கமல் ரசிகர்களுக்கு சோகமான செய்தியாக தசாவதாரம் படம் வெளியீடு தள்ளிபோடப்பட்டு உள்ளதாக ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறி உள்ளார். உலகமே தசாவதாரம் படத்தை எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறது, கடந்த பொங்கலுக்கு வெளி வந்து இருக்க வேண்டிய படம் இப்போது தள்ளி தள்ளி சென்று ஒரு வழியாக ஏப்ரல் 10 ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பாடல் ஜாக்கி சானால் ஏப்ரல் 2 ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது, அனைவரும் பாடல் வெளியீட்டிற்கும் பட வெளியீட்டிற்கும் குறைந்த அளவே இடைவெளி உள்ளது என்று கூறி கொண்டு இருந்தார்கள், இது படத்தின் வெற்றியை பாதிக்கும் என்று கூறினார்கள்.
இப்பொழுது ரவிச்சந்திரன் ஜாக்கிசான் தேதி கிடைக்காததால் மற்றும் கிராபிக்ஸ் வேலைகள் பாக்கி உள்ளதால் வெளியீடு தள்ளிப்போவதாக கூறி உள்ளார். வெளியீடு தேதி தள்ளி போய் கொண்டே இருப்பது அனைவரையும் கவலை கொள்ள வைத்து உள்ளது.
ஏப்ரல் 18 ம் தேதி இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் துவங்குவதால், இது கண்டிப்பாக தசாவதாரத்தின் வெற்றியை பாதிக்கும் என்று கருதப்படுகிறது. சோனி மாக்ஸ் இப்பொழுது இருந்தே விளம்பரங்களை போட்டு தாக்கி வருகிறது. எனவே இப்படம் மே மாதம் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. மே மாதத்தில் குருவி படம் வெளியாகிறது. எனவே போட்டிகளுடனே வெளியாகும்.
ரவிச்சந்திரன் ஜாக்கிசானுக்காக தாமதம் செய்கிறார் என்றால் அதை ஏற்று கொள்ளவே முடியவில்லை. கமலின் கடுமையான உழைப்பில் வெளியாகும் படம் இவரின் வெளியீட்டில் தான் நன்றாக போகப்போகிறதா? விளம்பரத்துக்காக என்றால் அதை இந்தியாவில் உள்ள பிரபலமான நபரை வைத்தே வெளியிடலாமே? ஜாக்கிசானுக்கு கமலை பற்றி என்ன தெரியும்? அவருக்காக திரும்பவும் தள்ளி வைப்பது கமலை அவமானப்படுத்துவதாகவே உள்ளது.
இதில் மிகப்பெரிய ஆச்சர்யம் பட இயக்குனர் K.S. ரவிக்குமார் இந்த படத்தை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது. கமலாவது அப்பப்ப பேட்டி கொடுத்தார். ஒரு வேளை படம் வெளிவந்ததும் படம் பேசும் என்று நினைத்துவிட்டாரோ. எதுவாகினும் இதற்க்கு மேலும் படத்தை வெளியிட தாமதம் செய்யாமல் வெளியிட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
No related posts.
