கோடையில் வெளுத்து வாங்கும் மழை!

by கிரி on March 22, 2008

kutralam கோடையில் வெளுத்து வாங்கும் மழை!
nel கோடையில் வெளுத்து வாங்கும் மழை!

வங்க கடலில் ஏற்பட்டு இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாடு முழுவதும் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால தமிழ்நாடு முழுவதும் மழை வெளுத்து வாங்குகிறது, பருவம் தவறி மழை பெய்வதால், இதை எதிர்பார்க்காத விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடனை வாங்கி பயிர் செய்த நெல் அறுவடைக்கு தயாரான நிலையில் அனைத்தும் மழையால் பாதிக்க பட்டதில் நஷ்டம் அடைந்த விவசாயிகள் கண்ணீர் விட்டுக்கொண்டுள்ளனர்.

மழையோ வறட்ச்சியோ பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். இவர்களுக்கு கிடைக்கும் இலாபமே மிக குறைவு, அதிலும் இதை போல் மழையால் பாதிக்கப்படுவதால் கடன் மேல் கடன் வாங்கி வறுமையில் உழன்று கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு கொடுக்கப்படும் அரசு சலுகைகளே இவர்களை இதுவரை காப்பாற்றி கொண்டு வந்துள்ளன.

குற்றாலத்தில் மழையால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. எதிர்பாரத நீர்வீழ்ச்சியால் பொது மக்கள் சந்தோசமடைந்துள்ளனர்.

இதே போல கோடை மழை சென்னையில் 1997 வருடம் பெய்தது. அப்போது சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது, இன்னும் ஒரு நாள் மழை பெய்தாலும் சென்னையே பெரும் பாதிப்பை சந்திக்கும் என்ற நிலையில் மழை நின்று நிம்மதி கொடுத்தது. கீழ் தளத்தில் இருந்த வீடுகள் அனைத்தும் நீரில் மூழ்கியது, அதன் பிறகு கீழ் தளத்தில் வீடு பார்ப்பது என்றாலே அனைவருக்கும் பயத்தை கொடுத்தது. அது இன்றும் கூட ஒரு சில இடங்களில் தொடர்கிறது.மழை பெய்தாலும் பிரச்சனை பெய்யவில்லை என்றாலும் பிரச்சனை. இயற்கை ஒன்று தான் மனிதனை அவ்வப்போது மிரட்டி கொண்டு தன்னுடைய பலத்தை உணர்த்திக்கொண்டு இருக்கிறது. இயற்கையை நாம் அழித்து கொண்டு இருக்கும் வரை இதை போல நிகழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

No related posts.

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed