கடந்த சில மாதங்களாக செல்போன் நிறுவனங்களின் போட்டிகளினாலும், உபயோகிப்பாளர்களின் உயர்வினாலும் கட்டணம் குறைந்து வருகிறது. இப்போது வாடிக்கையாளர்கள் மேலும் மகிழ்ச்சி அடையும் விதமாக தொலை தொடர்புத்துறை ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான பி எஸ் என் ல் லின் உள்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் கிராமப்புறங்களில் சேவைகளை வழங்கி வருகின்றன. இதற்க்கு தனியார் நிறுவனங்கள் பி எஸ் என் ல் க்கு தங்களது மொத்த வருவாயில் 0.75 சதவீதத்தை கட்டணமாக செலுத்தி வருகின்றன, இதற்க்கு அச்செஸ் டெபாசிட் சார்ஜ் (ADC) என்று பெயர்.
இந்நிலையில் ஏப்ரல் 1 ம் தேதியில் இருந்து இந்த கட்டணத்தை செலுத்த தேவை இல்லை என்று தொலை தொடர்புத்துறை ஒழுங்கு முறை ஆணையம் (TRAI) தெரிவித்துள்ளது. இது உள்ளூர் மற்றும் எஸ் டி டி அழைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த அறிவிப்பின் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு 600 கோடி மிச்சம் ஆகிறது. இதை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு உள்ளூர் மற்றும் எஸ் டி டி அழைப்புகளுக்கு கட்டணங்களை குறைக்க முன் வந்துள்ளன.
இதுகுறித்து ஏர்டெல் கூறுகையில் இதன் மூலமாக கிடைக்கும் பலனை கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடிவுசெய்துள்ளோம்.
வோடாபோன் நிறுவனமும் கட்டண குறைப்பை அமுல்படுத்த போவதாக கூறி உள்ளது, டாடா இண்டிகா நிறுவனமும் இதையே கூறி உள்ளது.
தனியார் நிறுவனங்கள் கட்டண குறைப்பை அமுல்படுத்த போவதால் பி எஸ் என் ல் நிறுவனமும் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே விரைவில் செல்போன் கட்டண அறிவிப்பை அனைத்து நிறுவனங்களும் அறிவிக்க உள்ளது.
No related posts.
{ 1 comment… read it below or add one }
Voice calls full-a free-a iruntha nalla irukum doeyyyyy……