இந்தியாவை சேர்ந்தவர் சரப்ஜித், இவர் 1992 ம் ஆண்டு பாகிஸ்தானில் குண்டு வைத்ததாக பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர். இவரை விடுதலை செய்ய கூறி இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் நீண்ட நாட்களாக போராடி வருகிறார்கள், இந்தியா அரசும் இதற்காக பல நடவடிக்கைகளை எடுத்தது, ஆனால் பாகிஸ்தான் அரசு பதில் எதுவும் சொல்லாமல் தண்டனை காலத்தை நீட்டித்துக்கொண்டு இருக்கிறது. இப்போது இவரது தூக்கு தண்டனை 2008 ஏப்ரல் 1 ம் தேதியில் இருந்து 30 ம் தேதிக்கு மாற்றி வைத்து உள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் அரசு அவர் தவறு செய்து இருந்ததாக கருதினால், தண்டனையை மாற்ற முடியாது என்ற நிலையில் திட்டவட்டமாக இருந்தால் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லை மன்னிப்பு கொடுக்கலாம் அல்லது அவர் மீதான குற்றம் சரிவர நிரூபிக்கப்படவில்லை என்று கருதினால் விடுதலை செய்ய வேண்டும்.
இதில் எதையுமே செய்யாமல் இப்படி இழுத்தடிப்பதால் அவரை கொல்கிறார்களோ இல்லையோ, அவருடைய குடும்பத்தை மற்றும் அவர்களுடைய எதிர்பார்ப்புகளை தினமும் கொன்று கொண்டு இருக்கிறார்கள். சரப்ஜித் தண்டனை அனுபவிக்கிராரோ இல்லையோ இவருடைய மனைவி தினமும் செத்து செத்து பிழைத்துக்கொண்டு இருப்பார் அவர் வருவாரா மாட்டாரா என்று எந்த முடிவும் தெரியாமல். இந்தியா அரசோ அல்லது பாகிஸ்தான் அரசோ அவர்களுக்கு இவர் மற்ற கைதிகளில் ஒரு கைதி, ஆனால் இவருடைய குடும்பத்தினருக்கு இவர் தான் குடும்ப சொத்து. இவர் ஏற்கனவே 15 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டார். 15 ஆண்டுகளாக எந்த முடிவும் தெரியாமல் ஒரு குடும்பத்தினர் இருக்கின்றனர் என்றால் அதை விட கொடுமையான விஷயம் எதுவும் இல்லை, அதுவும் உயிருடன் கிடைப்பாரா மாட்டாரா என்று.
எனவே அரசுகள் தகுந்த முடிவு எடுத்து மேலும் இழுத்தடிக்காமல் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதே அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று.
No related posts.