Monday, March 31, 2008

சென்னை உஸ்மான் சாலை மேம்பாலம் திறக்கப்பட்டது - படங்கள்

சென்னை தியாகராய (டி) நகர் வடக்கு உஸ்மான் சாலை - மகாலிங்கபுரம் சாலை புதிய மேம்பாலம் ஒரு வழியாக திறக்கப்பட்டது. நீண்ட நாட்களாக கட்டப்பட்டு, பொது மக்களை பல வழிகளில் சுற்றி வர செய்த மேம்பால பணி விரைவில் !!! திறக்கப்பட்டது அதிசயமே! நான் கூட இன்னும் 6 மாதம் ஆகுமோ என்று இருந்தேன்.



எனக்கு ஒன்று புரியவே இல்லைங்க! மக்களுக்கு இதை கட்டி முடிக்கும் வரை கடும் இடைஞ்சல் என்று தெரியும், அதனால் அதற்கு தகுந்த மாதிரி முன்பே எல்லா திட்டங்களையும் தீட்டி, நிதியை ஒதுக்கி பிறகு ஆரம்பித்து விரைவாக முடிக்க வேண்டியது தானே , பாதி கட்டிய பிறகு நிதி பற்றவில்லை, அனுமதி கிடைக்கவில்லை என்று கால தாமதம் செய்து மக்களின் பொறுமையை சோதித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த பாலம் கட்டும் வரை அந்த பகுதியில் வசித்த மக்கள் பட்ட போக்குவரத்து சிரமங்கள் சொல்லி மாளாது. இதை எல்லாவற்றையும் விட கொடுமை கிண்டி மேம்பாலம் அதை பற்றி எழுதினால் ஒரு கட்டுரையே போடலாம், அந்த பகுதியில் இருந்து வரும் மக்கள் ரத்த கண்ணீர் வடித்து தினமும் அலுவலகம் வருகிறார்கள்,அதுவும் மழை என்றால் சொல்லவே வேண்டாம். எனவே அரசு இதை போன்ற முக்கிய இடங்களில் பாலங்களை கட்டும் போது விரைவாக முடிக்கும் படி திட்டங்களை போடுவது மக்களின் பாராட்டுதலை பெற வழி வகுக்கும். இது எல்லாம் நம்ப ஊர்ல நடக்க கூடிய காரியமா? என்று கேட்கிறீர்களா... ;)




மேலே உள்ள படம் படி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இது சோதனை அடிப்படையிலேயே உள்ளது, நிரந்தரமானது அல்ல.

Buzz It

3 COMMENTS:

SP.VR. SUBBIAH on 2:28 PM, March 31, 2008 said...

நல்ல பதிவு நண்பரே!

GIRIRAJ on 5:46 PM, March 31, 2008 said...

தங்கள் வருகைக்கும் பதிவுக்கும் ரொம்ப நன்றி

தஞ்சாவூரான் on 7:28 PM, March 31, 2008 said...

நல்ல பதிவு. தகவலுக்கு நன்றி!