஒரு சிறந்த மனிதர் என்பது அவரை புரிந்து கொண்டவர்களுக்கு தெரியும்.

ரஜினி பேசும் போது தெலுங்கு படவுலகு எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று. இங்கே நான் தொடர்ந்து நடிக்கலாமா வேண்டாமா என்று குழம்பிய நிலையில் இருந்தேன், அப்போது என்னுடைய நண்பர் மோகன் பாபுவிடம் கேட்டேன், அவர் இங்கு திரைத்துறையில் அரசியல் அதிகம் அதனால் நீ தமிழ் லேயே இரு, என்றார்.. பிறகு தான் தெரிந்தது தன்னுடைய நிலையை காப்பாற்றிக் கொள்ளவே அவ்வாறு கூறினார் என்று..இவ்வாறு நகைச்சுவையாக குறிப்பிட்டார், ரஜினி பேசும் போது தெலுங்கு மொழியிலேயே பேசினார்.

தெலுங்கு படத்தில் பசுபதி கதாபாத்திரத்தில் ஜெகபதி பாபு நடிக்கிறார். சிரஞ்சீவி கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இந்த படத்தில் 5 பாடல்கள், ஒரு பாடல் ரஜினியின் ஓபனிங் பாடல், இன்னொன்று படத்தில் நடிகராக வரும் ரஜினியும் நடிகையாக வரும் நயன்தாரா நடிக்கும் பாடல், மற்றொன்று சோகமான பாடல், அடுத்தது வடிவேல், பாஸ்கர், லிவிங்க்ச்டன் மற்றும் பசுபதி இணைந்து கிராமத்தில் பாடும் பாடல். ஐந்தாவது பாடல் கிளைமாக்ஸ் சிறப்பு பாடல். ஆனால் ஒரிஜினல் படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இருக்கிறது.

No related posts.

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed